Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளை புலி'யுடன் வைகோ!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை புலி'யுடன் வைகோ!

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நார்வே நாட்டில் சூறாவளியாய் சுழன்றடித்திருக்கிறார் வைகோ.

p44ug8.jpg

'ஆர்ட் ஆஃப் லிவிங்' இயக்கத்தின் தலைவரும் ஆன்மிகவாதியுமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், நார்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோ நகரில் 'தெற்காசிய நாடுகளில் அமைதியும் ஆக்கமும்' என்ற சர்வதேச மாநாட்டை நடத்தினார். இதில் கலந்துகொண்ட வைகோ, இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமிடையே பேச்சுவார்த்தை நடத்திய நார்வே அமைச்சர் எரிக் சோல்ஹைமைச் சந்தித்து, 'இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்படும் படுகொலைத் தாக்குதலை ஐரோப்பிய யூனியன் நாடுகள் தடுக்கவேண்டும்' என்று வலியுறுத்தி இருக்கிறார்.

''தமிழினத்தை மொத்தமாக அழித்துவிட இலங்கை அரசு முனைகிறது. இந்தியாவும்மௌனம் சாதிக்கிறது. தமிழர்கள் இல்லாத நாடே உலக வரைபடத்தில் இல்லை. ஆனால், தமிழர்களுக்கு ஒரு நாடு இல்லை. விடுதலைப் புலிகள் ஏனோ

கொடுங்கோலர்களாகச் சித்திரிக்கப் படுகிறார்கள்'' என்று கொட்டித் தீர்த்திருக்கிறார் வைகோ. நார்வேயின் வெளியுறவுத்துறை அலுவல கத்தில் நடந்த இந்த ஒரு மணிநேரப் பேச்சுவார்த்தை கடைசிவரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. 'இந்தியாவில் எந்தப் பதவியையும் வகிக்காத வைகோவை சோல்ஹைம் எப்படி சந்திக்கலாம்' என்று இலங்கை அரசு பிரச்னை கிளப்பும் என்று நார்வே எதிர்பார்த்தது. அதேபோல, இலங்கை ரியாக்ஷன் காட்டவும் தொடங்கிவிட்டது.

பிப்ரவரி 2002-ல் அன்று இலங்கை அதிபராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே, எரிக் சோல்ஹைம் உதவியுடன் போர்நிறுத்தம் ஏற்பட வழிவகுத்தார். சோல்ஹைம், புலிகளின் தலைவரான ஆன்டன் பாலசிங்கத்தின் நண்பர் என்பதும் ரணில் விக்ரம சிங்கே அறியாததல்ல. சுமார் பத்து ஆண்டுகளாக இலங்கையில் போர் நிறுத்தத்துக்காகக் குரல் கொடுப்பவர் சோல்ஹைம். இவருக்கு அமெரிக்காவின் ஆதரவும் இருப்பதாக நம்பப்படுகிறது.

வைகோ-எரிக் ஸ்லோஹைம் சந்திப்புப் பற்றி மத்திய அரசுக்கோ, நார்வேயில் உள்ள இந்திய தூதரகத் துக்கோ தெரியாமல் போயிருக்க முடியாது. இந்திய அரசு 'வேண்டாம்' என்று சொல்லியிருந்தால் வைகோவைப் பார்ப்பதை சோல்ஹைம் தவிர்த்திருப்பார். இலங்கைப் பிரச்னையில் நேரடியாகத் தலையிடமுடியாத இந்தியா, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்குப் பச்சைக்கொடிக் காட்டியிருப்பதாகவே அமெரிக்க உயரதிகாரிகள் கருதுகிறார்கள். ரணில் விக்கிரமசிங்கே பதவிபோன பிறகு இலங்கை அரசால் தரக்குறைவாக நடத்தப் பட்ட எரிக் சோல்ஹைம், 'வெள்ளை புலி' என்று கேலியும் செய்யப்பட்டார் (புலிகளுக்கு ஆதரவா கவே அவர் இருக்கிறார் என்ற கிண்டல்தான் இது!).

இந்நிலையில், இந்திய அரசு வைகோவின் நார்வே சந்திப்பை எப்படிப் பார்த்துக்கொண்டிருக்கிறது?

