Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கா மீது சீறும் இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2008-03-16

அமெரிக்கா மீது சீறும் இலங்கை

உண்மையைக் கூறினால் பலருக்கும் பிடிப்பதில்லை. இது பொதுவான பண்பியல்புதான்.

அதுவும் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தைக் கையாள்வதில் பொய்ப்புளுகு புரட்டுப் பிரசாரத்தில் காரியங் களை நகர்த்தும் கொழும்புக்கு உண்மை வெந்தணலாகச் சுடு கின்றது. அதனால் இலங்கை இனப்பிரச்சினை பற்றிய உண் மைகளை அம்பலப்படுத்தும் தரப்புகள் மீது சீறிப் பாய்கின்றது கொழும்பு அரசு.

உண்மைகளை நிஜத்தை யதார்த்தத்தை வெளிப் படுத்தி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டும் தரப்புகள் மீது தாரதம்மி யம் பார்க்காமல் சீறி விழுகின்றது இலங்கை அரச நிர்வாகம்.

இந்த வரிசையில் இப்போது கொழும்பின் பாய்ச்சலுக்கும், ஏச்சுக்கும் இலக்காகியிருப்பது அமெரிக்கா.

இலங்கை நிலைவரம் பற்றிய அமெரிக்காவின் பக்கச்சார் பற்ற அவதானிப்பு அறிக்கையே கொழும்பை கடும் சீற்றத் துக்கு ஆழ்த்தியிருக்கின்றது.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழில் அலுவலகப் பிரிவு உலகில் 196 நாடுக ளில் மேற்படி துறைகள் தொடர்பான தனது அவதானிப்பை சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது. அமெரிக்க வெளி விவகார அமைச்சு வருடா வருடம் மேற்கொள்ளும் வழமை யான நடவடிக்கையே இது. கடந்த ஆண்டுக்கான அவதானிப்பு அறிக்கையே சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதி லேயே கொழும்பு அரச நிர்வாகத்தின் மோசமான மனித உரிமை மீறல் போக்கை வாங்குவாங்கெனக் கீறிக் கிழித்திருக்கின்றது அமெரிக்கா.

இலங்கையில் ஈழத்தமிழருக்கு எதிராக அரச படைகளா லும், துணைப் படைக் குழுக்களாலும் கட்டவிழ்த்துவிடப்பட் டிருக்கும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இங்கு பெரும் இனப் படுகொலையாக, மனிதப் பேரவலமாக வடி வெடுத்திருக்கின்றன. இதனை தமிழர் தரப்பு மட்டுமல்ல சுயா தீனப் பார்வையாளர்கள் அனைவரும் அறிவர்.

பல்வேறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளும் இலங்கையில் ஈழத் தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மனிதப் பேரழிவு நடவடிக்கைகளை இனப்படுகொலை கலாசாரத்தை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்துள்ளதுடன் நிலைமை பேராபத்துக் கட்டத்தை எட்டிவிட்டது என்பது தொடர்பான அபாய எச்சரிக்கையையும் வெளியிட்டு வருகின் றன.

இப்படி உண்மையை அம்பலப்படுத்தும் அமைப்புக்க ளின் பட்டியல் சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச நெருக்கடிக்கான குழு மற்றும் ஐ.நாவின் மனித உரிமைகள் கவுன்ஸில் உட்பட பல்வேறு ஐ.நா அமைப்புகள் என்று நீண்டு செல்கின்றது.

இவ்வாறு சர்வதேச அமைப்புகள் விசேடமாக மனித உரி மைகள் விவகாரத்தைக் குறிப்பாகவும், பிரத்தியேகமாகவும் கையாளும் அமைப்புகள் புட்டுக்காட்டிய உண்மைகளையே இப்போது அமெரிக்காவும் அம்பலப்படுத்தியிருக்கின்றத

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது: இலங்கை அரசு குற்றச்சாட்டு

கொழும்பு, மார்ச்.16-: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுவதாக, இலங்கை அரசு குற்றம் சாட்டி உள்ளது.

கடந்த 1983-ம் ஆண்டில் இருந்து நடைபெற்றுவரும் இலங்கை உள்நாட்டு போரில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதலில் தற்போது இலங்கை ராணுவத்தின் கை ஓங்கி வருகிறது. அதே நேரத்தில் இலங்கை தமிழர்களுக்கு எதிரான அத்துமீறல் நடவடிக்கைகளும் அதிகரித்து வருகிறது.

