Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலையை ரசிக்க வேண்டும் கலைஞர்களை மதிக்க வேண்டும் -பாம்பே ஜெயஸ்ரீயின் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலையை ரசிக்க வேண்டும் கலைஞர்களை மதிக்க வேண்டும் -பாம்பே ஜெயஸ்ரீயின் பேட்டி

-எம்.சாந்தி-

`வசீகரா என் நெஞ்சினிற்க...' என்ற பாடல் மூலம் பல உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பின்னணிப் பாடகி பம்பாய் ஜெயஸ்ரீ அண்மையில் இலங்கை வந்திருந்த போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடனான நேர்காணல் இதோ....

கேள்வி: எப்படி இந்தத் துறையில் வந்தீர்கள், எத்தனை வயதிலிருந்து இசையை கற்று வருகிறீர்கள், எத்தனை வருடங்களாக இத்துறையில் இனிதே தடம் பதித்து வருகிறீர்கள் என்பதைப் பற்றிச் சொல்லுங்கள்?

பதில்: நான் 3 வயதிலிருந்தே இசையை பயில ஆரம்பித்து விட்டேன். எனது அப்பா சுப்பிரமணியம், அம்மா சீதா சுப்பிரமணியம் இருவருமே சங்கீத ஆசிரியர்கள். சிறுவயதிலே கற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டதால் பாடசாலைகளிலும் வெவ்வேறு போட்டி நிகழ்ச்சிகளிலும் பாடிக் கொண்டிருந்தேன். 25 வருடங்களாக நிரந்தரமாக கர்நாடக இசைக்கச்சேரிகளை நடத்தி வருகிறேன்.

கேள்வி: உங்களுடைய இந்த கலை வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றவர்கள் யார்?

பதில்: எனது தாயார் தான். அவருடைய விருப்பமே என்னை இந்தளவிற்கு உயர்த்தியது. இப்போது எனது கணவரும் அதிக உற்சாக மூட்டி வருகிறார். என்னைச் சுற்றி எல்லோருமே எனக்கு நல்ல ஆதரவு தருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

கேள்வி: கர்நாடக கச்சேரிகளில் பாடிவந்த உங்களுக்கு எப்படி மின்னலே சினிமா படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது ?

பதில்: இல்லை, நான் மின்னலே திரைப்படத்திற்கு முன்பே பல திரைப்படங்களில் பாடியுள்ளேன். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா சேரோட இசையில் நிறைய ஜிங்கல்ஸ் செய்துள்ளேன். பிறகு மணிரத்தினம் சேரோட இருவர் என்ற படத்தில் `நறுமுகியே நறுமுகியே' என்ற பாடல் பாடினேன். ஏ.ஆர்.ரகுமானுடைய ஜிங்கல்ஸ் மாத்திரம் 1000 இற்கும் மேல் செய்து கொடுத்திருக்கிறேன். ஆனால், மின்னலே திரைப்படப் பாடல் அதிக வரவேற்பு பெற்ற பாடல். அதனைத் தொடர்ந்து வந்த எனது பாடல் அனைத்தும் வெற்றி. `காக்க காக்க' திரைப்படத்தில் இடம் பெற்ற `ஒன்றா இரண்டா ஆசைகள்... ' என்ற பாடல் விருது பெற்ற பாடல். இப்படிப் பாடல்கள் சில திரைப்படத்திற்காக பாடினேன். ஆனால், திரைப்பாடல்கள் என்று பார்த்தால் நான் ஒரு பத்து பாடல்கள் மட்டில் தான் பாடியிருக்கிறேன்.

கேள்வி: இவ்வளவு நல்ல குரல்வளமும் சங்கீத தேர்ச்சியும் பெற்ற நீங்கள் குறுகிய பாடல்களிலேயே ஏராளமான ரசிகர்களையும் கொண்டவர். ஏன் திரைப்படப் பாடல்களில் தங்களை முற்றும் முழுதாக ஈடுபடுத்தக் கூடாது?

