Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"இலங்கைக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும்" - கண்ணி வெடி விவகாரத்தில் வெடிக்கும் திருமா -குமுதம் ரிப்போர்ட்டர் (03.02.2008)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"இலங்கைக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும்" - கண்ணி வெடி விவகாரத்தில் வெடிக்கும் திருமா

pg4hn4.jpg

தமிழக அரசியலில் ஜனநாயகமும், மனிதநேயமும் இன்றி விடுதலைப் புலிகளுக்கு எதிரான பாசிச கொடுநெறிப் போக்கு கையாளப்படுகிறது’ என்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய கருத்துரிமை மீட்பு மாநாட்டில் பேசி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார், அதன் தலைவர் தொல்.திருமாவளவன்.

தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஊடுருவல், புலிகளுக்கு ஆயுதம் கடத்திய புலி ஆதரவாளர்கள் கைது என அண்மையில் வந்து கொண்டிருக¢கும் செய்திகளுக்கு மத்தியில் இவருடைய துணிச்சல் பேச்சு, அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுத்தைகள் அமைப்பினரின் குடும்ப விழாக்களில் கலந்து கொள்ள தூத்துக¢குடியில் இருந்தவரை தொடர்பு கொண்டுக் அவரது பேச்சு குறித்து நமது கேள்விகளை முன்வைத்தோம். படபடவெனப் பொரிந்து தள்ளினார் திருமா.

விடுதலைப் புலிகளை மக்கள் இயக்கமாக அறிவிக்க வேண்டும் என்ற கருத்துரிமை மீட்பு மாநாட்டில் நீங்கள் முன்வைத்த கோரிக்கை நடைமுறைக்கு ஏற்றதாக இல்லையே?

‘‘விடுதலைப்புலிகள் இயக¢கத்தினர் வெறும் ஆயுதக¢கும்பல் அல்ல; பயங்கரவாத அமைப்பு அல்ல என்பதற்கு சாட்சியாகத்தான் தமிழ் தேசிய நாடாளுமன்றக் கூட்டமைப்பை உருவாக்கி, தங்கள் பிரதிநிதிகளை வேட்பாளர்களாக அறிவித்து தேர்தலைச் சந்தித்து வருகிறது புலிகள் அமைப்பு. இந்தியா உள்பட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆயுத உதவி பெற்றுப் போர் செய்து வரும் இலங்கை அரசால் விடுதலைப்புலிகளை ஒடுக்க முடியவில்லை. காரணம், அது மக்கள் ஆதரவு பெற்ற அமைப்பு. இதன் காரணமாகத்தான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து சளைக்காமல் தங்களது போராட்டத்தைப் புலிகள் நடத்தி வருகின்றனர். எனவே, அவர்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரித்து, அவர்களை வெகுஜன இயக்கமாக அறிவிக்க வேண்டும் என்கிறோம்.’’

விடுதலைப் புலிகள் குறித்த உங்கள் கோரிக்கைகள் மற்றும் கருத்துகள் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முதல்வர் கருணாநிதிக்கு நெருக்கடியை ஏற்படுத்தாதா?

‘‘ஒரு கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் எங்களுக¢கென்று தனிப்பட்ட கருத்துகள் இருக்கும். காங்கிரஸ் சொல்வதை எல்லாம் தி.மு.க.வோ, தி.மு.க. சொல்வதை எல்லாம் விடுதலைச் சிறுத்தைகளோ ஏற்றுக¢ கொள்ள வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கூட்டணிக¢ கட்சிகளுக¢குள் இல்லை. கருத்துரிமை மீட்பு மாநாடு என்பதே அவரவரின் கருத்துக்கு சுதந்திரம் வேண்டும் என்பதை வலியுறுத்தவே நடத்தப்பட்டது. இந்திய அரசின் இறையாண்மைக்கோ, ஒருமைப்பாட்டுக்கோ பங்கம் விளைவிக்கும் எந்தச் செயலையும் சிறுத்தைகள் செய்யாதபோது, எங்களால் யாருக்கும் நெருக்கடி ஏற்படாது.’’

