Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வட போர்முனையில் தாக்குதல்களை முன் நகர்த்த மழையே குந்தகம் களமுனைத் தளபதிகள் ஜனாதிபதிக்கு எடுத்துரைப்பு

Featured Replies

வட போர்முனை நடவடிக்கைகள் தொடர்பாக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு முப்படைத் தளபதிகள் விளக்கமளித்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

மகிதருக்கு சிலேற் வாங்கிக் கொடுக்க வேணும். ஒரு சிலேற் என்ன வில? 10 மில்லியன்ல ஒரு சிலேற் வாங்கினா எனக்கு எவ்வளவு மிஞ்சும்?

யாராவது கணக்குத் தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

முப்படைத்தளபதிகளுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு

இணையத்தள நிருபர் 3/29/2008 8:55:36 PM - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முப்படைத்தளபதிகளுடன் விஷேட சந்திப்பொன்றை நேற்று நடத்தியிருக்கிறார். இந்த சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு படை நடவடிக்கைகள் தொடர்பாக முப்படைத் தளபதிகள் விளக்கமளித்துள்ளனர்.

அலரிமாளிகையில் நேற்று கூட்டப்பட்ட சிறப்பு பாதுகாப் புச் சபைக்கூட்டத்திற்கு யாழ். குடாநாட்டு மற்றும் வன்னிப்பகுதி இராணு வத் தளபதிகள் உட்பட முப்படைத் தளபதிகளும் அழைக்கப்பட்டிருந்த னர். அவர்கள் தற்போதைய படை நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விளக்கமளித்துள்ளனர். சுமார் ஐந்து மணிநேரம் நடைபெற்ற இந்த மாநாட்டில் வவுனியா, மன்னார், மணலாறு, முகமாலைப் பகுதிகளில் நடைபெற்று வரும் படை நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முப்படைத் தளபதிகள், மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ, 57 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், 58 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவீந்திர சில்வா, 59 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் நந்தன உடுவத்த, மற்றும் கடற்படையின் பிராந்திய கட்டளைத் தளபதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.கடும் மழையிலும் படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தனக்கு திருப்தி தருவதாக இந்த சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாகவும் தெரி விக்கப்படுகின்றது.

பொதுவாக பாதுகாப்புச் சபைக் கூட்டத் திற்கு பிராந்திய கட்டளை அதிகாரிகள் அழைக்கப்படுவதில்லை. எனினும் அவசர மான நேரங்களில் அவர்கள் அழைக்கப் படுவதுண்டு. 2000 ஆம் ஆண்டு யாழ். குடாநாட்டில் உள்ள படையினர் பெரும் நெருக்கடியை சந்தித்த வேளை, அன்றைய யாழ். குடாநாட்டு கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது என படைத்துறை அவதானிகள் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளனர். E-mail to a friend

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sun Mar 30 21:45:00 2008

வட போர்முனையில் தாக்குதல்களை முன் நகர்த்த மழையே குந்தகம் களமுனைத் தளபதிகள் ஜனாதிபதிக்கு எடுத்துரைப்பு

வடக்கின் போர்முனைகளில் இராணுவத்தினரின் தாக்குதல்களை படை நடவடிக்கைகளை முன்நகர்த்துவதற்கு அப்பகுதிகளில் தொடரும் மழை மற்றும் வெள்ளம் குந்தகமாக உள்ளன.

இவ்வாறு வடக்கு மற்றும் வன்னி களமுனைத் தளபதிகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரில் எடுத்து உரைத்துள்ளனர் விளக்கியுள்ளனர்.

வடக்கின் போர்முனைகளில் குறிப்பாக வன்னிப் போர்முனைகளில் இராணுவ நடவடிக்கைகள் மந்தகதி அடைந்திருப்பது குறித்து ஜனாதிபதி வினாவினார் என்றும், அப்போதே மேற்கண்டவாறு ஜனாதிபதிக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் தெளிவுபடுத்தப்பட்டதாக வும் அறியவந்துள்ளது.

இயன்றவரை வடமுனைத் தாக்குதல்களைத் தொய்வின்றி மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி களமுனைத் தளபதிகளிடம் கூறினார் என்றும் சொல்லப்பட்டது.

நேற்றுமுன்தினம் ஜனாதிபதி தலைமையில் விசேட பாதுகாப்புச் சபை மாநாடு நடைபெற்றது. அதற்கு வடக்கு, வன்னிப் பகுதிகளிலிருந்தும் களமுனைத் தளபதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். மற்றும் முப்படைகளின் தளபதிகளும் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

சுமார் ஐந்து மணிநேரம் நடைபெற்ற இந்த உயர் இராணுவ மாநாட்டில் வவுனியா, மன்னார், மணலாறு, முகமாலைப் பகுதி களில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கை கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப் பட்டதாக அறியவந்தது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநாட் டில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முப்படைத் தளப திகள், யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், 58ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் நந்தன உடுவத்த மற்றும் கடற்படையின் பிராந்தியக் கட்டளைத் தளபதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பொதுவாக பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு பிராந்தியக் கட்டளை அதிகாரிகள் அழைக்கப்படுவதில்லை.

எனினும், அவசரமான நேரங்களில் அவர்கள் அழைக்கப்படுவதுண்டு. 2000 ஆம் ஆண்டு யாழ். குடாநாட்டில் உள்ள படையினர் பெரும் நெருக்கடியைச் சந்தித் தவேளை, அன்றைய யாழ். குடாநாட்டு கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜனக பெரெரா பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டி ருந்து குறிப்பிடத்தக்கது என படைத்துறை அதிகாரிகள் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளனர். (அ1)

http://www.uthayan.com/

கடந்த வெள்ளி விசேட பாதுகாப்பபுச்சபை மாநாட்டில் மஹிந்தவைச் சந்தித்த போதே வடபகுதி அரச படைகளில் தளபதிகள் இக் கருத்தினை வெளியிட்டுள்ளனர்.

வடக்கின் போர் முனைகளில் இராணுவத்தினரின் தாக்குதல்களை படைநடவடிக்கைகளை முன்நகர்த்துவதற்கு அப்பகுதிகளில் தொடரும் மழை மற்றும் வெள்ளம் குந்தகமாக உள்ளன.

இவ்வாறு வடக்கு மற்றும் வன்னி களமுனைத் தளபதிகள் மஹிந்தவிடம் நேரில் எடுத்துரைத்துள்ளனர். விளக்கியுமுள்ளனர்.

வடக்கின் போர் முனைகளில் குறிப்பாக வன்னிப் போர் முனைகளில் இராணுவ நடவடிக்கைகள் மந்தகதி அடைந்திருப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் தெளிவுபடுத்தப்பட்டதாகவும் அறியவந்துள்ளது.

இயன்றவரை வடமுனைத் தாக்குதல்களைத் தொய்வின்றி மேற்கொள்ளுமாறு மஹிந்த களமுனை தளபதிகளிடம் கூறினர்ர் என்றும் சொல்லப்பட்டது.

:lol:

நன்றி சுடர் ஒளி

  • கருத்துக்கள உறவுகள்

மழை இல்லாட்டி எப்பவோ வன்னியிலே கொடிகட்டியிருப்பினம். நல்ல பகிடி தான் மகிந்து மாமா. :lol::wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.