Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எந்த எதிர்ப்பு வந்தாலும் 23 ஆம் நாள் தீர்வுத்திட்டத்தை அரசு முன்வைக்கும்: மைத்திரிபால சிறிசேன

Featured Replies

இனப்பிரச்சினைக்கு 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் தீர்வை முன்வைக்குமாறு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அழுத்தம் கொடுப்பது வேடிக்கையானது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்

எவர் எதிர்த்தாலும் அதிகாரப் பரவலாக்கல் தீர்வுத்திட்டத்தை எதிர்வரும் 23 ஆம் நாள் முன்வைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

மற்றொரு பிழையான ஆரம்பத்தை நாங்கள் பார்க்க விரும்பவில்லை, என்ற சர்வதேச சமூகத்தின் கடுமையான எச்சரிக்கையின் மத்தியில் எதிர்வரும் புதன்கிழமை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு இனநெருக்கடிக்கு தீர்வு காணும் யோசனைகளடங்கிய இறுதி அறிக்கையை மஹிந்தவிடம் சமர்ப்பிக்கவுள்ளது.

தீர்வு யோசனையை தயாரிப்பதற்காக இது வரை 61 அமர்வுகளை நடத்தியிருக்கும் இக்குழு இன்றும் நாளையும் மேலதிகமாக கூடி முடிவு செய்யப்படாத விடயங்கள் குறித்து ஆராயவுள்ளதாக குழுவின் தலைவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண நேற்று சனிக்கிழமை தெரிவித்தார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கையை புதன்கிழமை மஹிந்தவிடம் சமர்ப்பிக்க முடியுமென நான் எதிர்பார்க்கிறேன். அதேசமயம் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டிய சர்ச்சைக்குரிய விடயங்கள் அடங்கிய இரண்டாவது ஆவணமொன்றையும் நான் கையளிக்கவுள்ளேன் என்று கூறிய பேராசிரியர் விதாரண, அரசியலமைக்புக்குட்பட்ட விதத்தில் இந்த சர்சைக்குரிய விடயங்களுக்கு தீர்வு காணமுடியுமென்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

இதே வேளை உத்தேச அறிக்கையானது குறுகிய காலத்தில் மேற்கொள்ளபட வேண்டிய நடவடிக்ககைள் மற்றும் நீண்ட காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய செயற்பாடுகள் என்பவற்றை உள்ளடக்கியதகா இருக்குமென சர்வ கட்சிக் குழு வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.

அதேசமயம் தற்போது அரசியலமைப்பின் 13 வது திருத்த வரையறைக்குள்ளேயே யோசனை வரைபு அமைய வேண்டும் என மஹிந்த கண்டிப்பான அறிவுறுத்தலை வழங்கியிருப்பதால் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவும் 13 வது திருத்தத்திற்கு உட்பட்டே யோசனைகளை தயாரித்துள்ள போதும் சர்ச்சைக்குரிய விடயங்களை அதாவது 13 வது திருத்தத்திற்குள் உட்புகுத்தப்படாத விடயங்களை தனியான ஆவணமாக கையளிப்தென தீர்மானித்துள்ளது.

உத்தேச தீர்வு யோசனை மாகாண மட்ட அதிகாரப்பரவலாக்கததையே அதிக உயர்ந்தபட்ச அலகாக கொண்டிருக்கும் நிலையில் மாகாணங்கள் நேரடியாக நிதிளைப் பெற்றுக் கொள்ளும் அதிகாரம், வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்தல், தேர்தல் முறைமை, சிறுபான்மை சமூகங்கள் செறிந்துவாழும் பிரதேசங்களுக்கு அதிகளவு அதிகாரங்களை பரவலாக்குதல், நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்குதல், தமிழ் மொழி அமுலாக்கம், மாகாணங்களுக்குரிய பொலிஸ்,காணி அதிகாரங்ளை பகிர்ந்தளித்தல் போன்ற விடயங்களில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவால் இதுவரை இணக்கப்பாடு காண முடியவில்லை. ஆதாலால் இவற்றை தனியான அவணமாக கையளிப்பதென சர்வ கட்சிக் குழு தீர்மானித்திருக்கின்றது. அதேசமயம் இந்தச் சர்ச்கைகுரிய விடயங்கள் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி மக்கள் ஆணையைப் பெற்றுக் கொள்ளுமாறும் குழுவினர் பரிந்துரை செய்யவுள்ளனர்.

