Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மின்னிதழ் : நந்தவனம்

Featured Replies

புதியதோர் மின்னிதழ் ஒள்று. தரவிரக்கி படித்துப் பாருங்கள். அஜீவன் அவர்களின் கதை ஒன்றும் வெளிவந்துள்ளது. பி.டி.எம் முறையில் கீழுள்ள லிங்கின் மூலம் தரவிக்கிப் பாருங்கள் .

ஜானா

http://www.mediafire.com/?jdrb1dddzdn

ஆரம்பஜோர் என்று சொல்வார்கள்.. ஒரு செயலை ஆரம்பிக்கும் பொழுது அதில் சம்பந்தப்பட்ட சம்பந்தமில்லாத அனைவருக்கும் மிகுந்த உற்சாகம் இருக்கும். உற்சாகம், வேகம் என பரபரப்பாய் முதல் முறை வெற்றிக்கு கடுமையான உழைப்பு இருக்கும்.

அதே அளவு ஈடுபாட்டை அடுத்தடுத்து பல இதழ்கள் வரும்வரைத் தக்க வைத்துக் கொள்வதற்குப் பெயர் அர்ப்பணிப்பு. அர்ப்பணிப்பு உணர்வில்லாமல் தரம் நிலைப்பதில்லை..

புத்தகங்களிடம் மக்களின் எதிர்பார்ப்பு எப்பொழுதுமே மிக அதிகமாக இருக்கும்! இருக்கிறது.

வயிற்றுப்பசிக்கு உண்ணும் உணவை விட, அறிவுப் பசிக்கு உண்ணும் இப்புத்தகங்களில் புதுப்புதுச் சுவை அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இதனாலேயே ஒரு புத்தகத்தை நடத்திச் செல்ல மிகுந்த கலையுணர்வும், அர்ப்பணிப்பு உணர்வும் தேவைப்படுகிறது..

கலையுணர்வும் அர்ப்பணிப்பு உணர்வும் தேவைப்படும் இதுபோன்ற பணிகளைப் புரிவதால், நிர்வாகத் திறன், சிந்தனைத் தெளிவு, கருத்துப் பரிமாற்றத்திறன் ஆகியவை மேம்படுகின்றன. இத்திறமைகளைக் கைக்கொண்டோர் எந்தத் துறையில் இருந்தாலும் வைரமாய் பளிச்சிடுகின்றனர்.

பதிவிறக்கம் முடியும் வரையாவது இந்தச் சிந்தனைகள் உங்கள் மனதில் ஓடட்டும். அடுத்த இதழ் ஆடிச் சிறப்பிதழ்.

மின்னிதழ் தயாரிப்பில் ஈடுபட்டோர், அந்த அனுபவங்களையும், கற்ற பாடங்களையும், அதனால் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களையும் பகிர்ந்து கொண்டால், உழைப்பின் பயன் மேலும் சிறக்கும். சுட்டி

மின்னிதழ் அனுபவங்கள்

அடுத்த இதழ் ஆடித் திருநாளுக்கு.. சிறந்த ஆக்கங்கள் எங்குகண்டாலும் மின்னிதழ் பரிந்துரைகள்! ஆடி - மின்னிதழ் பரிந்துரைகள் சுட்டி என்ற திரியில் சுட்டி தரத் தவறாதீர்கள்.

இவ்விதழ் தொடர்பான உங்கள் விமர்சனங்களை சித்திரை மின்னிதழ் விமர்சனத்திரி விமர்சனத் திரி சுட்டி யில் சொல்லுங்கள்.

பதிவிறக்கம் முடிந்திருக்கும். இனி மின்னிதழுக்கும் உங்களுக்கும் மத்தியில் உங்கள் சிந்தனைகள் மட்டுமே!

வணக்கங்களுடன்

மின்னிதழ் குழு.

