Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏகப்பட்ட எதிரிகளைச் சம்பாதித்த பெர்னாண்டோபிள்ளை

Featured Replies

ஏகப்பட்ட எதிரிகளைச் சம்பாதித்த பெர்னாண்டோபிள்ளை

ஜெயராஜ் பெர்னாண்டோ பிள்ளை தான் ஒரு சிங்களவன் அல்லது சிங்கள் விசுவாசி என்று காட்டுவதற்காக மிகவும் தீவிரமாக அரசின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் ஆதரவாக பேசி வந்ததால் முழுத் தமிழினத்தினதும் கோபத்துக்கு ஆளாகியவர் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் இதை விட அண்மைக் காலத்தில் இவர் புதிய பல எதிரிகளையும் சம்பாதித்திருந்தார்.

வெளிநாட்டமைச்சர் றோஹித்த போகல்லாகம வெளிநாடு சென்றிருந்த போது பதில் வெளிநாட்டமைச்சராக நியமிக்கப்பட்ட போது திடீர் திடீர் என தனது ஆதரவாளர்களை பல முக்கிய பதவிகளுக்கு நியமித்ததும் அதனைத் தொடர்ந்து நாடு திரும்பிய றோஹித்த அந்த நியமனங்களை எல்லாம் ரத்துச் செய்ததும் பலருக்கும் ஞாபகமிருக்கும்.

நெடுஞ்சாலைகள் அமைச்சர் பதவியை தனது தம்பி பசில் ராஜபக்சவிற்கு வழங்கத் தீர்மானித்து அந்தப் பதவியை விட்டுத் தரும்படி அரசின் முக்கியஸ்தர்கள் சிலர் கேட்டபோது அதற்கு மறுத்து விட்ட காரணத்தால் ராஜபக்ச குடும்பத்தின் அதிருப்தியையும் சம்பாதித்திருந்தார்.

சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் சந்திரிக்காவிற்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த அல்லது நெருக்கமானவராகக் காட்டிக் கொண்ட பெர்னாண்டோபிள்ளை இப்போது சந்திரிக்காவின் நடவடிக்கைகளை மிகக் கடுமையாகச் சாடி வந்தார். இதனால் பண்டாரநாயக்கா குடும்பத்தினரின் கோபத்துக்கும் ஆளாகியிருந்தார்.

எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில் பிரதமர் பதவி தனக்கு வழங்கப்பட வேண்டும் என்று இவர் வலியுறுத்தி வந்தார். இதற்கு சுதந்திரக் கட்சிச் செயலாளர் சிறிசேன உள்ளிட்ட பலரின் ஆதரவும் இருந்து வந்தது. இதன் காரணமாக தற்போதைய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா கடும் கோபத்தில் இருந்ததாகவும் கொழும்பிலிருந்து செய்திகள் கசிந்திருந்தன.

ஜெவிபியினருக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கு சூழ்ச்சி செய்தவர்களில் முக்கியமானவர்கள் பசில் ராஜபக்ச,பெர்னாண்டோ பிள்ளை, அலவி மௌலானா

ஆகியோரே என்ற தகவல் காரணமாக ஜெவிபியினரும் கடும் கோபத்தில் இருந்தனர்.

ஆக ஏகப்பட்ட எதிரிகளைக் கொண்ட பிள்ளையைக் கொன்றது யாராக இருக்கும் என்ற கேள்விக்கு விடை காண்பது அத்தனை சுலபமில்லை.

அதிலும் அவசர அவசரமாக விசாரணை எதுவுமின்றி இது தற்கொலைத் தாக்குதல் என்று அரசு கூறியதும் சம்பவத்தை நேரில் கண்ட சிறுவன் ஒருவன் பிள்ளையை நோக்கி ஒரு பார்சல் வீசப்பட்டதாகவும் அந்தப் பார்சலே வெடித்தது என்று கூறியிருப்பதும் சந்தேகங்களை வலுப்படுத்துகின்றன.

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறவுகள்

அரசின் இவ்வளவு பாதுகாப்புகளையும் மீறி சிறுவன் குண்டை எறிந்ததோ, அல்லது மரதனோட்ட வீரன் குண்டை கட்டி கட்டி கொண்டு ஒட புறப்பட்டது என்பது அம்புலி மாமா கதை போல உள்ளது. "உள்ளாளும் கள்ளாளும்" தான் இதனை செய்வதற்கான சாத்திய கூறுகள் உண்டு.

  • தொடங்கியவர்

குண்டை எறிந்தது சிறுவன் அல்ல. ஆனால் இந்தச் சம்பவம் தொடர்பாக சாட்சியமளித்த சிறுவன் தன்னுடைய சாட்சியத்திலே பார்சல் ஒன்று விழுந்ததைத் தான் கண்டாகக் கூறியிருந்தான்.

நீங்கள் கூறியது போல சிங்கள அமைச்சர்களில் ராஜபக்ச சகோதரர்களுக்கு அடுத்தபடியாக அதிக பாதுகாப்பைக் கொண்ட அமைச்சர் இவர் தான். எனவே உள்வீட்டு ஒத்துழைப்பு ஏதோ ஒரு வகையில் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

ஓய் மக்்காள்் ஓட்்டுமொத்தத்தில பிள்ளைவாள் இக்கு சங்கு ஊதிட்டாங்்கள்

:lol::lol::lol::lol:

அவர் பிள்ளைவாள் இல்லை சின்னப்பு. புல்லேவாள்.

அவர் தன்னைப் ஜெயராஜ் பெர்னாண்டோ பிள்ளை என்று அழைப்பதை விட பெர்ணாந்தோ புல்லே என்று அழைப்பதையே விரும்புவார்.

  • கருத்துக்கள உறவுகள்
:D அவரின்ர முதலாவது எதிரி அவற்ற வாய்.அந்த வாயின்மூலம்தான் பலபேற்ற வயித்தின் நெருப்பை அள்ளிக் கொட்டிக்கொண்டவர். நுணலும் தன் வாயால் கெடும் என்று சும்மாவா சொன்னார்கள் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.