Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களில் காந்த குண்டுகளை பொருத்த புலிகள் திட்டம்- இராணுவ பேச்சாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களில் காந்த குண்டுகளை பொருத்த புலிகள் திட்டம்- இராணுவ பேச்சாளர்

3/6/2008 9:56:27 AM

வீரகேசரி இணையம் - கொழும்பு நகரில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் காந்தங்களைப் பயன்படுத்தி குண்டுகளைப் பெருத்த புலிகள் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் மூலம் அரசாங்கத்துக்குத் தெரியவந்துள்ளதாகவும் இது குறித்து வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக விளக்கமளிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எந்தவகையிலாவது கொழும்பில் குண்டுத் தாக்குதல்களை நடத்தி நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்த விடுதலை புலிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். படையினர் அண்மையில் கொழும்பில் நடத்திய தேடுதலின்போது காந்தங்கள் பொருத்தப்பட்ட சிறிய ரக குண்டுகள் மீட்கப்பட்டன. இவ்வாறான குண்டுகளை அவர்கள் கொழும்பில் தனியான இடங்களில் நிறுத்தி வைக்கும் வாகனங்களில் மிக இலகுவாகப் பொருத்திவிடமுடியும்.எனவே கொழும்பில் தனியான இடங்களில் வாகனங்களை நிறுத்தி வைப்பவர்கள் தமது வாகனத்தை மீண்டும் இயக்க முன்னர் அதனை நன்கு பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மின்மாற்றிகளில் குண்டுகளைப் பொருத்தும் நடவடிக்கைகளிலும் புலிகள் ஈடுபட்டுள்ளனர். புத்தளம் பிரதேசத்திலேயே இவ்வாறான முயற்சிகள் அதிகம் நடைபெற்று வருகின்றன.கடந்த சில தினங்களில் புத்தளம் பிரதேசத்தில் 6 குண்டுகள் மின்மாற்றிகளில் புலிகளால் பொருத்தப்பட்டன. அவற்றில் 2 குண்டுகள் வெடித்தன. ஏனைய 4 குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டன. மின் மாற்றிகள் வெடித்துச் சிதறினால் இருளில் மூழ்கி அவதிப்படவேண்டியது அப்பாவிப் பெது மக்களே. எனவே இவ்வாறான நாசகாரச் செயல்கள் நடைபெறுவதைத் தடுக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதய நாணயக்காரவுக்கு ஒரு ஆலோசனை

வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்தால்தானே புலிகளால் காந்த குண்டுகளை பொருத்தமுடியும்

நீங்கள் வண்டிகளை நிறுத்தாமல் ஓடிக்கொண்டிருக்க வேண்டும் என்று புதிய சட்டத்தை கொண்டு வந்தால் புலிகளால் வண்டிகளில் குண்டுகளை பொருத்த முடியாது.(ஜே.வி.பியினரும் இதை ஆதரிப்பார்கள்.)

மின் மாற்றிகளை நீங்கள் கழட்டி பாதுகாப்பாக இராணுவ முகாம்களில் வைத்துவிட்டால் அவற்றிலும் புலிகளால் குண்டுகளை பொருத் தமுடியாது.

மாதனமுத்தாக்களே யோசியுங்கள். இதையெல்லாம் செயற்படுத்த புதிய சட்டங்களை கொண்டு வாருங்கள்.

:rolleyes::D:D:D:D:D:D:D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

காந்தக் குண்டுகளைப் பயன்படுத்தி தலைநகரில் தாக்குதல் நடத்த விடுதலைப்புலிகள் திட்டம்

[06 - March - 2008]

* விழிப்புடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தல்

எம்.ஏ.எம். நிலாம்

விடுதலைப்புலிகள் தலைநகரில் காந்தக் குண்டுகளைப் பயன்படுத்தி பெரும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் மூலம் தெரியவந்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் அரசாங்கம், இவ்விடயத்தில் பொது மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென எச்சரித்துள்ளது.

அத்துடன், பிரதான நகரங்களில் மின்மாற்றிகளை குண்டு வைத்துத் தகர்க்கும் முயற்சிகளிலும் புலிகள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு நிலைவரங்களை விளக்கும் செய்தியாளர் மாநாட்டில் தேசிய பாதுகாப்புப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

தலைநகர் கொழும்பில் பிரதான வாகனத் தரிப்பிடங்களை இலக்குவைத்து விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். வீதிப்போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், பாதுகாப்புத் காரணங்களுக்காவும் வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடைசெய்து தனியார் மற்றும் அலுவலக ஊழியர்கள், அதிகாரிகளின் வாகனங்களை நிறுத்துவதற்காக கோட்டை, புறக்கோட்டை உட்பட தலைநகரில் பல இடங்களில் விஷேட வாகனத்தரிப்பிடங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன.

இந்தத் தரிப்பிடங்களில் தமது வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்வோர் வாகனங்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே அங்கிருந்து செல்ல வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

விடுதலைப்புலிகள் தெற்கில் பாரிய தாக்குதல்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் மூலம் அறிந்துகொள்ளக் கிடைத்துள்ளது. வாகனத் தரிப்பிடங்களில் விட்டுச் செல்லும் வாகனங்களில் புலிகள் காந்தக்குண்டுகளைப் பொருத்தும் புதிய உத்தியொன்றைக் கையாளத் திட்டமிட்டுள்ளனர். வாகனங்களின் மறைவிடங்களில் இந்த காந்தக் குண்டுகளை பொருத்தி பேரழிவுகளை ஏற்படுத்துவதில் புலிகள் ஈடுபட்டிருக்கின்றனர்.

வாகனங்களை விட்டுச் செல்லும்போதும், திரும்பி வந்து வாகனங்களை எடுத்துச் செல்லும் போதும் வாகன சாரதிகளும் உரிமையாளர்களும் விழிப்புடன் செயற்பட வேண்டும். சுய சோதனைக்குட்படுத்தப்பட்ட பாதுகாப்பை உறுதிசெய்து கொண்ட பின்னரே வாகனங்களில் ஏறுமாறு பாதுகாப்புத் தரப்பு கேட்டுக்கொள்கிறது.

வடக்கிலும், கிழக்கிலும் மிக மோசமாக பலவீனமடைந்திருக்கும் விடுதலைப்புலிகள் மீண்டும் தெற்கில் தம் கைவரிசையைக் காட்ட முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அண்மையில், புத்தளம் பகுதியில் 6 மின்மாற்றிகளை குண்டு வைத்துத் தகர்க்க முற்பட்டனர். அதில் இரண்டு மின்மாற்றிகள் தாக்கி அழிக்கப்பட்டன. நான்கை படைத்தரப்பினர் காப்பாற்றிவிட்டனர்.

இதேபோன்று பிரதான நகரங்களில் தொடர்ந்து குண்டுவைத்து மின்மாற்றிகளை அழிக்கவும் புலிகள் திட்டமிட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவ்விடயங்களில் பொதுமக்கள் மிகவும் விழிப்புடனிருந்து பேரழிகளைத் தவிர்ப்பதற்கு பாதுகாப்புத் தரப்புக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

http://www.thinakkural.com/news/2008/3/6/i...s_page47057.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.