Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

3 மாதங்களில் 400 படையினர் பலி: 800 பேர் படுகாயம்: 2500க்கும் அதிகமானோரைக் காணவில்லை - ஐ.தே.க

Featured Replies

கடந்த மூன்று மாதங்களில் 400 இராணுவத்தினர் உயிரிழந்தும் 800 போர் அங்கவீனர்களாகியும், படுகாயமடைந்துமுள்ளதுடன் 2,500க்கும் மேற்பட்ட இராணுவத்தினா காணாமல் போயுள்ளதாக தெரிவித்த ஐ.தே.க.வின் பொதுச் செயலா திஸ்ஸ அத்தநாயக்க, யுத்தம் குறித்த உண்மைச் செய்திகளை அரசால் மூடிமறைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

கிழக்கை மீட்டு விட்டோம், வடக்கை கைப்பற்றுகிறோமென அரசு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது. ஆனால் தென்பகுதியிலுள்ள கதிர்காமம், புத்தல மற்றும் யால பகுதிகளுக்கு மக்கள் யாருமே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டினார்.

'நாடு அதாளபாதாளத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது. அனைத்து துறையிலும் ஊழல்களும மோசடிகளும் இடம் பெறுவதுடன் கொழும்பு மற்றும் தென்பகுதியில் தினம் தினம் தமிழ் மக்கள் கடத்தப்படுகின்றனர், கொலை செய்யபடுகின்றனர். அச்சுறுத்தல்கள் விடப்படுவதும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

எங்கு பார்த்தாலும் கொலை யுகம். வீட்டிலிருந்து வெளியேறும் ஒவ்வோருவரும் வீட்டுக்கு திரும்புவது நிச்சயமற்றதாகவே காணப்படுகின்றது.

யார் எப்போது எங்கு கொல்லப்படுவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. எனினும், அரசுக்கெதிராக குரல் கொடுக்கும் அனைவரும் அச்சுறுத்தப்படுகின்றனர் அல்லது கொலை செய்யப்படுகின்றனர். இதுதான் இன்றைய யாதார்த்த பூர்வமான நிலை.

வடகிழக்கு பகுதிகளை மீட்டெடுத்ததாக அரசு பறைசாற்றுகின்றது. எனினும், கதிர்காமம் மற்றும் புத்தல, யால பகுதிகளுக்கு யாரும் செல்ல முடியாது. சென்றால் கொல்லப்படுவார்கள்.

அரசு யுத்தம் குறித்து உண்மைத் தன்மையை கூறுவதில்லை. இதன் காரணமாக மக்கள் போர் குறித்து உண்மையான நிலை தெரியாது அல்லல் படுகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 400 படையினர் உயிரிழந்துள்ளனர். 800 பேர் அங்கவீனாகளாக அல்லது படுகாயங்குள்ளாகியுள்ளனர். 2500க்கும் அதிகமான இராணுவத்தினர் காணமல் போயுள்ளனர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள தொப்பிக்கல், மாவிலாறு உள்ளிட்ட பல இராணுவ வெற்றிகளை பெற்றுக் கொடுத்த இராணுவ மேஜர் ஜெனரல் பன்னிபிட்டிய உடனடியாக இடமாற்றப்பட்டுள்ளர். தற்போது பனாகொடையிலிருந்து கொழும்புக்கு கடமைக்கு சென்று வருகின்றார். இவருக்கு புலிகளினால் கொலை அச்சுத்தல் உள்ளது. இவ்வாறு கொலை அச்சுறுத்தலுள்ள ஒரு இராணுவத்தளபதி மீது அரசு அக்கறையுடன் செற்படுவதில்லை.

கடந்த காலத்தில இராணுவ மேஜர் ஜெனரல் பாராமி குலதுங்கவிற்கு அரசு போதிய பாதுகாப்பு வழங்காத காரணத்தினால் தான் அவர் புலிகளினால் கொல்லப்பட்டார்.

புலிகளால் கொலை செய்யப்படுவதற்கு அரசே வழிகோலியது. அது போல்தான் ரி.மகேஸ்வரன் எம்.பி.க்கும் அரசு பாதுகாப்பினை குறைத்தது. தற்போது மு.கா. தலைவர் ஹக்கிமிற்கும் பாதுகாப்பினை குறைத்துள்ளது.

பிரபாகரனிடம் இருந்த கிழக்கை மீட்க 1000 க்கு மேற்பட்ட படையினரை பலி கொடுத்ததாக கூறும் அரசு, அவ்வாறு மீட்ட கிழக்கை தேர்தல் என்ற போர்வையில் பிள்ளையான் என்னும் பயங்கரவாதியிடம் ஒப்படைத்துள்ளது.

1994 அம் ஆண்டுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் சிவில் நிர்வாகம் சிறந்த முறையில் நடைபெற்றுள்ளது. 1994 ம் ஆண்டு பதவிக்கு வந்த பொ.ஜ.மு. அரசே அதனை புலிகளிடம் வழங்கியது. தற்போது அப்பகுதி மீட்டுவிட்டதாக பெருமை கொள்கின்றது.

ஆயுதக்குழு போட்டியிடும் ஒரு தேர்தலில் ஜனநாயக ரீதியாக செயற்படும் எந்தக் கட்சியும் போட்டியிடுவதில்லை. அதனால் தான் மட்டு. உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.

எமது கோரிக்கையின் பின்னரே கிழக்கு மாகாணத்தில் ஆயுதக் குழுக்கள் எதுவும் போட்டியிடவில்லை. அதனால் தான், நாம் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுகின்றோம். எமது வெற்றி நிச்சயம். இதன்பின்னர் நடைபெறும் அனைத்து தேர்தலிலும் ஐ.தே.க. வெற்றி பெறும்.

த.தே.கூட்டமைப்பு வரவு செலவு திட்டதின் போது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லையென்பதற்கா

ஐ . தே . க வினர் கணக்கு இப்படிப் போகுது. அரசின் கணக்கு வேறுமாதிரி. சிங்களச் சனங்கள் என்ன கணக்குப் போடப் போகிறார்களோ?

அவர்கள் இதை எல்லாம் மறந்து விடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
:lol: இந்த பாராளுமன்ற ஜனநாயகத்தால வந்த ஒரேயொரு நண்மை என்னவென்றால் வடக்குக் கிழக்கில் நடக்கும் யுத்தம் பற்றிய உண்மையான தகவல்களை வெளிக்கொணருவதுதான். இதற்காகவாவது ஐ.தே.க வை நாம் பாராட்டத்தான் வேணும் !
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயராஜின் ஆவி சொல்லுது: ஐ.தே.க காரர் புலுடா விடுகினம்.. பட்டினியிருந்தாவது கிளிநொச்சிக்கு நடந்தபின்னர்தான் காலாறுவோம் என்று படையினர் உற்சாகத்தில் உள்ளனர்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.