விடுதலைப்புலிகள் மீதான பொருளாதாரத் தடைகளை உலக நாடுகள் நீக்க வேண்டும் என்கிறீர்களே? அதன் அவசியம் என்ன?

‘‘விடுதலைப்புலிகளின் முன்னணித் தலைவர்களைக¢ கொன்றுவிட்டால் அவர்களின் போராட்டத்தைப் பலவீனப்படுத்தி விடலாம் என்று இலங்கை அரசு நினைக்கிறது. மேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் திடீரென ரத்து செய்துள்ளது அந்நாட்டு அரசு. இப்படிப்பட்ட சிங்கள அரசுக்கு சர்வதேச நாடுகள் துணை நிற்பது வேடிக்கையாக இருக¢கிறது. விடுதலைப் புலிகளின் போராட்டத்தை அங்கீகரித்து, அவர்கள் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் நீக்க வேண்டும். அதில் தவறேதும் இல்லை.’’

விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் அமைப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக¢கை அரசியல் லாபத்துக்காகவே என்று கூறுகிறீர்கள். இது, ராஜீவ் காந்தி படுகொலையால் வேதனையில் இருக்கும் அவர்களை மேலும் வேதனைக்குள்ளாக்குவதாக உங்கள் மீதே குற்றச்சாட்டு எழுகிறதே?

‘‘ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அதில் தொடர்புடையவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, சம்பந்தப்பட்டவர்கள் சிறை தண்டனையையும் அனுபவித்து வருகின்றனர். எந்தச் சூழ்நிலையிலும் ராஜீவ் காந்தி படுகொலையை நாங்கள் நியாயப் படுத்தவில்லை. அது ஒரு துயரமான சம்பவம். இது ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டு ஓர் இனத்தின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க நினைப்பது தவறு.

மேலும், காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர்கள் மட்டுமே தொடர்ந்து புலிகளுக்கு எதிரான கருத்துகளைச் சொல்லி வருகின்றனர். தமிழகத்தில் புலிகள் ஊடுருவி உள்ளதாகவும் அவர்கள் பீதி ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால், அக¢கட்சியின் மேலிடத்தில் இருந்து புலிகள் தொடர்பாக இதுவரை எந்தக¢ கருத்தும் சொல்லப்படவில்லை. குறிப்பாக சோனியாவோ, மற்றவர்களோ விடுதலைப்புலிகளையும் தமிழகத்தையும் இணைத்து எதுவும் பேசாதபோது, தங்கள் இருப்பைக¢ காட்டிக¢ கொள்ளும் அரசியல் லாபத்துக¢காகவே புலிகளுக்கு எதிராக தமிழக காங்கிரஸார் குரல் கொடுத்து வருகிறார்கள்.

வருகின்ற மே மாதம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை இந்திய அரசு மறுபரிசீலனை செய்யப் போகிறது. இதை ஒரு வாய்ப்பாகக¢ கருதி, புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீக்க வேண்டும். வெறும் அதிகாரிகளின் பேச்சைக¢ கேட்டுச் செயல்படாமல் புலிகள் விவகாரத்தில் பொதுமக்களின் கருத்தைக் கேட்டு அவர்கள் மீதான தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதையும் மீறி அவர்கள் மீதான தடையை நீட்டித்தால், அதை அகற்ற நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.’’

இலங்கை கடல் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளால் தமிழக மீனவர்கள் மரண பீதியில் உள்ளார்களே?

