Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண்கள் நாள் மார்ச் -8

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று இணைய உலா வந்தபோது கொஞ்சம் விதியாசமானதான பதிவர் பக்கத்தைப் பார்க்க முடிந்தது.

இதனை மகிளிர் நாளின் முக்கியத்துவம் கருதி இதில் பதிவிடுகிறேன்.

கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா..? - ஆழிக்கரைமுத்து

நமது மக்கள் இந்தக் கேள்வியை விடையில்லா கேள்வி என்பார்கள்..... பகுத்தறிவுக்கண்கொண்டு கண்டால் இவ்வுலகில் விடை இல்லாதது எதுவுமே இல்லை.

பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு உயிரினமும் படிப்படியாகத் தோன்றின. இந்த பூமிப்பந்தானது கதிரவனிடம் இருந்து வந்தபொழுது கதிரவனைப்போல் மிகவும் வெப்பமாக இருந்தது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்பு புவியின் மேல் பகுதி குளிர்ந்தது. உட்பகுதி வெப்பமாகவே இருந்தது. அந்த வெப்பமும் குளிரும் சேரும் இடத்தில் ஒரு ஆற்றல் உருவாகிறது. அதுவே முதல் உயிரின செல். இரண்டு எதிரெதிர் ஆற்றல்கள் இணையும் இடத்தில் ஒரு ஆற்றல் உருவாகும் என்பது உண்மை. ( (+ve) +(-ve) = energy). காலநிலை சுற்றுப்புற மாற்றங்களால் வெவ்வேறான உயிரினங்கள் தோன்றின.

அதில் ஒரு உயிரினம்தான் கோழியும். கோழியிலிருந்துதான் முட்டை வரமுடியும். கோழி ஒரு பெண் இனம். பெண் இனத்துக்கே படைக்கும் ஆற்றல் உண்டு.

உலகில் முதன்முதலில் தோன்றிய உயிரினம் பெண் இனமே. பெண்களே இவ்வுலகை படைத்தவர்கள். ஆனால் நமது சமுதாயம் பெண்களை ஒடுக்கியே வருகின்றது. ஏனென்றால் பெண்களை அடிமைப்படுத்துவதற்கு அனைத்து மதங்களும் முன்னிலையில் நிற்கின்றன.

பெண்களும் அம்மதங்களில் மயங்கியே வாழ்ந்தூவருகின்றனர்.

பைபிளில் ஆதாமின் எலும்பிலிருந்து பெண்ணை கடவுள் படைத்தார் என்று அறிவிற்கு ஒவ்வாத கற்பனை கதை உள்ளது. பெண்களை அடிமைப்படுத்தவே அனைத்து மதங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. குரானிலும், பைபிளிலும் மற்றும் இந்து மத மனுதர்மத்திலும் பெண்ணை இழிவான பிறவியாகவே குறிக்கின்றன. இந்த உண்மையை அறியாதவரை பெண்கள் தங்கள் விடுதலையை அடையமுடியாது.

கடவுள் மத மூடத்தனங்களை என்று நம் பெண்கள் எதிர்த்துவெளியேறுகிறார்களோ அன்றுதான் பெண்கள் தங்கள் விடுதலையின் முதல்படியில் காலெடுத்து வைக்க இயலும்.

வரும் காலத்தில் ஆணின் உதவியில்லாமல் பெண்ணின் மேற்புறத்தோலில் இருந்தே ஆண் கருவை உருவாக்கி பெண்கருவுடன் இணைத்து குழந்தையை உருவாக்க இயலும் என்ற உண்மையை பல்கலைக்கழக ஆராய்ச்சியில் நிரூபித்துள்ளனர்.

ஆண்களைவிட பெண்களே வலிமையுள்ளவர்கள் என்பதை உலகத்தின் பல பகுதிகளில் பெண்கள் நிரூபித்துவருகின்றனர். அதிலும் சிறப்பாக தமிழ் பெண்கள் தங்கள் திறமைகளை நிரூபித்துவருகின்றனர். ஆனால் நம் ஆணாதிக்க மதவாத மக்கள் இருட்டடிப்பு செய்து வருகின்றனர்.

பெண்களே உங்கள் விடுதலை உங்கள் கைகளில்தான். உங்கள் விடுதலைக்கு நீங்கள்தான் போராட வேண்டும் எங்களால் உதவ மட்டுமே முடியும்.

பெண்கள் இட்ட பிச்சைதான் ஆண்கள்.

ஆதிபகவன் முதற்றே உலகு என்பது போல் பெண் முதற்றே இவ்வுலகு என்பதை விளங்கச்செய்வோம் இவ்வுலகுக்கு.

" ஒடுக்குமுறைகளை தகர்ப்போம் பெண்விடுதலையை வெல்வோம்"

நன்றி: ஆழிக்ரையிலிருந்து (பதிவர் பக்கம்)

* http://aazhikkarai.blogspot.com/2008/03/blog-post_3050.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்களது ஆளுமைத் தூண்டும் வகையிலான இவ்வாக்கம் கவனம் கொள்ள வைக்கிறது.

இணைப்பிற்கும் வித்தியாசமான தேடல் பதிவிற்கும் நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.