Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னும் 2 வாரங்களில் மடுப்பகுதியை கைப்பற்றுவதற்கு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் 2 வாரங்களில் மடுப்பகுதியை கைப்பற்றுவதற்கு இராணுவம் கங்கணம் இனிவரப்போகும் போர் வித்தியாசமானதாக இருக்குமாம் - இக்பால் அத்தாஸ்

[Tuesday January 22 2008 06:29:56 AM GMT] [யாழினி]

இன்னும் இரண்டு வார காலத்தில் மடுப்பிரதேசத்தைக் கைப்பற்றி விட வேண்டும் என்ற இலக்கோடு, இராணு வத்தினர் அப்பகுதியில் நடவடிக்கை களை முடுக்கிவிட்டிருக்கின்றனர்.

இப்போதுள்ள நிலையில் இனிவரப் போகும் போர் வெகு வித்தியாசமான தாகவும் மிகப்பயங்கரமானதாகவும் இருக்கும்.

இவ்வாறு தெரிவிக்கின்றார் பிர பல இராணுவ ஆய்வாளரும் விமர்சகருமான இக்பால் அத்தாஸ்."சண்டே ரைம்ஸ்" பத்திரிகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இதழில் வெளி வந்த தமது பத்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டி ருக்கும் தகவல்கள் கருத்துக்களின் ஏனைய முக்கிய பகுதிகள் வருமாறு:

போர்நிறுத்த ஒப்பந்தத்தை அரசாங்கம் கைவிட்டதையடுத்து அதனைக் கண்காணிப்பதற்கு வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களும் இல்லாத நிலையில் அரச படைகள் வன்னியிலுள்ள விடுதலைப் புலிகளின் நிலைகள் மீதான தமது தாக்குதல்களை மும்முரப்படுத்தி வருகின்றன. இராணுவரீதியில் புலிகளைத் தோற்கடித்து அவர்கள் வசமுள்ள நிலப்பரப்புக்களைக் கைப்பற்றுவதே அவர்களின் நோக்கமாகும்.

கடந்த கால வரலாற்றைப் பார்க்கையில் புலிகள் இராணுவ நெருக்குதல்களுக்குள்ளாகும் சமயங்களில் எல்லாம் வடக்கு, கிழக்கில் போர் நடக்கும் பிராந்தியத்திற்கு வெளியில் மோதல் களை நகர்த்தி விடுவதை அவர்கள் தந்திரோபாயங்களாகப் பயன்படுத்தி வந்துள்ளார்கள். அரச படைகள் இப்போது மீளக் கைப்பற்றுவதற்கு எத்தனிக்கின்ற பகுதிகள் காலாவதியாகி விட்ட போர்நிறுத்த உடன்பாட்டின் வாயிலாகவே ஏற்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த ஆறு வருடங்களாக அப் பகுதி முழுவதும் புலிகளினால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வந்துள்ளதுடன், எவ்வாறேனும் அதனைத் தற்காத்துக்கொள்ள அவர்கள் உறுதி கொண்டுள்ளார்கள். இந்த முறையும் அதில் மாற்ற மில்லை. ஆனால் சிவிலியன்கள் மீதான குரூரமான இலக்குகளைத் தவிர. சில தினங்களுக்கு முன் ஒக்கம் பிட்டியாவில் பஸ் மீதான கிளைமோர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது. மொனறாகலையில் மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இந்தவகையில் மிகவும் அச்சம் கொள்ளபட்டிருந்த நான்காவது ஈழப் போர் ஆரம்பமாகிவிட்டது. புலிகளைப் பலவீனப்படுத்துவதும் வன்னியைக் கைப்பற்றுவதும் அவர்களின் இறுதிநோக்கம்; இதில் சந்தேகமில்லை. அரசியல் தலைவர்களும் அரச அதிகாரிகளும் இதைப் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள். இதற்கு இந்த வருட முடிவை இறுதிக் காலக் கெடுவாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.வன்னியில

