Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தந்தை செல்வாவின் பாசறையில் வளர்ந்த மசூர் மௌலானா கிழக்கின் பெரும் சொத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை செல்வாவின் பாசறையில் வளர்ந்த மசூர் மௌலானா கிழக்கின் பெரும் சொத்து

[23 - February - 2008]

* ஹென்றி மகேந்திரன் பாராட்டு

தந்தை செல்வாவின் பாசறையில் வளர்ந்து இன்று இச்சபையின் பிரதி மேயராக பதவி வகிக்கும் மசூர் மௌலானா அவர்கள் கிழக்கிற்கு கிடைத்த பெரும் சொத்து என கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார்.

கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று 21 ஆம் திகதி இடம்பெற்றது. பிரதிமேயராக மசூர் மௌலான பதவியேற்றதைத் தொடர்ந்து மகேந்திரன் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த அமர்வு மாநகர மேயர் எம். அஜ்மீர் தலைமையில் நடைபெற்றது. அவசர வேலை நிமித்தம் அவர் சபையை விட்டு வெளியே சென்றதைத் தொடர்ந்து சபைக்கு மசூர் மௌலானா தலைமை தாங்கினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஹென்றி மகேந்திரன்;

தமிழ் பேசும் மக்களின் ஆதிக் கட்சியாகிய தமிழரசுக் கட்சியில் இருந்த மூத்த தலைவனின் அரசியல் வரலாற்றை நான் நன்கு தெரிந்து அறிந்து வைத்துள்ளேன். நான் எனது தாயின் கருவில் உருவாக முன்பே அரசியலில் பிரவேசித்தவர் மசூர் மௌலானா. இவர் பல தோல்விகளைச் சந்தித்தபோதும் தந்தை செல்வா இவருக்கு செனட்டர் பதவி வழங்கி கௌரவித்தார். அன்று பிரதேச வாதம் எனும் அரக்கன் உட்புகுந்ததால் தேர்தலில் தோல்விகளைச் சந்தித்தார். அத்தோல்வியையும் வெற்றியாக்கிய அவர் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் இருந்த காலத்தில் பல சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்தார்.

இன்று அவர் இந்த மேயர் ஆசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு நான் பெருமிதம் அடைகின்றேன். அவரது சேவை அவர் பிறந்த மண்ணுக்கே தேவையென்பதை அறிந்துதானோ என்னவோ இறைவன் இப்பதவியை இவருக்கு வழங்கியிருக்கின்றான். உங்களுக்கு வயது போய்விட்டது என்று மனம் தளரவேண்டாம். உங்களுக்கு இளைஞரின் சக்தி பலம் என்பன இருக்கின்றன.

இன்னும் காலம் உங்கள் பக்கமே உள்ளது." இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிக்கும் கூடிய நெருக்கம் உண்டு. உங்களுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் உள்ள உறவு தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள உறவு. ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும், உள்ள உறவு கணவருக்கும் மனைவிக்கும் உள்ள உறவு. எனவே, இவ்விரு கட்சிகளையும் உங்களால் மறக்க முடியாது. எமது இரண்டு கட்சிகளும் விரைவில் இணையும் காலம் நெருங்கிவிட்டது" என்றார்.

அங்கு உரையாற்றிய பிரதி மேயர் மசூர் மௌலானா எனது கரங்கள் கறை படிந்த கரங்கள் அல்ல. நான் களவெடுக்கவும் இல்லை. கடன் பெறவுமில்லை. இன்றும் நான் ஏழையாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். எனக்கென சொந்தமான வீடு இல்லை இவையொன்றையும் நான் தேடவில்லை.

நான் தேடியதெல்லாம் தமிழ்ப் பேசும் மக்களின் அன்பைத்தான். நான் இன்று சந்தோஷத்துடன் இச்சபைக்கு வந்திருக்கின்றேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். இம்மாநகர சபைக்கு 2006 ஆம் ஆண்டு போட்டியிட்டு இரண்டாவது அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகி சுமார் இரண்டு வருடங்களின் பின்னரே இச்சபைக்கு வரக் கிடைத்தது.

பேசத் தெரியும் என்ற காரணத்தினால் எல்லாவற்றையும் பேசிவிடக்கூடாது. பேச்சிலும், ஒரு ஒழுக்கமும் இருக்கவேண்டும். கட்டுப்பாடு வேண்டும். பேசுவதன் அடிப்படையில் நாம் செயற்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த மாநகர சபையை ஒரு சிறந்த மாநகர சபையாக செயற்படுத்த வேண்டும்.

உலகிலேயே மிகவும் வயது குறைந்த மேயராக எமது கல்முனை மாநகர சபை மேயர் எம். அஜ்மீர் திகழ்கின்றார். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; நடக்கப் போவது நல்லவையாக அமையட்டும் என்றார்.

thinakural.com

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை செல்வாவின் மகனே பல்டி அடிக்கிறார், அவற்ற பாசறையில் வளர்ந்தவராம், என்ன செய்வாரோ தெரியவில்லை. இப்படி தந்தை செல்வாவின்ர பாசறையில் வளர்ந்த பல கோடரிக் காம்புகளைப் பார்த்தாயிற்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.