சீனாவிடமிருந்தும் பாகிஸ்தானிடமிருந்தும் இலங்கை அரசு மிக நவீன ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் (அணுகுண்டு நீங்கலாக) அனைத்தையும் இலவசமாகவோ மானியமாகவோ வாங்கிவருகிறது. இலங்கையில் இப்படி நவீன ஆயுதங்கள், போர்க்கருவிகள் குவிவது நல்லதில்லை என்று மத்திய அரசை ராணுவ மற்றும் உளவுத்துறை நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். ராஜீவ் காந்தி கொலையால் இலங்கைத் தமிழர்கள் மீதான அடக்குமுறையைப் பார்த்து மத்திய அரசு மௌனம் சாதித்தாலும், போர்நிறுத்தத்துக்கு இப்படிப்பட்ட புழக்கடைப் பேச்சுவார்த்தைகளை ஆதரிப்பதில் தவறில்லை என்றும் பாதுகாப்புத்துறை அறிஞர்கள் கருதுகிறார்கள்.

p45xt4.jpg

மேலும், தீவிரவாதத்துக்கு எதிராகக் குரல் கொடுக் கும் அமெரிக்காவும் ஆசியக் கண்டத்தில் சீனாவின் கை ஓங்குவதை விரும்பவில்லை. ஒருவேளை சீனா- இலங்கை-பாகிஸ்தான்-பங்களாதேஷ்-நேபாளம் ஆகிய நாடுகள் இணைந்து இந்தியாவுக்கு ஆபத்தை உருவாக்கலாம்... அப்படியரு சூழ்நிலையில் எல்லாவிதத்திலும் பலம் வாய்ந்த அமெரிக்காவின் அனுசரணை நமக்குத் தேவை என்று முடிவெடுத்து, அதற்காகவே இந்திய அணு ஆயுத ஒப்பந்தத்தை ஆதரித்தது.

இப்படியரு சூழ்நிலையில், நார்வேயில் எரிக் சோல்ஹைமிடம் வைகோ பேசியிருப்பது ஈழத் தமிழர்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்றுவிட்டது.

p46bdi1.jpg

''பாலா அண்ணன், தமிழ்ச்செல்வன் ஆகி யோர் மறைவுக்குப் பிறகு உலக அளவில் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க, உலகத் தலை வர்களைச் சந்திக்க, பேச்சுவார்த்தை நடத்த ஒரு தலைவர் இல்லாத குறையை வைகோ போக்கிவிட்டார். தேர்தல் அரசியலை மட்டுமே மனதில்கொண்டு முதலைக்கண்ணீர் வடிக்கும் மற்ற தமிழகத் தலைவர்களை இனி நம்பத் தயாராக இல்லை. ஆட்சியில், அதிகாரத்தில், மத்திய அரசை ஆட்டிப்படைக்கும் இடத்தில் இருக்கும் தமிழினத் தலைவர்கள் எங்கள் மரியாதையை இழந்துவிட்டார்கள். அவர்கள் போலிகள்'' என்று ஆவேசப்பட்டார் அமெரிக்க ஈழத்தமிழர்களின் ஆதரவுத் தலைவர் ஒருவர்.

அவரே மேலும் சொல்லும்போது, ''நான் இந்த மாநாட்டைப் பற்றிக் கேள்விப்பட்ட வரைக்கும் வைகோவை மாநாட்டில் கலந்து கொள்ளச் செய்ய முடியாத அளவுக்கு

இலங்கை அரசு கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தியது. வைகோவின் விசாவை நிராகரிக்க பெரிய அளவில் முயற்சிகளைச் செய்தது. ஆனால், எரிக் சோல்ஹைம்தான், 'வைகோ நிச்சயம் வரவேண்டும். அவருக்கான விசா எந்தக் கட்டத்திலும் மறுக்கப்பட்டுவிடக் கூடாது' என்று சொல்லி பெரும் முயற்சி எடுத்தார். அதுமட்டுமல்ல, வைகோ மீது நார்வே அரசு கொண்டிருக்கும் மரியாதையை இன்னொரு சம்பவமும் எங்களுக்கு எடுத்துக் காட்டி இருக்கிறது. நார்வேயின் வெளிவிவகாரத்துறை அமைச்சக அதிகாரிகள் வைகோவுக்கு 12-ம் தேதி மதியம் கிராண்ட் லஞ்ச் கொடுத்துக் கௌரவித்தார்கள். அதோடு, வைகோவின் நார்வே பயணத் திட்டத்தில் இல்லாத ஒரு நிகழ்ச்சிக்கும் வைகோ எங்களுக் காக ஒப்புக் கொண்டார். நாங்கள் சுமார் 300 பேர் இணைந்து வைகோவை சந்தித்து ஈழப் பிரச்னை பற்றிப் பேச அழைத்தோம். அன்று இரவே, ஒரு அரங்கத்தில் வைத்து எங்களிடம் உணர்ச்சிப் பூர்வமாகப் பேசினார். அப்போது நல்ல மழை பெய்தது. ஆயிரம் பேர் அமரக்கூடிய அந்த அரங்கம் நிறைந்து வெளியிலும் நூற்றுக்கணக்கானவர்கள் மழையில் நனைந்தபடியே வைகோவின் உரையைக் கேட்டார்கள்... வைகோவின் நார்வே வருகை எங்களைப் போன்ற ஈழத்தமிழர்களுக்கு எதிர்கால நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது'' என்றார் உணர்ச்சிப் பொங்க.

