Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு கிழக்கு இணைப்பை இந்தித் தரப்பு வற்புறுத்தும்.

Featured Replies

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்துக்கான அமைத்தித் தீர்வு இன்னது தான் என்று புதுடில்லி வெளிப்படுத்தாது. ஆனால் வடக்கு, கிழக்கு இணைப்புத் தொடர்பாக அந்த மக்கள் ஜனநாயக ரீதியில் தமது முடிவைத் தெரிக்கக்கூடிய காலம் கனியும் வரை வடக்கு, கிழக்கு மாகாணம் நிர்வாக ரீதியாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையும், உத்தேச அதிகாரப் பகிர்வுத் திட்டம் அரசமைப்பின் 13வது திருத்ததுக்கு அப்பால் செல்ல வேண்டும் என்பதையும், புதுடில்லி இராஜதந்திர ரீதியிலும் மட்டத்திலும் தொடர்ந்த வலியுறுத்தும்.

விடயமறிந்த வட்டாரங்கள் இந்தத் தகவலை வெளியிட்டன.

இந்தியத் தரப்பு இலங்கை இனப் பிரச்சினை விவகாரம் தொடர்பாகத்த தமிழர் பிரதிநிதிகள் உட்பட பல தரப்பினருடனும் தொடாந்து கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றது.

அண்மையில் இந்தியா விஜயம் செய்த முக்கூட்டணியினர் டில்லி சென்று அங்கு அரசியல் தலைவர்களுடன் இலங்கை இனப்பிரச்சினை குறித்து விரிவாகப் பேட்டி நடத்தினர்.

சில தினங்களுக்கு முன் கொழும்பில் இந்தியத் தூதுவரையும் அவர்கள் சந்தித்துப் பேசியுன்ளனர்.

இதே சமயம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் இந்தியத் தரப்புடன் பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்து இலங்கை ஜனாதிபதியுடன் பிரஸ்தாபித்து வருகின்றார். இது குறித்து புதுடில்லி வட்டாரங்களுடன் தொடர்புள்ள தரப்புகளிடம் கருத்துக் கேட்ட போது அவை தெரிவித்த தகவல்கள் வருமாறு :-

இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்யயப்பட்டும் அரசமைப்பின் 13வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டும் இருபது வருடங்கள் கடந்து விட்டன. அவை பழைய விடயங்கள். அவற்றைக் கொடுத்து இன்றைய நிலையைச் சீர் செய்து விட முடியாது. அவை இன்றைய நிலையில் போதுமானவையல்ல.

இந்த இரண்டுடனும் சேர்த்து மேலும் எதைக் கொடுக்கக் கொழும்பு தயார் என்பது தான் இன்றைய கேள்வி. காலம் கடந்து விட்டால் அதை ஒழுங்குபடுத்த மேலும் ஏதும் கொடுத்தாக வேண்டும். அந்த பளஸ் என்னவென்பது தான் வினா.

புலிகளை விட்டுவிடாலம், ஏனைய தமிழ் ஆயுதக்:குழுக்கள் இந்தியாவை நம்பித்தான் தமது ஆயுதங்கைளக் கைவிட்டன. அவற்றையாவது திருப்பதிப்படுத்த கொழும்பு என்ன செய்யப் போகின்றது என்பது தான் புதுடில்லியின் பிரதான கேள்வி. அந்த அமைப்புக்கள் வடக்கு கிழக்கு இணைப்பை வற்புறுத்துகின்றன. எனவே இந்த நிலையை நம்பி ஆயுதங்ககைளக் கைவிட்ட தமிழ்க் குழுக்களைத் திருப்பதிப்படுத்தும் ஒரு தீர்வுக்காவது ஆகக் குறைந்தது கொழும்பு வரவேண்டும். அப்போது தான் அது புதுடில்லிக்கு ஏற்புடையதாக இருக்கும்.

எனவே, ஜனநாயக வழிக்குத் திரும்பிய தமிழக் குழுக்களின் அபிலாஷைகளை விருப்பை நிறைவு செய்யும் சரியான ஒரு திட்டத்தையாவது குறைந்தது கொழும்பு முன்வைக்க வேண்டும்.

இருபது வருடங்களுக்கு முந்திய நிலைப்பாடு இப்போது பிரச்சினை இவ்வளவு விஸ்வரூபம் எடுத்த பினனர் தீர்ப்பதற்குப் போதுமானதல்ல.

13வது அரசமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது இந்தியாவின் விருப்பை நிறைவு செய்யும் செற்பாடு என்று வெளிப்படுத்திக் கொள்வதிலும் அர்த்தமில்லை. அப்படிச் செய்யுமாறு இந்தியா கேட்கவுமில்லை. செய்ய வேண்டாம் என்று கூறவுமில்லை.

அத்தகைய முடிவை கொழும்பு எடுத்தால் அது அதன் தீர்மானமேயன்றி புதுடில்லியின் இப்போதைய வழிகாட்டலில் அல்லது ஆலோசனையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் என யாரும் அர்த்தப்படுத்துவது தவறாகும்.

இவ்வாறு பெயர் குறிப்பிட விரும்பாத அந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

நன்றி சுடர் ஒளி

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழரின் ஒன்றுபட்ட கருத்தினைச் சிதடிப்பதற்காக அவ்வப்போது இந்தியா அல்லது அதன் அடிவருடிகளால், கசிந்த செய்திகள் என்ற போர்வையில் திட்டமிட்டு வெளிவிடப்படும் குப்பை இது என்று தெரிகிறது. பெயர் குறிப்பிட விரும்பாத வட்டாரங்கள் விடும் செய்திகள் எதையும் நாங்கள் நம்பத் தயாரில்லை. இந்தியா இந்தமுறையும் ஆப்பை இழுப்பேன் என்று அடம்பிடித்தால் இருக்கவே இருக்கிறது....... மருந்து.

வடக்கு கிழக்கு இணைப்பை இந்தித் தரப்பு வற்புறுத்தும். :D:(:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரதராஜபெருமாள் முதலமைச்சர் போல இருக்கு. டக்லஸ் பாடு அம்போ தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.