‘‘ஒரு நாடு தன் நாட்டின் எல்லையில் கண்ணிவெடி வைப்பது என்பது அண்டை நாட்டைப் போருக்கு அழைப்பதற்காகவே. அப்படியிருக¢கையில், எந்தவிதமான முன்அறிவிப்புமின்றி சர்வதேசச் சட்டத்தை மீறும் வகையில் கண்ணிவெடிகளை சிங்கள அரசு வைத்துள்ளது. இந்திய அரசின் ஆளுமையையே கேள்விக¢குறியாக்கும் சிங்கள அரசின் இந்த நடவடிக்கையைக¢ கண்டித்து அந்நாட்டுக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டிய நிலையில் மத்திய அரசு உள்ளது.

மாறாக, தமிழக மீனவர்களை அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கப் போகவேண்டாம் என்று நமது கப்பல் படை அறிவுறுத்துகிறது. இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இந்தியக் கப்பல் படை செயல்பட்டு வருகிறதோ என்கிற சந்தேகத்தைத்தான் இது ஏற்படுத்துகிறது. இதனால் ராமேஸ்வரம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மீன்பிடிக்கச் செல்லாமல் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், அதைக¢ கண்டித்து பிப்ரவரி முதல் தேதியில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் ஈடுபடுவர்.’’

கண்ணிவெடி விவகாரத்தில் இலங்கை அரசுக்கு ஏதாவது உள்நோக்கம் இருப்பதாகக் கருதுகிறீர்களா?

‘‘நிச்சயமாக இருக்கிறது. கச்சத் தீவு ஒப்பந்தப்படி அங்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அந்தத் தீவில் தங்கவும், மீன்பிடி வலைகளை உலர்த்தவும் உரிமை உண்டு. கச்சத் தீவில் நமது மீனவர்களுக்கு உள்ள உரிமையைப் பறிக்கவும், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றாமல் தடுக்கவும் கண்ணிவெடிகளை கடலில் மிதக்க வைத்துள்ளது சிங்கள அரசு. கடலில் மிதக்கும் இந்தக¢ கண்ணிவெடிகள் மிதந்து கொண்டே நம்முடைய கடல் எல்லைக்குள் வந்துவிடும் அபாயத்தையும் மூடி மறைக்கிறது நமது அரசாங்கம்.

கடந்த பத்து ஆண்டுகளில் இருநூறுக்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொன்றுள்ளது சிங்கள கடற்படை. அண்மையில் பதின்மூன்று மீனவர்களைக் கடத்திச் சென்றுள்ளது. இதையெல்லாம் இந்திய அரசு தட்டிக¢ கேட்காமல் என்ன செய்து கொண்டிருக¢கிறது? தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா? இதுதான் எங்கள் கேள்வி!’’

-வே.வெற்றிவேல்

-குமுதம் ரிப்போர்ட்டர் (03.02.2008)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மீது இந்தியா போர் தொடுக்க திருமாவளவன் கோரிக்கை

சென்னை: விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று நான் கோரியதில் எந்தத் தவறும் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் கருத்துரிமை மீட்பு மாநாடு நடத்திய திருமாவளவன், புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்றார். இதற்கு காங்கிரஸ் மற்றும் அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. திருமாவளவனை கைது செய்யக் கோரி சட்டசபையில் வெளிநடப்பு செய்து தனது எதிர்ப்பைக் காட்டியது காங்கிரஸ்.

காங்கிரஸ் தயவில் ஆட்சி நடத்தி வரும் திமுக அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இதையடுத்து இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் கூடிய உயர் மட்டக் கூட்டத்தில் புலிகளை ஆதரிப்போர் மீது சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் புலிகளுக்கு ஆதரவாகப் பேசி அரசுக்கு தர்ம சங்கடத்தைத் தர வேண்டாம் எனவும் கருணாநிதி கோரிக்கை விடுத்தார்.