நார்வே பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பும் வைகோ, அடுத்து அமெரிக்கா செல்ல திட்ட மிட்டிருக்கிறார். சிகாகோ நகரில் வசிக்கும் தன் மகளைப் பார்த்த கையோடு நியூயார்க் சென்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் பங்கி மூனை சந்திக்க அவர் நேரம் கேட்டிருக்கிறார். ஐ.நா-வில் வேலை செய்யும் தமிழர்கள், இலங்கையின் ஐ.நா-வுக்கான சிறப்பு தூதர் ராதிகா குமாரசாமி ஆகியோர் வைகோவை ஐ.நா. சபைக்கு அழைத்து புதிய திருப்பங்களை ஏற்படுத்த முயல்கிறார்கள். நியூயார்க்கில் சர்வதேச மனித உரிமைக் கழகம், அகதிகள் மேம்பாட்டுத் தலைமையகம், அமெரிக்க அரசியல்வாதிகள் ஆகியோரைச் சந்தித்து இலங்கையில் நடக்கும் தமிழர்களுக்கெதிரான கொடுமைகளை வைகோ ஆதாரங்களுடன் விவாதிக்கப் போகிறார். புலிகளின் 'சர்வதேச நல்லெண்ணத் தூதுவராக' மாறிவிட்ட வைகோ, அமெரிக்காவில் புலிகள் இயக்கத் துக்குத் தடைவிதிக்கப்பட்டது தவறு என்று வாதாடும் அமெரிக்க சட்ட நிபுணர் குழுவையும் சந்தித்து ஆலோசனை செய்ய திட்டமிட்டிருக்கிறாராம்!

புலிகளிடமிருந்து பிரிந்து வந்த கருணா வுக்கு எதிராக ஏராளமான ஆதாரங்களைத்

p46kq4.jpg

திரட்டியிருக்கும் வைகோ, இலங்கை அரசின் செல்வாக்கோடு அந்தக் குழு அழகான இலங்கைத் தீவை எப்படியெல்லாம் அலங் கோலப்படுத்திக் கொண்டிருக்கிறது என்ற விவரங்களையும் சர்வதேச தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்களிடம் ஆதாரத்தோடு எடுத்துச் சொல்லப் போகி றாராம்!

''ஈழந்தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய அரசியல் தலைவர் ஒருவர் குரல் கொடுத்து, உலக அளவில் பிரசாரம் செய்வது இந்தியா- இலங்கை உறவை மோசமான நிலைக்குத் தள்ளிவிடும். இந்திய அரசு வைகோவைக் கட்டுப்படுத்த வேண்டும்'' என்று இலங்கை வெளியுறவு அதிகாரிகள் தங்கள் அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவை நெருக்கி வருகிறார்கள். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ''சீனாவில் பயங்கரவாதத்தை எதிர்க்கும் தலாய் லாமாவின் பேச்சுக்கு எப்படி இந்தியாவில் தடை போட முடியாதோ... அதேபோல் வைகோ முயற்சிகளுக்கும் ஜனநாயக ரீதியாகவும் பேச்சுரிமையின்படியும் ஒன்றும் செய்ய இயலாது'' என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் சூசகமாகக் கூறிவிட்டது.