பதில்: சங்கீதம் என்பது ஒரு கலை. இது எமக்கு கடவுள் கொடுத்த வரம் என்று கூடச் சொல்லலாம். இதை அநியாயமாக வீணாக்க நான் விரும்பவில்லை. பாட்டு என்று கூறி கத்து கத்துன்னு கத்துவதில் என்ன இலாபம். இசையை இரசிக்க வேண்டும், அதை பாடுபவர்களும் மதிக்க வேண்டும். உண்மையில் எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. அவற்றைப் பார்த்து நான் நிராகரிப்பது தான் அதிகம். சிலவற்றை பார்த்தால் இரட்டை அர்த்தங்களாக இருக்கும். சிலவற்றைப் பார்த்தால் எமக்கே இரசிக்கத் தோன்றாது. பிறகெப்படி இரசிகர்களை கவர முடியும் என்று எமக்கே தோன்றும். அதனாலும் பல பாடல்கள் பாட மறுத்துவிட்டேன்.

கேள்வி; ஆனால், காக்க காக்க படத்தில் வரும் பாடலும் மெலோடியுடன் கேட்கும் போது ஒரு மாதிரியாகத்தானே தோன்றுகிறது?

பதில்: இல்லை, நான் முதலிலேயே சொன்னேன், பாடுபவர்கள் ரசிக்க வேண்டும், மதிக்க வேண்டும் என்று. அது அழகான காதல் பாடல். அத்தோடு அந்தப் பாடலில் பின்னணி குரலுக்கு முக்கியத்துவம் வழங்கியிருந்ததை நீங்கள் அவதானித்திருப்பீர்களே.. இந்த காரணத்திற்காக தான் நான் அந்தப் பாடலை விரும்பி ஏற்றுக்கொண்டேன்.

கேள்வி: சபாக்களில் பாடுவதையா, திரைப்படத்திற்காப் பாடுவதையா அதிகம் விரும்புகின்றீர்கள்?

பதில்: (சிரிக்கிறார்) நான் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மேடைக் கச்சேரிகள் செய்திருக்கின்றேன். திரைப்படத்தில் மிகக் குறுகிய பாடல்களே பாடியிருக்கிறேன். இப்போது தெரிகிறதா நான் மேடை நிகழ்ச்சிகளை தான் அதிகம் விரும்புகிறேன் என்று.

கேள்வி: காரணம் என்ன....

பதில்: காரணம்... மேடை நிகழ்ச்சிகளில் எமது ரசிகர்களை நேருக்கு நேர் சந்தித்து பாடும் போது அவர்களுடைய முகங்களில் தெரியும் சந்தோஷமும், அவர்கள் ரசிக்கும் விதமும் எம்மை உற்சாகப்படுத்த எமக்கு வழங்கும் கைதட்டல்களுமே எம்மை பெரிதும் பரவசப்படுத்துகிறது. நாலு சுவருக்குள் (ரெக்கோர்டிங் ரூம்) ஒரு மணி நேரத்தில் ஒரு சில பாடல்களை பாடிவிட்டு இலட்சக் கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு வந்தாலும் கிடைக்காத சந்தோஷம் மேடைக் கச்சேரிகளில் இரசிகர்களை மகிழ்விப்பதில் கிடைக்கிறது.

