Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்து கட்சிக்குழுவின் முயற்சி தோல்வியில் முடிந்தது: அலரி மாளிகையில் அவசரக்கூட்டம்

Featured Replies

இன நெருக்கடிக்கான இறுதித் தீர்வுத்திட்டத்தை தயாரிப்பதற்காக அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் உருவாக்கப்பட்ட அனைத்து கட்சிக்குழு எந்தவித தீர்வுத்திட்டத்தினை தயாரிப்பதில் தோல்வி கண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்த அனைத்து கட்சிக்குழு இதுவரை 58 தடவைகள் ஒன்றுகூடி தீர்வுத்திட்டம் குறித்து ஆராய்ந்த போதும் இறுதியில் எதுவித முடிவையும் எட்ட முடியவில்லை என்று அனைத்து கட்சிக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் தீர்வுத்திட்டம் அமைய வேண்டும் என்று இறுதிக்கட்டத்தில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கொடுத்த அழுத்தமே அனைத்து கட்சிக்குழுவின் இதுவரையான முயற்சிகள் தோல்வியில் முடியக்காரணமாக அமைந்துள்ளது என்று அனைத்து கட்சிக்குழுப் பிரதிநிதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அனைத்து கட்சிக்குழுவினர் நாளை 23 ஆம் நாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் இடைக்காலத் தீர்வுத்திட்டத்தினை முன்வைக்கும் என்று கூறப்பட்டது. அதற்கான இறுதிக்கட்ட முயற்சியாக நேற்று மாலையும் இன்று காலையும் அனைத்து கட்சிக்குழு கூடியது.

இந்த கூட்டத்தில் 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தினை எப்படித் தயாரிப்பது என்பது குறித்து கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

13 ஆவது அரசியல் திருத்த சட்டப்படி தீர்வுத்திட்டத்தை முன்வைத்தால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக மலையக அரசியல் கட்சிகளும், ஹெல உறுமயவும் எச்சரிக்கை விடுத்தன. அத்துடன் 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டப்படி தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதற்கு அனைத்து கட்சிக்குழுவில் உள்ள பெரும்பான்மையானவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் தீர்வுத்திட்டத்தை தயாரிப்பதில் சிக்கல் நிலை தோன்றியது.

ஆனால் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டப்படியே தீர்வுத்திட்டம் வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். அத்துடன் நாளை புதன்கிழமை தீர்வுத்திட்டத்தை தன்னிடம் சமர்ப்பிக்குமாறும் அவர் பணித்திருந்தார்.

இந்நிலையில் அனைத்து கட்சிக்குழுவின் இறுதிக்கூட்டமாகவே இன்று நடைபெற்ற கூட்டம் கருதப்பட்டது. எனினும் இன்றைய கூட்டத்தில் இறுதித் தீர்வுத்திட்டம் குறித்து எந்தவித முடிவும் எடுக்கப்படாததால் அனைத்து கட்சிக்குழுவின் இது வரையான முயற்சிகள் தோல்வியடைந்திருக்கின்றது.

இதனையடுத்து அனைத்து கட்சிக்குழுவினரை அலரி மாளிகைக்கு அழைத்து இன்று மாலை 4:30 மணிளவில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அவசர கூட்டத்தினை கூட்டியிருக்கின்றார். இந்த கூட்டத்தை அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் பலரும் புறக்கணித்திருப்பதாக தெரியவருகிறது.

சுதந்திர நாளன்றே தீர்வுத்திட்டம்?

அனைத்து கட்சிக்குழுவின் நடவடிக்கைகள் தோல்வியடைந்தமை குறித்து அமைச்சர் ராஜித சேனாரட்னவிடம் கேட்டபோது அவர் தெரிவித்துள்ளதாவது:

அனைத்து கட்சிக்குழுவினர் இதுவரை எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் குறித்து இன்று மாலை முதல் இடம்பெற்று வரும் கூட்டத்தில் அரச தலைவருக்கு விளக்கமளித்து வருகின்றனர். எனினும் இறுதித் தீர்வுத்திட்டம் குறித்து இதுவரை முடிவாகவில்லை.

அதனால் தீர்வுத்திட்டத்தை திட்டமிட்டபடி நாளை முன்வைக்க முடியவில்லை. அதனை முன்வைப்பதில் சிறிது காலதாமதம் ஏற்படும். பெரும்பாலும் சுதந்திர நாள் நிகழ்வில் இந்த தீர்வுத்திட்டத்தை அரச தலைவர் வெளியிடலாம் என நினைக்கிறேன் என்றார்.

http://www.puthinam.com/full.php?2b34OOA4b...cf1e02cceKcYA3e

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.