  • கருத்துக்கள உறவுகள்

ரத்வத்தை மடுவை ஒரு 12 மணி நேரத்துக்க கட்டுப்பாட்டுக்க கொண்டு வந்தவர். சரத் ஏற்கனவே சொல்லி ஒரு கிழமை போயிட்டுது. இப்ப நடைமுறையில் உள்ளது அந்த இரண்டாம் கிழமை. ஆனால் சண்டை இன்னும்.. பாதுகாப்பு முன்னரங்களை ஒட்டித்தான் நடக்குது. பரப்பாங்கண்டல்.. பாலக்குழி.. விளாத்திக்குளம்.. இங்க தான் இப்ப ஒரு 10 மாதமாவே சண்டை நடக்குது என்பது எல்லோரும் அறிஞ்ச விசயம் தானே..! மாரி காலம் முடிஞ்சுது. எனவே எனி ராங்கிகளின் சூட்டாதரவும் கவசமும் கூடுதலாக இருக்கும். அதைவிட... புதிசா என்ன...???! :):)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரத்வத்தை மடுவை ஒரு 12 மணி நேரத்துக்க கட்டுப்பாட்டுக்க கொண்டு வந்தவர். சரத் ஏற்கனவே சொல்லி ஒரு கிழமை போயிட்டுது. இப்ப நடைமுறையில் உள்ளது அந்த இரண்டாம் கிழமை. ஆனால் சண்டை இன்னும்.. பாதுகாப்பு முன்னரங்களை ஒட்டித்தான் நடக்குது. பரப்பாங்கண்டல்.. பாலக்குழி.. விளாத்திக்குளம்.. இங்க தான் இப்ப ஒரு 10 மாதமாவே சண்டை நடக்குது என்பது எல்லோரும் அறிஞ்ச விசயம் தானே..! மாரி காலம் முடிஞ்சுது. எனவே எனி ராங்கிகளின் சூட்டாதரவும் கவசமும் கூடுதலாக இருக்கும். அதைவிட... புதிசா என்ன...???! :):)

குண்டுகளை பீரங்கிகளுக்குள் போட்டு ஏவுவதை விடுத்து இவர்கள் வாய்களுக்குள் போட்டு ஏவினால் வரும் பாதிப்புக்கள் தான் மிகமோசமாக இருக்கும் போல் இருக்கின்றதே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரத்வத்தை மடுவை ஒரு 12 மணி நேரத்துக்க கட்டுப்பாட்டுக்க கொண்டு வந்தவர். சரத் ஏற்கனவே சொல்லி ஒரு கிழமை போயிட்டுது. இப்ப நடைமுறையில் உள்ளது அந்த இரண்டாம் கிழமை. ஆனால் சண்டை இன்னும்.. பாதுகாப்பு முன்னரங்களை ஒட்டித்தான் நடக்குது. பரப்பாங்கண்டல்.. பாலக்குழி.. விளாத்திக்குளம்.. இங்க தான் இப்ப ஒரு 10 மாதமாவே சண்டை நடக்குது என்பது எல்லோரும் அறிஞ்ச விசயம் தானே..! மாரி காலம் முடிஞ்சுது. எனவே எனி ராங்கிகளின் சூட்டாதரவும் கவசமும் கூடுதலாக இருக்கும். அதைவிட... புதிசா என்ன...???! :):)

டிசம்பர் 24 ஆம் திகதி களநிலையெண்டு ஒரு படம் நாசனல்செக்குரிட்டில பாத்தன், அதுக்கு பிறகு நீங்கள் ஒரு படம் போட்டிருந்தியள், இப்ப நியுசு இப்பிடி வருகிது

ஒவொரு தருனத்திலயும் இப்பிடி ஏதாவது சொல்லுரியள், இந்த முறையாவது நம்பலாமோ????????????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவுண் டவுன் என்ன ஆச்சு???????

கவுண்டவுண் நீண்டு போச்சு. அதுதான் இன்னும் ஒரு கிழமை இருப்பதாக நெடுக்கலபோவோன் சொல்லிவிட்டாரே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.