Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுத்தம் மூலம் தமிழரை அடக்க அரசு முயலுமானால் சாவதேச ஆதரவு தமிழர் பக்கமே திரும்பும் - ஹரிஹரன்

Featured Replies

இலங்கை அரசு சிங்கள மேலாதிக்க உணர்வு காரணமாக யுத்தத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தித் தமிழ் மக்களை அடக்குவதற்கு முயன்றால் சர்வதேச உணர்வு இயல்பாகவே தமிழ் மக்கள் பக்கம் திரும்புமென இந்திய அமைதிப்படை காலத்தில் இலங்கையில் பணியாற்றிய முன்னாள் இந்தியப் புலனாய்வுத் துறை அதிகாரி கேணல் ஹரிகரன் தெரிவித்தள்ளார்.

கொசோவோவின் சுதந்திரப் பிரகடனம் விடுதலைப்புலிகள் போன்ற தனிநாட்டிற்காகப் போராடும் கெரில்ல இயக்கங்கள் மீது எத்தகைய செல்வாக்கைச் செலுத்தும் என்ற கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இப்படித் தெரிhவித்துள்ளர்.

விடுதலைப் புலிகளும் , தமிழ் அரசியல் வாதிகளும் முன்வைக்கும் தமிழீழக் கோரிக்கையிலிருந்து கொசோவோவின் ஒருதலைப்பட்ச சுதந்திப் பிரகடனம் முற்றிலும் மாறுபட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ர்ர்.

பால்க்கன் பிராந்தியத்தின் சேர்பியர்கள், குரோசியர்கள், அல்பேனியர்கள் போன்றவர்கள் மத்தியில் மதகலாசார, மொழி வேறுபாடுகள் காணப்பட்டன. உலக வல்லரசுகள் தமது நோக்கங்களை அடைவதற்கு இதனைப் பயன்படுத்தின. கொசோவோவின் சுதந்திரமும் இதன் வெளிப்பாடே எனத்தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியவை வருமாறு :-

கொசோவோவின் ஒருதலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனம் ஏனைய கிளர்ச்சிக் குழுக்களின் தலைவிதியை எவ்வாறு தீர்மானிக்கும் என்பதை எதிர்வு கூறுவது கடினமானது. ஏனேனில் அவை வித்தியாசமான நிகழ்ச்சி நிரலையும், பின்னணியையும், நடவடிக்கைச் சூழலையும் கொண்டுள்ளன.

குர்திஷ் கிளர்ச்சி அங்கு ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கிய தன்மையைக் கொண்டது.

பாகிஸ்தானின் பாலூச்சிஸ்தானில் பிரதேச பழங்குடி நெருக்கடிகளை; காணப்படுகின்றன.

காஷ்மீரில் செயற்படும் அநேக குழுக்களும் சுதந்திரத்தைத் தமது இலக்காகக் கெண்டிருக்கவில்லை.

இது விடுதலைப்புலிகளின் போரட்டத்திற்கும் பொருந்தும்.

தமிழர்களும் சிங்களவர்களும் நீண்ட காலமாக ஒன்றாக வாழ்ந்தவர்கள். 1973 வரை தமிழ்த் தாயகத்தை உருவாக்குவதற்கான கிளர்ச்சியேதுவும் காணப்படவில்லை.

அவ்வாறு காணப்படடிருந்தால் நீண்ட காலத்திற்கு முன்னரே இலங்கையின் சில பகுதிகளையும், இந்தியாவின் சில பகுதிகளையும் உள்ளடக்கி தமிழர்கள் தனிநாட்டை உருவாக்கியிருப்பார்கள்.

கொசோவோவின் சுதந்திரத்திற்கு அல்பேனியர்களின் போராட்டம் மாத்திரமல்லாது மேற்குலகின் ஆதரவும் முக்கிய காரணம்.

இலங்கை அரசு தற்போதைய யுத்தத்தை எவ்வாறு கையாள்கிறது என்பதே அனைத்தையும் தீர்மானிக்கும் விவகாரமாகும்.

யுத்தத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, சிங்கள மேலாதிக்க உணர்வு காரணமாகத் தமிழர்களை அடக்குவதற்கும் தனிமைப்படுத்துவதற்கும் இலங்கை அரசு முயலுமானால் சர்வதேச ஆதரவு தம் மக்கள் பக்கம் திரும்பும், இதற்கு கொசோவோ அவசியமில்லை.

அடுத்தாக சர்வதேச சட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறைகளில் பலவீனமான தேசங்கள் மீது பிரயோகிக்கப்படுகின்றன.

இவை அநேகமாக நாடுகளின் அதிகாரப் போட்டியின் பொது கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. கொசோவேவில் இது நிரூபிக்கபட்டுள்ளது.

அமெரிக்கவின் மனித உரிமை சாதனைகள் பரிசுத்தமானவையல்ல. எனினும் இதே மனித உரிமை குற்றச்சாட்டுகளை சுமத்தியே சேர்பியா மீது உலக நாடுகள் தமது விருப்பத்தினைத் திணித்தனர்.

இதற்குக் காரணம் அமெரிக்காவின் வெளிப்படையான ஆட்சி முறையுள்ளதும், சேர்பிளாவில் அவ்வாறு காணப்படாததுமேயாகும்.

இதன் காரணமாகவே சேர்பியாவிற்கு பல நண்பர்கள் காணப்படவில்லை. என்றார் அவர்.

நன்றி : சுடர் ஒளி

தமிழர்களும் சிங்களவர்களும் நீண்ட காலமாக ஒன்றாக வாழ்ந்தவர்கள்

ஊண்மைதான்... இந்தியா என்ற ஒரு தேசம் உருவாகமுன்னம் நாங்கள் ஒரே தீவில தான் வாழ்ந்தனாங்கள்... ஆனாலும் ஒண்டா வாழேல்ல.. இதை அன்னாருக்கு கூறிவைக்க விரும்ம்புகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.