இந் நிலையில் பிரச்சனைக்கு காரண கர்த்தாவான திருமாவளவன் மீண்டும் தனது நிலையை உறுதிபடுத்தியுள்ளார். நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

புலிகள் மீதான தடையை நீக்கி, எல்டிடிஈ அமைப்பை விடுதலைப் போராட்ட அமைப்பாக அங்கீகரிக்க வேண்டும் என்று நான் சொன்னது எனது தனிப்பட்ட கருத்துரிமை, ஜனநாயக உரிமை. அதில் தவறேதும் இல்லை.

இது தான் எங்கள் அமைப்பின் நிலை. அதற்காக எங்களை சட்டப்படி தண்டிக்க ஆட்சியாளர்கள் கருதினால் அதற்கும் நாங்கள் தயார்.

சர்வதேச கடல் பகுதியில் கண்ணி வெடிகளைப் போட்டு வைத்து தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதையே தடுக்க முயல்கிறது இலங்கை கடற்படை. இந்திய மீனவர்களைக் காக்க இலங்கை மீது இந்தியா போர் தொடுக்க வேண்டும்.

இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கட்சத் தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உள்ள ஒப்பந்தத்தின்படி தமிழக மீனவர்கள் கட்சத் தீவில் ஓய்வெடுக்கவும், வலைகளை காய வைக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால், அந்தத் தீவுப் பக்கமே மீனவர்களை வர விடாமல் தடுத்து சுட்டு, தாக்கி, கொன்று வருகிறது இலங்கை.

தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அரசின் உதவித் தொகை பெற 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, வேலை உரிமையை தடுக்கும் செயல். இந்த உத்தரவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 5ம் தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்றார் திருமாவளவன்.

- தட்ஸ் தமிழ்

றஜீவை கொன்றுவிட்டார்கள் கொன்றுவிட்டார்கள் என்று சொல்லி சொல்லி அழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் தமிழ் இனத்துக்கு மேலும் அழிவைத் தேடிக்கொடுக்கும் கூட்டங்கள்,200 க்கும் மேற்ப்பட்ட அப்பாவி தமிழ் மீனவர்களை இலங்கை அராஜக அரசு கொன்றொழித்துள்ளது பற்றி ஏன் வாய் திறக்கவில்லை?

ஒரு ஜனனாயக நாட்டில் பிரதமர் உயிருக்கு உள்ள மரியாதை ஜனங்களுக்கு இல்லயா?

"இலங்கைக்கு எதிரான போர் "

மக்கள் மீது அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள்ளின் முடிவு.........

  • கருத்துக்கள உறவுகள்

ஒடு அதிகார வெறி பிடித்த, ஆடம்பர வாழ்வு வாழ்ந்த, ஊழல் நிறைந்த ஒரு பார்ப்பணியன் செத்ததற்கே இந்தளவு ஆத்திரம் என்றால் எங்களின் ஒரு சமூகத்தையே வேரோடு அறுத்தெறிந்தீர்களே?! எங்களுக்கு எவ்வளவு கோபம் வரவேண்டும் ?

தமிழக காங்கிரசுக் காரனே, உனது அப்பா, அண்ணாவை ரயில் தண்டவாளத்தில் ராணுவத் தாங்கியால் எற்றிக் கொன்ற கொடுமையை பார்த்திருக்கிறாயா? உனது கண்முன்னே உனது அம்மாவையும், அக்கா தங்கையையும் பத்துப் பதினொருபேர் கற்பழித்து பின் அவர்களின் பிறப்புறுப்பில் குண்டுவைத்துக் கொன்றதைப் பார்த்திருக்கிறாயா ? பார்த்திருந்தால் எங்கள் வலி புரியும்!

இது உனக்கு நடந்திருந்தால் என்ன செய்திருப்பாய் ? சாதாரணத் தெருச்சண்டைக்கே அரிவாள் வீசும் நீ, இவ்வளவு கொடுமைகளையும் செய்யக் காரணமானவனை என்ன செய்திருப்பாய் ?

புரிந்து கொள்! ஒவ்வொரு அநியாயத்திற்கும் உடனே தீர்ப்பு எழுதப்படும் காலமிது !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.