கேள்வி: சரி ரசிகர்களை மகிழ்விப்பது பற்றி கூறினீர்கள். இலங்கை ரசிகர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: நான் எத்தனையோ நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறேன். ஆனால், இலங்கையில் இருக்கும் ரசிகர்களை போல் நான் எங்கும் பார்த்ததில்லை. பல ஐரோப்பிய நாடுகளிலும் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து சென்ற தமிழர்களே எம்மை அழைக்கின்றனர். ஆனால், அங்கெல்லாம் அவர்களுடைய வேலைப் பளு காரணமாக ஓடிக் கொண்டிருப்பார்கள். இலங்கைக்கு நான் இந்தத் தடவையுடன் ஏழாவது முறையாக வருகிறேன். ஐந்து தடவையும் கம்பன் கழக நிகழ்வுக்காக என்னை அழைத்திருந்தார்கள். நாங்கள் மேடையில் ஏறினதுமே அனைவரும் அமைதியாக இருந்து எமது நிகழ்ச்சிகளை இரசிப்பார்கள். இடையில் எழுந்து போவதோ இல்லை. வேறு யாருடனாவது பேசிக் கொண்டிருப்பதையோ நான் பார்த்ததில்லை. இவர்கள் இரசிக்கும் விதமும் கலைஞர்களுக்கு கொடுக்கும் மதிப்பும் உண்மையிலேயே சொல்கிறேன், எனது சங்கீதத்தின் சாட்சியாக சொல்கிறேன், என்னால் எப்போதுமே இலங்கை ரசிகர்களை மறக்க முடியாது.

கேள்வி; நீங்கள் சங்கீத வகுப்புகள் நடத்தி வருகிறீர்களா? உங்களுடைய மாணவ, மாணவியரை எவ்வாறு ஊக்கப்படுத்துகிறீர்கள்?

பதில்: வகுப்புகள் நடத்தி வருகிறேன். திறமையான மாணவிகள் படிக்கிறார்கள். அவர்களும் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் பாடிவர தயார்ப்படுத்துகிறேன்.

கேள்வி: உங்களுக்கு கிடைத்த விருதுகள் பற்றி..

பதில்: நிறைய கிடைத்திருக்கிறது. ஜனாதிபதி அப்துல் கலாமிடம் இருந்தும் வாஜ்பாய் அவர்களிடமிருந்து என பல விருதுகள் எனக்கு கிடைத்திருக்கின்றன.

கேள்வி: இசை இறுவட்டுகள் வெளியிட்டுள்ளீர்கள். அது பற்றி...

பதில்: நான் பாடிய திருக்குறள், பக்தி கீதங்கள் என சில வெளிவந்துள்ளன.

கேள்வி: சமீபத்தில் ஏதேனும் புதிய படத்தில் பாடினீர்களா?

பதில்: `பச்சைக் கிளி முத்துச்சரம்' என்ற படத்தில் பாடியுள்ளேன்.

கேள்வி: உங்கள் குடும்பம் பற்றி...

பதில்: எனது கணவர் அவருடைய குடும்பம் எப்போதுமே என்னை உற்சாகப்படுத்துபவர்கள். எனக்கு ஒரே ஒரு மகன் அவனும் இசை கற்று வருகிறான்.

கேள்வி: இலங்கை ரசிகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

பதில்: இந்த நல்ல மனிதர்கள் இங்கு நடக்கும் யுத்தம் காரணமாக தமது சொந்த இடங்களையும், உறவுகளையும் விட்டு வெவ்வேறு நாடுகளில் சென்று கஷ்டப்பட்டு காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய இந்த அவல நிலை மாறி இந்நாட்டில் சாந்தியும் சமாதானமும் கிடைத்து அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே நான் இறைவனிடம் கேட்கும் பிரார்த்தனை.

http://www.thinakkural.com/news%5C2007%5C3...nday/page25.htm

பேட்டி எடுக்கும் நபர் பேட்டி எடுக்கப்படுபவரைப்பற்றி முதலில் அறிந்து கொள்ளவேண்டும். பிறகு தான் பேட்டிக்கு போகவேண்டும். ஜெயஸ்றீயின் முதல் சினிமா பாடல் எது என்றுகூடத்தெரியாமல் போயுள்ளார். இதுவே வேறு கலைஞர்கள் என்றால் பேட்டியை அத்தோடு முடித்திருப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.