இதே வேளை பிரிட்டிஷ் பாரளுமன்றத்தில் இலங்கையின் சமாதான நடவடிக்கைளுக்கு எவ்வாறு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பாக வியாழனன்று இடம் பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் பதிலளித்து உரையாற்றிய அந்நாட்டின் பிரதிநிதி வெளிவிவகார அமைச்சர் டாக்டர் றோவல்ஸ், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் சிபார்சுகள், இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக மேற்கொள்ளபட்டிருக்கும் ஏற்பாடுகளுக்கு அப்பால் செல்ல வேண்டியது முக்கியமானது என்று சுட்டிக் காட்டியிருந்தார்.

அத்துடன் சர்வதேச சமூகம் இதனை மிக உன்னிப்பாக அவதானித்தக் கொண்டு காத்திருப்பதாகவும் மற்றொரு தவறான ஆரம்பத்தைப் பார்க்க நாங்கள் விரும்பவில்லை எனவும் கூறியிருந்தார்.

மஹிந்தவின் அழுத்தத்துக்கு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு உட்பட்டிருப்தாக வெளியான செய்திளையடுத்தே பிரிட்டனிடமிருந்து இத்தகைய எச்சரிக்கை வெளியிருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.

நன்றி தினக்குரல்.

  • தொடங்கியவர்

எல்லோரும் அரசியல் தீர்வுத்திட்டத்தினை நான் முன்வைக்கப் போவதாக எதிர்பார்ப்பதனால் தனக்கு எதிர்வரும் புதன்கிழமை எதனையாவது தருமாறு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அனைத்து கட்சிக்குழுவினரிடம் கேட்டுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெயிட் பொங்கல் இப்ப தான் கொண்டாடுறேன்

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2008-01-21

அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவினால் ஏதேனும் காத்திரமாகச் சாதிக்க முடியுமா?

கடந்த ஒன்றரை வருடங்களாக அறுபதுக்கும் அதிகமான அமர்வுகளை நடத்திய அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு, நீண்ட இழுபறியின் பின்னர் ஒருவாறு ஏதோ ஒரு சிபார்சைச் செய்யும் நிலைவரை எட்டியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

நேற்றுப் பிற்பகல் அக்குழுவின் கடைசிக் கூட்டம் ஒன்று சுமார் ஆறு மணி நேரம் நடத்தத் திட்டமிடப்பட்ட "மரதன்' அமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஏதேனும் வித்தியாசமான முடிவு செய்யப்பட்டாலன்றி அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் சிபார்சு அடங்கிய அறிக்கை ஒன்று நாளை மறுதினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுவிடும்.

இனப் பிரச்சினைக்குத் தீர்வாக தென்னிலங்கை முன்வைக்கப்போகும் சிபார்சுத் திட்டத்துக்கான நகல் வரைவு வடிவமாக இது முன்மொழியப்படும்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையில் சிறுபான்மையினருக்கான அதிகாரப் பரவலாக்கல் திட்டமாக முன்வைக்கப்பட்ட விடயங்களை உள்ளடக்கி 1988 இல் இலங்கை அரசமைப்புக்கு பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

இருபது வருடங்களுக்கு முன்னர் பிரேரிக்கப்பட்டு, சட்டமாக்கப்பட்டு, பின்னர் மாறி, மாறி வந்த சிங்கள அரசுகளால் நடைமுறைப்படுத்தப்படாமல் குப்பைக்கூடைக்குள் தூக்கிக் கடாசப்பட்ட இந்தப் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தையே, அதிகாரப் பரவலாக்கலுக்கான தனது சிபார்சு யோசனையாக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு முன்வைக்க வேண்டும் என்பது கொழும்பு அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலாக இருந்தது. அந்தத் தீர்மானத்துக்கு வருமாறு அக்குழுவின் மீது தனது செல்வாக்கைப் பிரயோகித்து அழுத்தம் கொடுத்தார் அரசுத் தலைவர் என்பதும் பகிரங்கமான "இரகசியம்'.

இறுதித் தீர்வு எட்டும் வரை பதின்மூன்றாவது அரசமைப்புத் திருத்த விடயங்களை இடைக்கால அம்சமாக நடைமுறைப்படுத்தலாம் என்ற தீர்மானத்தை எடுத்ததன் மூலம், அரசுத் தலைவரின் அழுத்தத்துக்கு ஓரளவு மசிந்து கொடுத்த அனைத்துக் கட்சிக்குழு, எனினும் பதின்மூன்றாவது திருத்தத்துக்கு அப்பாலும் சென்று சில விடயங்களை அதிகாரப் பகிர்வு செய்யும்படி வலியுறுத்தியதன் மூலம், தனது தனித்துவத்தையும் ஓரளவு வெளிப்படுத்தியிருக்கின்றது என விமர்சிக்கும் அரசியல் அவதானிகளும் உள்ளனர்.

