Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திபெத்தில் தனிநாடு கோரி கலவரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திபெத்தில் தனிநாடு கோரி கலவரம் ; புத்த துறவிகள் மீது சீன ராணுவம் துப்பாக்கி சுடு : 7 பேர் பலி

திகதி : Saturday, 15 Mar 2008, [saranya]

1950 முதல் திபெத் சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறது. தனிநாடு கோரி திபெத்தியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். புத்த துறவிகளும் திபெத்தை தனிநாடாக அறிவிக்க கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

திபெத்தின் லாசா நகரில் சீன அரசை கண்டித்தும் தனிதிபெத் கோரியும் போராட்டம் நடந்தது. இதில் புத்த துறவிகளும் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் போதுகலவரம் வெடித்தது. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கலவரத்தை தடுக்க ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

இந்த கலவரம், துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலியானார்கள். இந்த கலவரத்தை தீபெத்தின் புக்த மதத் தலைவர் தலாய் லாமா தான் தூண்டி விட்டதாக சீனா புகார் கூறியுள்ளது.

தீபெத் பிரச்சினைக்கு தீர்வுகாண தலாய்லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி சீன அரசை அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது.

http://www.newsonews.com/index.php?subacti...amp;ucat=1&

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் தீப ஓட்டம்: எவரெஸ்டில் ஏறத் தடை

எவரெஸ்ட் சிகரத்தில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்ல சீன அரசு முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, மலையேற்ற வீரர்கள் எவரெஸ்டில் ஏற மே 10ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடை கடந்த 10ம் தேதி முதல் அமலாகியுள்ளது.

திபெத் தன்னாட்சி பகுதி மலையேற்ற கூட்டமைப்பின் சார்பில் 10ம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்ட குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையேற்றத்தால் எவரெஸ்ட் சிகரத்திற்கு செல்லும் வழிப்பாதைகளில் அதிக நெரிசல் ஏற்படும் என்றும், இதனால் ஒலிம்பிக் ஜோதியை சிகரத்திற்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால் மலையேற்றத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீபெத்தில் அதிகரித்து வரும் பதற்ற சூழ்நிலையின் போது 100 பேர் பலி நாடு கடந்து வாழும் தீபெத் அதிகாரிகள் தெரிவிப்பு

3/16/2008 6:29:50 PM

வீரகேசரி நாளேடு - சீன ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீபெத்தியர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து நிலவிய பதற்ற சூழ்நிலையின் போது, குறைந்தது 100 பேர் பலியாகியுள்ளதாக இடம்பெயர்ந்து வாழும் தீபெத் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும் சீன அரசாங்கமானது 10 பேர் மட்டுமே இறந்துள்ளதாக அறிக்கையிட்டுள் ளது.

மேலும் சீனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் சரணடைவதற்கு, இன்று திங்கட்கிழமை வரை தீபெத்திலுள்ள சீன அதிகாரிகளால் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாதுகாப்புக்கான மக்களின் போரொன்றை சீன அதிகாரிகள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.

தீபெத்தின் தலைநகர் லஹாஸாவிலான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு நேற்று சனிக்கிழமை 200 இராணுவ வாகனங்கள் அந்நகரெங்கும் வலம் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு வாகனமும் 40 முதல் 60 வரையான ஆயுதம் தாங்கிய படையினரை உள்ளடக்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் ""எதிரிகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருங்கள். ஒழுங்கைப் பேணுங்கள்'' என வலியுறுத்தி ஒலிபெருக்கிகள் மூலம் நகரெங்கும் அறிவிப்புச் செய்யப்பட்டன.

இந்நிலையில் நாடு கடந்த நிலையில் இந்தியாவில் வாழும் தலாய் லாமா, சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள தீபெத்திய பிராந்தியம் தொடர்பான தமது கொள்கைகளை சீனா மாற்றிக் கொள்ளத் தவறும் பட்சத்தில் அப்பிராந்தியத்தில் மேலும் பல உயிரிழப்புகள் நேரிடலாம் எனத் தான் அஞ்சுவதாக கூறினார்.

தீபெத்தின் தலைநகரில் நிலவி வரும் பதற்ற சூழ்நிலையையடுத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை அங்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

என்ன? திபெத்திலையும் புலிகளா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‌திபெ‌த்து‌க்கு‌ள் நுழைய அய‌ல்நா‌ட்டின‌ரு‌க்கு தடை: சீனா!

திபெ‌த்‌தி‌ல் ஏ‌ற்ப‌ட்ட கலவர‌த்தையடு‌த்து அய‌ல் நா‌ட்டின‌ர் அ‌ங்கு நுழைய ‌சீனா அரசு தடை ‌வி‌தி‌த்து‌ள்ளது.

‌சீனா‌வி‌‌ன் ‌பிடி‌யி‌ல் உ‌ள்ள ‌திபெ‌த்‌தி‌ல் பு‌த்த ‌‌பி‌ட்சுகளு‌ம், ம‌க்களு‌ம் ‌விடுத‌லைகோ‌ரி போரா‌ட்ட‌ம் நட‌த்‌தி வரு‌கிறா‌ர்க‌ள். கட‌‌ந்த வெ‌‌‌ள்‌ளி‌க்‌கிழமை இ‌ந்த போரா‌ட்ட‌ம் கலவரமாக வெடி‌த்தது. அ‌ப்போது ஆ‌ர்‌‌ப்பா‌‌ட்ட‌க்கார‌ர்‌க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இறந்தாலும் திபெத் போராட்டம் ஓயாது: தலாய்லாமா அறிவிப்பு

திகதி : Saturday, 22 Mar 2008, [saranya]

திபெத்தில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து புத்த மத தலைவர் தலாய்லாமா ஒரு ஆங்கில வாரபத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-சீனாவில் இருந்து விடுதலை பெற்று தனி நாடாக செயல்பட திபெத்தியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

திபெத்திய இளைஞர்க ளிடம் இந்த உணர்வு அதிகம் காணப்படுகிறது. நான் இறந்து விட்டாலும் இந்த போராட்டம் ஓய்ந்து விடும் என்று சீனா நினைக்க வேண்டாம். நான் இறந்து விட்டால் இந்த போராட்டம் ஓயாது இன்னும் அதிகரிக்கும்.

திபெத் சீனாவின் ஒருங் கிணைந்த பகுதி என்று நாள் ஒருபோதும் கூறமுடியாது. அப்படி நான் கூறினால் மக்கள் என்னை பார்த்து சிரிப்பார்கள்.திபெத்தை சீனா ஆக்கிரமித்தது உள்ளது.

திபெத் தனிநாடாக ஆனால் சீனாவுடன் பகையாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் அல்ல. இரு நாடுகள் நட்புடன் செயல்படமுடியும். ஐரோப்பிய 念2985;ியனில் பல்வேறு நாடுகள் ஒற்றுமையமாக செயல்பட்டு வருகின்றன.

இவ்வாறு தலாய்லாமா கூறினார்.

http://www.newsonews.com/index.php?subacti...amp;ucat=1&

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.