Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப்புலிகளுக்காக கேரளாவில் தயாரான "மினி' கப்பலை இலங்கைக்கு கடத்த முயன்ற இருவர் திருச்சியில் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளுக்காக கேரளாவில் தயாரான "மினி' கப்பலை இலங்கைக்கு கடத்த முயன்ற இருவர் திருச்சியில் கைது

3/4/2008 8:15:51 PM

வீரகேசரி இணையம் - கேரளாவில் சிறிய ரக கப்பலைத் தயாரித்து இலங்கைக்கு கடத்த முயன்ற புலிகள் ஆதரவாளர்கள் இருவரை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்தனர். திருச்சி கே.கே. நகரில் உள்ள அண்ணாசிலை அருகே விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 2 பேர் நின்று கொண்டிருப்பதாக "கியூ' பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று 2 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இலங்கையைச் சேர்ந்த பிரேம்ராஜ் என்ற துரைக்குட்டி எனவும் மற்றையவர் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த குமார் என்ற டீசல் குமார் எனவும் தெரிய வந்தது.

டீசல் குமார் என்பவர் இராமேஸ்வரம் அகதிகள் முகாமில் வசித்து வந்தார். பொலிஸாரிடம் பிரேம்ராஜ் அளித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒரு முறை இலங்கை சென்றிருந்த என்னை கடற் புலிகளின் தலைவர் சூசை சந்தித்து பேசினார். ""எங்கள் இயக்கத்திற்கு நவீன வசதிகள் கொண்ட சிறிய ரக கப்பல் தேவைப்படுகிறது. அதனை நீ தான் தயாரித்து தர வேண்டும்'' என சூசை கூறினார்.

இதற்காக இலங்கையில் இருந்து ஹவாலா மூலம் 30 இலட்சம் ரூபா பணம் பெற்றேன். கேராளாவில் முனம்பு என்ற இடத்தில் உள்ள படகு தயாரிக்கும் நிறுவனத்துக்கு சென்று, 65 அடி உயரமும் 72 அடி நீளமும் கொண்ட படகை செய்வதற்காக 20 இலட்சம் ரூபா முற்பணமாக கொடுத்தேன். அந்த படகை இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை கொண்டு செல்ல டீசல் குமாருக்கு 1 இலட்சம் ரூபா பணம் கொடுத்தேன். படகு கட்டுமானப் பணிகள் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்காக கேரளாவில் கட்டப்பட்டு வந்த படகு பறிமுதல்

வியாழக்கிழமை, மார்ச் 6, 2008

கொச்சி: விடுதலைப் புலிகளுக்காக கேரளாவில் கட்டப்பட்டு வந்த பெரிய இயந்திரப் படகை தமிழக கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

சமீபத்தில் திருச்சியில் இலங்கைத் தமிழரான பிரேம்ராஜ் உள்ளிட்ட இருவர் பிடிபட்டனர். அவர்களிடம் கியூ பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் இருவருக்கும் கடற்புலிகள் பிரிவினருடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் பரத்சந்திரன் தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படை கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள முனம்பம் என்ற இடத்திற்கு விரைந்தது.

அங்கு சுதா படகு கட்டும் இடத்திற்குச் சென்ற தமிழக போலீஸ் குழு அங்கு கட்டப்பட்டு வந்த படகைப் பறிமுதல் செய்தது. இந்தப் படகு விடுதலைப் புலிகளுக்காக கட்டப்பட்டு வந்ததாகும்.

படகு என்று கூறப்பட்டாலும் கூட இது சிறிய கப்பல் போல பிரமாண்டமாக உள்ளது. கட்டப்பட்டு முடியும் தருவாயில் அந்தப் படகு இருந்தது.

இந்தப் படகு கட்டும் நிறுவனத்தை இஸ்மாயில், கோயா, முரளி ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் ஊழியரான ஜோசப் பென்னி என்பவர் இதுகுறித்துக் கூறுகையில் கோயா, முரளி சொல்லித்தான் இந்தப் படகை கட்டி வந்தோம். இது விடுதலைப் புலிகளுக்காக ஆர்டர் கொடுக்கப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியாது என்றார் அவர்.

இந்தப் படகை கட்டுவதற்காக ரூ. 50 ஆயிரம் முன்பணமாக கொடுக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

படகைக் கைப்பற்றிய தமிழக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கடும் கெடுபிடிகள் நிலவுவதால், தங்களது செயல்பாடுகளை கேரளாவுக்கு புலிகள் மாற்றி விட்டதாக சமீப காலமாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால் இதை கேரள அரசு மறுத்து வந்தது. ஆனால் தற்போது பெரிய அளவிலான படகு ஒன்று புலிகளுக்காக கட்டப்பட்டு வந்துள்ள தகவல் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2008/03...at-for-ltt.html

  • கருத்துக்கள உறவுகள்

சூசையை உது தொடர்பில் விசாரிக்க முடியாது என்று இந்திய மக்களுக்கு தெரியும் தானே. அப்ப சூசை சொன்னார் என்று சொல்ல வைக்கிறது.. றோவுக்கு தெரியாத விசமோ என்ன. :D

இவை அனைத்தும் மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடும் வகையில் றோ செய்யும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைளே தவிர.. சொந்தப் படகு கட்டிற புலிக்கு மினிக் கப்பல் கட்டத் தெரியாதாம்..! :D:rolleyes:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.