ஆனாலும், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவினால் முன்வைக்கப்படும் எந்த யோசனையும் எவ்வளவுதூரம் செல்லுபடியானது, ஏற்றுக்கொள்ளத்தக்கது, நியாயமானது, காத்திரமானது, சாத்தியமானது, காலாதி காலமாகப் பாதிக்கப்பட்டுவரும் சிறுபான்மையினரின் அபிலாஷைகளைத் தீர்க்கக்கூடியது என்பவையெல்லாம் ஆராயப்பட வேண்டிய விடயங்கள்.

இலங்கை இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பிரதான கட்சிகள் பலவும் இந்த அனைத்துக் கட்சிக் குழுவில் இல்லை. எஞ்சிய கட்சிகளைக் கூட்டினால் அவை பெரும்பாலும் அரசுக் கூட்டமைப்பில் ஒட்டியிருப்பவைதாம். ஆகவே, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு சமர்ப்பிக்கும் யோசனைத்திட்டம் என்பது, அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டு யோசனை என்ற சாரப்படவே கணிக்கப்படும்.

இந்த அனைத்துக் கட்சிகள் பிரதிநிதிகள் குழுவில் பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. என்பன இல்லை. இக்குழுவின் கூட்டத்தில் ஆரம்பத்தில் பங்குபற்றிய இவ்விரு கட்சிகளும் நேரத்துடனேயே அந்நடவடிக்கையில் இருந்து ஒதுங்கிவிட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகியன அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட்டத்துக்கு அழைக்கப்படவே இல்லை.

ஆகவே, பிரதான தரப்புகள் கட்சிகளின் பங்குபற்றுதலின்றித் தயாரிக்கப்பட்டுள்ள இந்த யோசனைத்திட்டம் "அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் சிபார்சு' என்று முன்மொழியப்பட்டாலும் கூட "அரைக் கால்வாசிக் கட்சிகளின் யோசனைத்திட்டம்' என்று அழைக்கப்படுவதுதான் பொருத்தம்.

அத்தகைய அரைக்கால்வாசிக் கட்சிகளின் சிபார்சைக் கூட தீர்வுக்கான திட்டமாக ஏற்கும் மனநிலையில் மஹிந்தரின் அரசியல் தலைமை இல்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.

இந்த சிபார்சுத் திட்டத்தை தமது அமைச்சரவையில் சமர்ப்பித்து ஒரு தீர்மானத்தை எடுப்பார் அரசுத் தலைவர் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

"அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் சிபார்சுகளை ஏற்று, அதனடிப்படையில் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தாம் முயன்றால் தாம் பதவி விலக வேண்டியதுதான்' என்ற சாரப்பட, உத்தியோகப்பற்றற்ற சந்திப்பு ஒன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கின்றார் என்றும் தகவல் வெளியாகியிருக்கின்றது.

ஆகவே, தென்னிலங்கை அரசியலைப் பொறுத்தவரை அரசைப் பொறுத்தவரை இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நடவடிக்கை என்பது பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரான தமிழ் பேசும் மக்களுக்கு நியாயம் செய்வதை நீதி செய்வதை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்பதே நிலைப்பாடு. தென்னிலங்கையில் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி, அதைத் தக்கவைப்பதை உறுதிப்படுத்திய பின்னர், சிறுபான்மையினருக்குப் "பிச்சையாக' இரக்கக்கூடியது என்ன என்பது குறித்து ஆராய்வதே தீர்வு முயற்சி என்ற சிந்தனைப் போக்காக மேலோங்கி நிற்கின்றது.

கட்சி அரசியல் கடந்து, பதவி அதிகார ஆசை என்ற இலக்குக் கடந்து, நீதி செய்யும் உறுதியோடும், நியாயத்தை நிலைநாட்டும் திடசங்கற்பத்தோடும், தீர்க்க தரிசனமான பார்வையோடும் செயற்படக்கூடிய ஓர் அரசியல் தலைமையால் மட்டுமே இலங்கையின் இனப் பூசலுக்கு நீடித்து நிலைக்கக்கூடிய நிரந்தரத் தீர்வு ஒன்றை முன்வைக்க முடியும்.

