Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனிதாபிமானப் போர் நடவடிக்கையை வடக்கில் முன்னெடுக்க மஹிந்த உறுதி

Featured Replies

வன்னிப் பிரதேசத்தில் புலிகளின் இரும்புக் பிடியில் சிக்கித் துயருறும் அப்பாவித் தமிழ் மக்களை மீட்டெடுத்கும் மனிதாபிமான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க மஹிந்த உறுதி பூண்டுள்ளார்.

இவ்வாறு தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பேச்சாளரும் அமைச்சருமான கேஹெலிய தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் சந்திப்பு நேற்று பிற்பகல் தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதெ அதைத் தெரிவித்தார்.

மேலும்

போர்நிறுத்த உடன்படிக்ககையைத் தொடர்ந்து அமுல்படுத்த புலிகள் விரும்பம் தெரிவித்துள்ள போதிலும் அதிலிருந்து விலகுவதென்று அரசு எடுத்த முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை.

கடந்த 25 வருட கால அனுபத்தைக் கருத்திற் கொண்டே அரசு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. திம்பு பேச்சு தொடக்கம் இன்றுவரை புலிகளின் நடவடிக்ககைள் நன்கு ஆராயப்பட்டன. புலிகளுடன் அரசு மேற்கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தங்களால் புலிகள் பலம் பெற்றதோடு அவை இறுதியில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அழிவையே கொண்டுவந்தன.

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசு வெளியேறியதனால் நாட்டில் யுத்தப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தப்பாக அர்த்தம் கொள்ளக் கூடாது. ஜனநாயகத்தை மதிக்கும் தமிழ்; தலைவர்களும் தமிழ் மக்களும் எம் மத்தியில் இருக்கின்றனர். அவர்களை ஒன்றிணைத்து தேசியப் பிரச்சினைக்கு நியாயாமான தீர்வு வழங்குவோம்.

இம்மாத இறுதியில் சர்வகட்சி மாநாட்டின் சிபார்சுகள் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படும். அதற்கான அனுமதியைப் பெற்று உலக நாடுகளுடன் கை கோர்த்து புலிகளின் பயங்ரவாதத்தை தோற்கடிப்போம்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரச வெளியேறியனால் தான் நாட்டில் குண்டுத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக சிலர் கதை பரப்புகின்றனர். இது பிழையான கணிப்பீடாகும். ஏனேனில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்த காலப்பகுதியில்தான் சிவிலியன்கள் மீதான இதே போன்ற மிலேச்சத்தனமான தாக்குதல்கள் கெப்பிற்றிக்கொல்லாவ மற்றும் நுகேகொட பிரதேசங்களில் புலிகள் நடத்தினர். காலம், நேரம், இடம் என்பனவற்றைப் பயங்கரவாதிகள் பொருட்படுத்துவதில்லை.

கிழக்கில் பொதுமக்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்கும் மனிதபிமான நடவடிக்கையை படையினர் சில மாதங்களுக்கு முன்னர் வெற்றகரமா அமுல்படுததினர்.

ஓர் உயிரிழப்பக்கூட இன்றி வாகரைப் பிரதேசத்தைப் படையினர் வெற்றி கொண்டனர். அது வரலாற்றில் முக்கிய சம்பவமாகப் பதிந்துள்ளது. இன்று அப்பிரதேச மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கின்றனர். அவர்கள் மீள் குடியேற்றபட்டுள்ளனர். சகல வசதிகளையும் அரசு அவர்களுக்கு செய்து கொடுத்துள்ளது. அங்கு மனித உரிமைகள் பேணப்படுகின்றன. தமது பிரதிநிதிகளைத் தாமே தெரிவு செய்து கொள்வதற்கான தேர்தலை நடத்தவும் அரசு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.

இதே உரிமைகளை வன்னியில் புலிகளிடம் சிச்குண்டுள்ள அப்பாவிப் பொதுமக்கள் அனுபவிக்க வேண்டும். எனவே பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து அவர்களை மீட்கும் நடவடிக்ககைளை அரசு தொடர்ந்தும் மேற்கொள்ளும். பிரபாகரன் மறைந்திருக்கும் இடம் புலனாய்வுத் தகவல் மூலம் உறுதி செய்யப்பட்டால் அந்த இடம் தாக்கப்டுவதை எவராலும் தடுக்க முடியாதென்பதை எனது ஜனாதிபதி ஜப்பான் விசேட தூதுவர் யசூசி அகாஷியிடம் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். என்று அமைச்சன் கூறியுள்ளார்.

நன்றி சுடர் ஒளி

பிரபாகரனைக் கொல்ல இலங்கை அரசு முடிவு

கொழும்பு (ஏஜென்சி), புதன்கிழமை, 16 ஜனவரி 2008 (22:28)

அமைதித் தீர்வுக்கு ஒப்புக்கொள்ளாவிட்டால், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கொல்ல முடிவு செய்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டுப் பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் கெஹலியா ராம்புக்வெல்லா இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பிரபாகரன் தயாராக இருந்தால், அதனை பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இல்லையேல், இலங்கையில் அமைதியை நிலைநாட்டுவதற்காக பிரபாகரனைக் கொல்ல முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

இலங்கையின் தென் கிழக்குப் பகுதியில் இன்று காலை ஓடும் பஸ்சில் குண்டுவெடித்து பள்ளிக் குழந்தைகள் உள்பட 26 பேர் பலியானது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறுகையில், அவர் மேற்குறிப்பிட்ட முடிவைத் தெரிவித்தார்.

நன்றி யாகூதமிழ் (மூலம் - வெப்துனியா)

இதுதான் பேரினவாத அரசியல். இங்குதான் கிளைமோர் வெடிக்கப்பட வேண்டும். இந்தப் பேரினவாதம் அழிக்கப்பட வேண்டும்.

மகிந்தவின் மனிதாபிமானம் என்ன தமிழ் மக்களை சிங்கள வெறியர்களின் கொலைக்களத்துக்கு அனுப்புவது தானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ந்திரிக்கா சொன்னா மாதானத்திற்கான போரென்று. கிந்த சொல்லுது னிதாபிமானத்திற்கான போரென்று. நல்ல பொருத்தமாய் தான் சொல்லுகினம்.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் நடாத்தி முடித்த மனிதாபிமானத்திற்கான போரில் சுமார் 400 தமிழர்களை கொன்று குவித்த மகிந்த இப்போது வடக்கிலும் மனிதாபிமானப் போர் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

சிங்களவனின் பாஷையில் கொலைகளுக்கு மனிதாபிமானம் என்ற பெயர் போலும் ! நல்ல இனம், நல்ல மொழி, நல்ல கலாச்சாரம் ! மிருகங்களுக்குப் பிறந்த கூட்டம்தானே ( இதை நான் சொல்லவில்லை, சிங்கத்தின் புதல்வர்கள் என்று சிங்களவர்களே தங்களைச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்!).

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையேல், இலங்கையில் அமைதியை நிலைநாட்டுவதற்காக பிரபாகரனைக் கொல்ல முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்

ஆமாம் முடிவு எடுப்பது தான் பாக்கி. எடுத்தவுடன் மகிந்த வெட்டி வீழ்த்திவிடுவார். :rolleyes::rolleyes::rolleyes:

நண்றியய்யா.... நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.