ஆள் கடத்தல், கூலிப்படை மற்றும் துணை ராணுவ படைகள் மூலம் படுகொலைகள், விசாரணையின்றி சிறையில் அடைப்பு போன்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது.

மனித உரிமை மீறல் தொடர்பாக அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், கடந்த 2007-ம் ஆண்டில் இலங்கையில் மனித உரிமை மீறல் அதிகரித்து இருப்பது பற்றி சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. இந்த அறிக்கைக்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

‘‘விடுதலைப்புலிகள் போர் முனையிலும், சர்வதேச அளவிலும் தனது நிலையை தக்கவைத்துக்கொள்ள தத்தளித்துவரும் நிலையில், அவர்களை கைதூக்கி விடுவதுபோல் அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கை உண்மையிலேயே கவலைக்குரியது’’ என்று இலங்கை அரசு குற்றம் சாட்டி உள்ளது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பல்வேறு சம்பவங்கள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது. கடந்த 2006-ம் ஆண்டில் கிழக்கு இலங்கையில் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 5 இளைஞர்களில் ஒருவரின் தந்தையான டாக்டர் மனோகரன் என்பவர் அளித்துள்ள சாட்சியத்தை இதற்கு ஆதாரமாக வெளியிட்டு உள்ளனர்.

இலங்கை மந்திரி ஒருவர் டாக்டர் மனோகரனிடம் தொடர்பு கொண்டு, ‘‘கொலை செய்யப்பட்ட இளைஞரை தவிர உனக்கு வேறு மகன்களும் உள்ளனர். எனவே இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம்’’ என்று மிரட்டல் தொனியில் விடுத்த ‘வேண்டுகோளு’ம் அதில் இடம் பெற்றுள்ளது.

மகன் கொலை செய்யப்பட்ட பிரச்சினையை விவகாரமாக்காமல் அத்துடன் விட்டுவிட்டால் டாக்டர் மனோகரனுக்கு தலைநகர் கொழும்பில் ஒரு வீடு ஒன்றை வழங்க தயாராக இருப்பதாக அந்த மந்திரி ஆசை வார்த்தை கூறியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கையில் விசாரணை நடத்தி வந்த சர்வதேச நிபுணர் குழுவினரும் தங்களுக்கும் சாட்சிகளுக்கும் உரிய பாதுகாப்பு இல்லை என்று கூறி இலங்கையை விட்டு வெளியேற முடிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/vc/2008/feb/vcinner...?articleid=6166

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது ,விடுதலைப்புலிகளிடம் ஐக்கிய நாடுகள் சபை லஞ்சம் வாங்கியுள்ளது என்று இன்னும் எத்தனை கூறுவீர்கள். ஆனால் இதனை ஒருவரும் கணக்கில் தான் எடுப்பதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபாஸ் சரியான போட்டி இனிப்பாருங்கோ உண்மைகள் வெளியே வரும். :rolleyes::):lol: :lol:

இலங்கையரசு ஒரு குற்றவியல் அரசு. அதனைச் சார்ந்து நிற்பதும் எதிர்காலத்தில் குற்றச்சாட்டுகளுக்குள்ளாக்

ஆண்ணா இறைவன்!

இலங்கை ஒரு தூய்மையான விபச்சாரி என்பதை மறந்து விடாதீர்கள்... அமேரிக்கா எப்ப வேண்டுமாலும் இலங்கையில் பாயை விரிக்கலாம்...

அமேரிக்காவுக்கு மட்டும் மட்டுப்பட்டதில்லை... யாருக்கும் இலங்கை பாயை விரிக்க தயங்கமாட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

எனி உடனே அமெரிக்காவும் நான் புலிகளுக்கு ஆதரவில்லை என்று சொல்வதற்காக இந்த மனிதஉரிமைகள் பிரச்சனையில் சொல்லப்பட்டதை மௌனமாக விடப் பார்க்கும். இப்படி ஒரு நிலையை உருவாக்கத் தான் சிறிலங்கா அரசு விரும்புகின்றது. தலைநகர் திருமலையில் கொல்லப்பட்ட மாணவர்கள் தொடர்பாக புலிகளுக்கு என்ன சம்பந்தம்.

இவ்வாறு திசை திருப்புவதன் மூலம் உண்மைகளை மறைக்கப் பார்க்கின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.