அந்தத் தகுதிக்கும் திறமைக்கும் கிட்டவே வராத மஹிந்த சிந்தனையால் இப்பிரச்சினைக்கு நியாயத் தீர்வை எண்ணிப் பார்ப்பதே சாத்தியமற்றது. அத்தகைய மஹிந்த சிந்தனைக்கு "ஜால்ரா' போடும் அனைத்துக் கட்சிக் குழுவாலும் நியாயமான தீர்வை நோக்கி சற்றேனும் நகர முடியும் எனக் கருதுவதும் யதார்த்தமற்றது. அதுவே உண்மை நிலையுமாகும்.

http://www.sudaroli.com/editorial.htm

எதுவும் நடக்காது. மகிந்தவின் இராஜதந்திரத்திற்குள் சிக்குப்படும் அளவிற்கு தமிழர் இராஜ தந்திரம் ஒன்றும் பலவீனமானதல்ல. வெடடிய குழிக்குள் மகிந்த தானே விழவேண்டியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Tue Jan 22 8:55:00 2008

யார் எதிர்த்தாலும் ஜனாதிபதியின் அங்கீகாரத்துடன் தீர்வு யோசனை! அமுல் படுத்தப்படும் என்கிறார் அமைச்சர் ராஜித

அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ விதாரணவினால் நாளை புதன்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும். அரசின் இடைக்கால தீர்வு யோசனைகளை நாடாளுமன்றில் பெரும்பான்மை வாக்களிப்புக்கு விடாது ஜனாதிபதியின் அங்கீகாரத்துடன் செயற்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.

கொழும்பு, கிருலப்பனையில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயகக் குழுவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் ராஜித சேனாரட்ண மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் அங்கீகாரத்துடன் மட்டும் தீர்வு யோசனைகள் செயற்படுத்தப்படுவதால் ஜே.வி.பியின் எதிர்ப்புக் குறித்து எவரும் கவலைப்படத் தேவையில்லை. முஸ்லிம் தற்பொழுது முன்வைக்கப்படும் தீர்வு யோசனைகள் முன்னைய காலங்களில் முன்னைய அரசுகளால் வைக்கப்பட்ட யோசனைகளைவிட வித்தியாசமானது. இது விடுதலைப் புலிகளுக்காக முன்வைக்கப்படும் யோசனைகள் அல்ல. வடக்கு, கிழக்கு மக்களுக்காகவே முன் வைக்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:

புலிகளை ஒதுக்கிவிட்டே தீர்வுயோசனை

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு உட்பட்டதாகவே அரசின் யோசனைகள் உள்ளன. விடுதலைப் புலிகளை ஒதுக்கிவிட்டு வடக்கு, கிழக்கில் உள்ள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகளை உள்வாங்கியே இந்த யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. புலிகளை ஒதுக்கிவிட்டு தயாரித்ததால் இந்தயோசனைகள் வெற்றி அளிக்கும்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கமைவாக மாகாண சபை முறையையே தீர்வு யோசனையாகச் சமர்ப்பிக்க சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. தற்பொழுது ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளால் இந்த வருடத்துடன் யுத்தம் முடிவுக்கு வந்து நிலையான சமாதானம் ஏற்படும் வாய்ப்பு தென்படுகிறது.

இந்தத் தீர்வு யோசனைகள் மூலம் புலிகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கில் உள்ள மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகள் தமது மக்களின் குறைகளைத் தீர்க்க இத்தீர்வு யோசனைகள் முற்றாக வழியமைத்துள்ளது.

புலிகளை ஓரங்கட்டியதால்

பாதிப்பு இல்லை

தீர்வு யோசனைகள் மூலம் புலிகள் ஓரங்கட்டப்பட்டிருப்பதால் இதற்குஎந்தப் பாதிப்பும் ஏற்படாது. புலிகள் ஒருபோதும் எந்தத் தீர்வுத்திட்டத்திற்கும் உடன்பட மாட்டார்கள். அவர்கள் யுத்தத்தையே விரும்புகின்றனர்.

அவர்களின் வழியில் சென்று அவர்களின் பயங்கரவாதத்தை ஒழிப்பதுதான் ஒரேவழி. அந்த வகையில் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கான யுத்தம் தொடரும்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகி அமைதிப் பேச்சுக்கு வருமாறு புலிகளைப் பல தடவைகள் அழைத்தும் அவர்கள் அவ்வழைப்பை ஏற்காமல் அரசின் மீது யுத்தத்தை திணித்தனர். இதனால்தான் இந்த யுத்தம் தொடர்கின்றது என்பதை மறக்கமுடியாது.

அமைதிப் பேச்சின்மீதோ அல்லது தீர்வு யோசனை மீதோ அவர்களுக்கு விருப்பமில்லை என்பதைப் புலிகள் பல தடவைகள் காண்பித்துவிட்டனர் என்றார் அமைச்சர். (அசி)

http://www.uthayan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.