அழகாகச் செய்யப்பட்டு இருக்கிது. ஆனா... பீடீஎவ் மூலம் 67 பக்கங்கள் நீளமான இந்த சஞ்சிகையை எல்லாரும் பொறுமையுடன் வாசிப்பார்களா என்பது சந்தேகமே.. என்றாலும் நல்லதொரு முயற்சி. அஜீவன் அண்ணாவின் கதையை மேலோட்டமாக தேடிப்பார்த்தன். காண இல்ல. பிறகு வாசிச்சு பார்ப்பம். அஜீவன் அண்ணாவுக்கும் பாராட்டுக்கள்.. யாழுக்கு வரும் பலர் இங்கும் கருத்து எழுதுகின்றார்கள் போல இருக்கிது.

முரளி, அதில் 2 வது பக்கத்தில் பாருங்க *இந்த இதழில் உள்ளே என்று போட்டிருப்பதுக்கு கீழ் கவிதை, கதை எண்டு எல்லாம் போட்டிருக்கும் .....கதை எண்ட இடத்தில் *அந்த முகம் பிஞ்சு - அஜீவன் எண்டு போட்டிருப்பதில் கிளிக் பண்ணவே அந்த கதைக்கு போகுது. :D

Edited by அனிதா

நன்றி அனி பிறகு பார்க்கிறன். நான் அவசரமா பார்த்தனாக்கும். அது மிஸ் பண்ணீட்டிது.

இந்த சஞ்சிகையை நல்லா மினக்கட்டு செய்து இருக்கிறீனம். நான் இதப்பார்த்ததும் உடன நினைச்சது யாழிலையும் இப்பிடி ஒண்டு செய்யலாமோ எண்டு. பிறகு இஞ்ச பூனைக்கு மணிகட்டுறதுக்கு ஒருத்தரும் இல்லை எண்டபடியால் மேலதிகமாக இதுபற்றி யோசிக்கவில்ல. நிறைய நேரம் செலவளிச்சு செய்து இருக்கிறீனம். நல்லதொரு கூட்டுமுயற்சி.

அஜிவன் அண்ணாவின் ஆக்கமும் இருக்கிறதா தயவு செய்து அதை மட்டும் எடுத்து யாழில் போட முடியுமா முரளி அது தான் பி.மு.கு உதவ முடியுமே :icon_mrgreen:

என்ன நக்கலா? அது என்னா பி.மு.கு ..?

அஜீவன் அண்ணா எழுதின.. அந்த பிஞ்சு முகம் கதை:

மனச் சோர்வோடு வைத்தயசாலையின் அவசர

சிகிச்சைப் பிரிவின் வெளிப்பகுதியில் அமர்ந்து

அவசர சிகிச்சைப் பிரிவு வாயிலை நோக்கியவாறு

அமர்ந்து இருக்கிறேன்.

உள்ளேயும் வெளியேயுமிருந்து டாக்டர்களும்,

தாதிகளும், பணியாளார்களும், நோயாளிகளை

பார்க்க வருவோரும் என் முன்னால் நடந்து

போவதும் வருவதுமாக இருக்கிறார்கள்.

என் பார்வை மட்டும் வாயிலை நோக்கியதாக

இருக்கிறது.

இரு குழந்தைகளும் ஒரு பெண்ணும் என் அருகால்

நடந்து செல்கின்றனர்.

முன்னே போனவர்கள் அவசர சிகிச்சை பிரிவு

விசாரிப்பு பகுதியில் ஒரு கணம் நிற்கிறார்கள்.

சொற்ப நேரம்தான் அது

அவர்களை ஓரு டாக்டர் அழைத்துக் கொண்டு

முன்னே போகிறார். முன்னே போய்க்

கொண்டிருந்தவர்களில் சுமார் 5-6 வயது மதிக்கத்

தக்க மூத்த பெண் குழந்தை திடீரென அவர்களை

விட்டுப் பிரிந்து நிற்கிறாள்.

