Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய நிறுவனமொன்றுக்கு திருகோணமலையில் 900 ஏக்கர் நிலம்

Featured Replies

இந்திய நிறுவனமொன்றுக்கு திருகோணமலையில் 900 ஏக்கர் நிலம்

தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் விசேட வர்த்தக வலயமொன்றை இலங்கையில் அமைப்பதற்காக இந்திய நிறுவனமான மஹிந்து லைப்ஸ்பேஸ் தனியார் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விசேட வர்த்தக வலயமொன்றை அமைப்பதற்காக திருகோணமலை கப்பல்துறை பிரதேசத்தில் 900 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு உரிய ஒப்பந்தம் இன்னும் 30 நாட்களுக்குள் கைச்சாத்திடப்படும் என இந்திய வர்த்தக அமைச்சர் ஜெயராம் ரமேஸ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல் தொழில்நுட்ப பூங்கா சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட உள்ளது.

இந்தப் பூங்காவை அமைப்பதற்கான ஒப்பந்தம் லைப்ஸ்பேஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் அருண் நந்தா - முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சரத் அமுனுகம ஆகியோருக்கு இடையில் இன்று (பெப்ரவரி12) கொழும்பில் இந்திய வர்த்தக அமைச்சர் ஜெயராம் ரமேஸ் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.

முதல் அடியும் முதல் காலடியும்

நாடு பற்றி எரியும்போது பிடில் வாத்தியம் வாசித்துக் கொண்டிருந்தானாம் நீரோ மன்னன்.

அதுபோலவே படுகின்றது இலங்கை தொடர்பான புதுடில்லியின் செயற்பாடும்.

இலங்கையில் யுத்தம் தீவிரமடைந்துஇ மக்களின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகிஇ பேரவல நிலை ஏற்பட்டிருக்கின்றது.

அமெரிக்காஇ ஆஸ்திரேலியாஇ பிரிட்டன் போன்ற நாடுகள் தமது பிரஜைகளை இலங்கையில் பயணிப்பதைத் தவிர்க்கும்படி பயண எச்சரிக்கையை விடுத்திருக்கின்றன. எங்கும்இ எந்நேரமும்இ எதுவும் நடக்கலாம் என்ற அச்ச சூழல் இலங்கையில் நிலவுகின்றது என்ற யதார்த்தப் புறச்சூழலை அந்தந்த நாடுகள் உணர்ந்து கொண்டதன் விளைவாகவே இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால்இ அருகில் இருக்கும் நமது அயல் வல்லாதிக்க நாடான இந்தியா மட்டும் இது குறித்தெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் வழமைநிலை இங்கு நிலவுவதுபோல மிகத் தாராளமாக நடந்துகொள்கின்றது.

இலங்கையில் பயணிப்பது குறித்துக் கூட கவனமாக இருங்கள் என்று மேற்கு நாடுகள் தனது பிரஜைகளுக்கு எச்சரிக்க

இந்தியாவோ இவற்றுக்கு மத்தியில் தனது வர்த்தக முதலீட்டாளர்களை இங்கு கூட்டிவந்து இங்கு முதலீடு செய்வது குறித்துத் தீவிரமாகச் சிந்திக்கின்றது.

மேலும் வாசிக்க : www.sudaroli.com/editorial.htm

திருகோணமலையில எண்டு ஏதோ சொல்லிறாங்கள். பிறகு கட்டுநாயக்காவில எண்டு ஏதோ சொல்லிறாங்கள். ஒண்டும் விளங்க இல்ல.

திருகோணமலை தமிழீழத்திற்குட்பட்டது. அதன் நிலப்பரப்பும் தமிழீழத்திற்கானது. அதைப் பகிர்ந்தளிப்பதும் தமிழீழ அரசிற்குரியது.

எண்டு உங்களுக்கு நீங்களே சொல்லி ஆறுதல் பட வேண்டியான்.

  • கருத்துக்கள உறவுகள்

நவீன தொழில்நுட்ப பூங்காவை அமைக்க இந்திய நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

2/13/2008 12:08:58 PM

வீரகேசரி இணையம் - இலங்கையில் அதி நவீன தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று நேற்று கைச்சாத்திடப்பட்டதாக தொழில் அபிவிருத்தி, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் விசேட வர்த்தக மையம் ஒன்றை அமைப்பதற்காக 900 ஏக்கர் நிலத்தை இந்திய நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா என்ற நிறுவனத்திற்கு வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

இந்தியாவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் இந்த தகவல் தொழில்நுட்ப பூங்காவை உருவாக்க முன்வந்துள்ளது. இதனை உருவாக்குவதற்கு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளது.

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பான விடயங்களை ஆராய்வதற்கும் களநிலைவரங்கள் குறித்து ஆராய்வதற்கும் உயர் மட்ட வியாபார து}துக் குழுவொன்று தற்போது இங்கு வந்துள்ளது. இக்குழுவிலுள்ள தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனத்துடனேயே இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்திய வியாபார, கைத்தொழில் தொடர்பான அமைச்சர் ஜெயராம் ரமேஷ் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதில் இலங்கையின் சார்பில் தொழில் அபிவிருத்தி, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் சரத் அமுனுகவும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் சார்பில் அதன் பிரதித் தலைவர் ஆருண் நந்தாவும் இதில் கைச்சாத்திட்டனர்.

இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைக்கப்படவுள்ளது. இலங்கை முதலீட்டு சபை இதற்காக சுமார் 53 ஏக்கர் நிலத்தை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் ஒதுக்கியுள்ளது எனவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி தமிழ் இதை அப்பிடியே மாத்தி.. கட்டுநாயக்காவில் என்று மட்டும் எல்லோ போட்டிருக்கு......

யாரைக் காப்பாற்ற இது...??! அல்லது இரண்டு இடங்களும் பகிரப்பட்டுள்ளனவா...??!

தொழில்நுட்பப் பூங்கா அல்லது வர்த்தக மையம் அமைவது திருமலையின் வளர்ச்சிக்கு உதவும் தான். ஆனால் அதுவே பேரினவாதிகளுக்கும் ஆதிக்க சதிகளுக்கும் அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய என்று அமைவதை தடுக்கவும் வேண்டும்..!

இலங்கையில் நவீன தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை உருவாக்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா

ஒப்பந்தம் கைச்சாத்தான போது

இலங்கையில் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியில் நவீன தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை உருவாக்கும் நோக்கில் இந்தியாவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் இன்று இலங்கை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருக்கின்றது.

இலங்கைக்கு மூன்று நாட்கள் விஜமொன்றினை மேற்கொண்டிருக்கும் இந்திய இணை வர்த்தக அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் முன்னிலையில் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் சரத் அமுனுகமவும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் சார்பில் அதன் பிரதித் தலைவர் ஆருண் நந்தாவும் இன்று காலை இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைக்கப்படவுள்ள இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா குறித்து கருத்து வெளியிட்ட மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் பிரதித் தலைவர் ஆருண் நந்தா, இலங்கை முதலீட்டு சபை இதற்காக சுமார் 53 ஏக்கர் நிலத்தை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் ஒதுக்கியிருப்பதாகவும், இதன் நோக்கமெல்லாம் சர்வதேச தகவல் தொழில்நுட்ப கம்பனிகளை இந்தப் பிரமாண்டமான பூங்காவில் முதலீடு செய்வதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதாகும் என்று தெரிவித்தார்.

இது குறித்து மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.