தாயும் 4 வயது மதிக்கத் தக்க ஆண் குழந்தையும்

மட்டும் அம்மாவை கட்டிப் பிடித்துக் கொண்டு

நடப்பது தெரிகிறது.

அவர்களிலிருந்து பிரிந்த பெண் குழந்தை நான்

இருக்கும் திசை நோக்கி வருகிறாள்.

அவள் முதுகில் ஒரு பை இருக்கிறது.

அதை மெதுவாக இறக்கிக் கொண்டே " வணக்கம்.

என்னிடம் காசில்லை. அம்மா வரட்டும் என்கிறாள்.

பரவாயில்லை. நீ எடு என்கிறேன்.

இங்கே இலவசமா எனக் கேள்வி எழுப்புகிறாள்.

இல்லை. நான் வாங்கித் தருகிறேன் என்கிறேன்.

அம்மா வரட்டும் என்கிறாள்.

அம்மா எங்கே போகிறாள் எனக் கேட்கிறேன்.

அப்பா செத்துட்டார். பார்க்கப் போறாங்க.

என் இதயம் நின்று துடிக்கிறது.

அந்தக் குழந்தையின் முகத்தில் அந்த

வார்த்தையின் அர்த்தம் புரியவில்லை என்பது

என்னை சாகடிக்கிறது.

சாவு என்பதைக் எப்படியோ, எங்கேயோ கேட்டு

அச்சமடைந்திருக்கிறாள் என்பது மட்டும் எனக்குள்

உறுதியாகிறது.

அதனால்தான் தாயோடு போகாமல் நின்று விட்டாள்

அதை உணர்கிறேன்...........

அதற்கு மேல் அந்த பச்சிளம் பாலகனிடம் என்ன

கேட்பது?

உனக்கு என்ன அருந்த வேண்டும்?

கோலா என்கிறாள். அதில் எடு என்கிறேன்.

இங்கே உட்காரலாமா?" என்று ஜெர்மன் மொழியில்

என்னிடம் கேட்கிறாள்.

வணக்கம். உட்கார்" என்கிறேன்.

உட்கார்ந்தவள் பையிலிருந்து 'சினெல்கோ'

குளிர்பான போத்தலை வெளியே எடுத்து பார்த்து

விட்டு மீண்டும் பைக்குள் திணிக்கிறாள்.

பக்கத்து தானியங்கி மெசினில் எடுத்த காப்பியை

கையில் வைத்து உறிஞ்சிய வண்ணம் அவளைப்

பார்க்கிறேன்.

அவள் தாயும் தம்பியும் சென்ற திக்கை நோக்கிப்

பார்க்கிறாள்.

ஏதாவது அருந்துகிறாயா? என்கிறேன்.

வேண்டாம் இது என் தம்பியுடையது என்று

பையிலிருந்து சினெல்கோ குளிர்பான போத்தலை

வெளியே எடுத்து என்னிடம் காட்டுகிறாள்.

உனக்கு வேண்டுமானால் இந்த மெசினில் எடு

என்கிறேன்.

தானியங்கி மெசினிடம் போனவள் மனதை மாற்றிக்

கொண்டவளாக ஐஸ்டீ என்கிறாள்.

எடு என்று 5 பிராங் சில்லறையை அவளிடம்

நீட்டுகிறேன்.

அவள் வாங்கி மெசினுக்குள் போட்டு விட்டு

ஐஸ்டீயை எடுக்கிறாள். மிகுதி பணம் திரும்பி

வருகிறது.

அதை எடுத்து என்னிடம் தந்து விட்டு நன்றி என்று

கூறி ஐஸ்டீயை பருகுகிறாள்.

என் மனம் வார்த்தைகளின்றித் தவிக்கிறது.

தாயும் தம்பியும் டாக்டரும் எங்களை நோக்கி

வருகிறார்கள்.

இவள் ஓடிச் சென்று என்னைக் காட்டி ஐஸ்டீ

வாங்கித் தந்ததாக சொல்கிறாள்.

அந்த வேதனையிலும் நன்றி சொன்னாயா என்று

குழந்தையிடம் தாய் கேட்கிறாள்.

ஓ......சொல்லிட்டேனே என்று என்னைப்

பார்க்கிறாள்.

டாக்டர் குழந்தை முன் மண்டியிட்டு அமர்ந்து வந்து

அப்பாவை ஒரு முறை பார்" என்று சொல்கிறார்.

சிறியவன் அப்பா செத்துட்டார். நான் பாத்துட்டேன்

நீயும் வந்து பார் என்கிறான்.

இரு குழந்தைகளையும் அணைத்து அழைத்துக்

கொண்டு டாக்டர் செல்கிறார்.

தாய் மட்டும் து}ரத்தே நிலத்தில் அமர்ந்து

மௌனமாக கண்ணீர் வடிக்கிறாள்.

நான் எழுந்து சென்று " நான் இருக்கும் இடத்தில்

உட்காருங்களேன்." என்கிறேன்.

இல்லை தனியாக அழ வேண்டும் என்கிறாள்.

அதற்கு மேல் நான் என்ன சொல்வது?

நான் திரும்பி வந்து அமர்கிறேன்.

அவள் உட்கார்ந்து கொண்டு அழுத வண்ணம்

தனியே ஏதோ புலம்புவது தெரிகிறது.

இறந்து போன தந்தையை பார்த்து விட்டு

குழந்தைகள் திரும்பி அம்மாவிடம் ஓடி வருகின்றன.

டாக்டர் து}ரத்தே நின்று பார்த்து விட்டு நடக்கிறார்.

நான் திரும்பி வீடு வர நினைத்து எழுந்து போய்

அவள் கைகளை பற்றி "என் அனுதாபங்கள்"

என்கிறேன்.

அவள் நன்றி என்கிறாள்.

ஏதாவது தேவையா? என்கிறேன்.

இல்லை.

உறவினர்கள் வரும் வரை நிற்கிறேன் என்கிறாள்.

நான் வருகிறேன் என்று சொல்லி விட்டு

குழந்தைகளின் கைகளை பற்றி விடை பெற்று

நடக்கிறேன்.

பெண் குழந்தை என்னை நோக்கி பின்னால் ஓடி

வருகிறாள்.

நான் நின்று திரும்புகிறேன்.

கோலாவுக்கு நன்றி என்று சொல்லி நின்று என்னை

நோக்குகிறாள்.

வார்த்தைகள் வர மறுக்கின்றன.

சுயிஸ்" (மீண்டும் சந்திப்போம்) என்று சுவிஸ்

மொழியில் சொல்லி விட்டு தாயை நோக்கி

நடக்கிறாள்.

பனி கொட்டும் இரவின் தாக்கமே புரியாமல் என்

காரை நோக்கி நடந்து வந்து அமர்கிறேன்.

வீடு வரை மட்டுமென்ன இப்போதும் கூட

தந்தையின் பிரிவையோ அதன் தாக்கத்தையோ

உணர முடியாத அந்த பிஞ்சு முகம் என்னை வாட்டி

வதைக்கிறது...................

Edited by முரளி

பி.மு.கு என்றா பிக்மிஸ் என்று சொல்லுவ்வார்கள் இதை நான் மொழி பெயர்த்தால் யாழ்களத்திளா நான் எழுத ஏலாம செய்துவிடுவார்கள் நன்றி :lol:

வாவ். அருமையான ஒரு மின்னிதழ்.

என் மனதை மிகவும் கொள்ளைகொண்ட ஒரு மின்னிதழ்.

எவ்வளவு அழகாகவும் பொறுமையாகவும் சலிப்பின்றி படிக்க வடிவான படங்களோடு உருவாக்கி இருக்கின்றனர்.

அக்குழுமத்துக்கு பாராட்டுக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.