மொத்தத்தில் நார்வேயில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஏற்பாடு செய்த இந்த மாநாடே, 'இலங்கையில் அமைதி' என்ற ஒரே நோக்கத்துக்காக நடத்தப்பட்டதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இதே மாநாட்டில் இலங்கை ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் இலங்கை தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், ஆளுங்கட்சிக்கு மிக நெருக்கமான ஜெயவர்த்தனா, புத்த பிட்சுக்கள் என்று ஒரு படையே வந்திருந்தது. கடந்த பல ஆண்டுகளாகவே இலங்கையில் அமைதி வரவேண்டும் என்று ஆசைப் படும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஐரோப்பாவில் உள்ள தன் பக்தர்களின் உதவியுடன் இந்த மாநாட்டைக் கூட்டி யிருக்கிறார் என்கிறார்கள்.

இப்படியரு சூழ்நிலையில் அவருடைய எண்ணம் ஈடேறுமா..? திருப்பங்கள் மிகுந்த இலங்கைப் பிரச்னையில் இது இன்னுமொரு திருப்புமுனைக் கான தருணம்!

http://www.vikatan.com

Edited by இணையவன்
படம் ஒன்று நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

நார்வே பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பும் வைகோ, அடுத்து அமெரிக்கா செல்ல திட்ட மிட்டிருக்கிறார். ஐ.நா-வில் வேலை செய்யும் தமிழர்கள், இலங்கையின் ஐ.நா-வுக்கான சிறப்பு தூதர் ராதிகா குமாரசாமி ஆகியோர் வைகோவை ஐ.நா. சபைக்கு அழைத்து புதிய திருப்பங்களை ஏற்படுத்த முயல்கிறார்கள்.

தமிழர்கள்? :D

ராதிகா குமாரசாமி ? :D

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் வயிற்றெரிச்சலுடன் எழுதப்பட்ட ஒரு செய்தி. ஈழத்தமிழர் விடயம் நகரும் கோணத்தை விரும்பாத சக்திகள் பின்னணியில் இருப்பது புரிகிறது. அடுத்து வரும் காலங்களில் வைகோவுக்கு தடைகளை ஏற்படுத்த அச்சக்திகள் கங்கணம் கட்டப்போவதும் பூடகமாக தெரிகிறது.

தமிழர்கள்? :D

ராதிகா குமாரசாமி ? :D

அண்ணை இதிலை உங்களிற்கு என்ன பிரச்சினை?

பிரச்ச்சனை ஒண்டும் இல்லை. ஆச்சரியம்... !! :D

கும்பக்க சாமி பற்றி கனகாலமா ஒரு செய்தியும் வர இல்ல. அதான்... :D

வெள்ளை புலி'யுடன் வைகோ!

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நார்வே நாட்டில் சூறாவளியாய் சுழன்றடித்திருக்கிறார் வைகோ.

p44ug8.jpg

'ஆர்ட் ஆஃப் லிவிங்' இயக்கத்தின் தலைவரும் ஆன்மிகவாதியுமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், நார்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோ நகரில் 'தெற்காசிய நாடுகளில் அமைதியும் ஆக்கமும்' என்ற சர்வதேச மாநாட்டை நடத்தினார். இதில் கலந்துகொண்ட வைகோ, இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமிடையே பேச்சுவார்த்தை நடத்திய நார்வே அமைச்சர் எரிக் சோல்ஹைமைச் சந்தித்து, 'இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்படும் படுகொலைத் தாக்குதலை ஐரோப்பிய யூனியன் நாடுகள் தடுக்கவேண்டும்' என்று வலியுறுத்தி இருக்கிறார்.

''தமிழினத்தை மொத்தமாக அழித்துவிட இலங்கை அரசு முனைகிறது. இந்தியாவும்மௌனம் சாதிக்கிறது. தமிழர்கள் இல்லாத நாடே உலக வரைபடத்தில் இல்லை. ஆனால், தமிழர்களுக்கு ஒரு நாடு இல்லை. விடுதலைப் புலிகள் ஏனோ

கொடுங்கோலர்களாகச் சித்திரிக்கப் படுகிறார்கள்'' என்று கொட்டித் தீர்த்திருக்கிறார் வைகோ. நார்வேயின் வெளியுறவுத்துறை அலுவல கத்தில் நடந்த இந்த ஒரு மணிநேரப் பேச்சுவார்த்தை கடைசிவரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. 'இந்தியாவில் எந்தப் பதவியையும் வகிக்காத வைகோவை சோல்ஹைம் எப்படி சந்திக்கலாம்' என்று இலங்கை அரசு பிரச்னை கிளப்பும் என்று நார்வே எதிர்பார்த்தது. அதேபோல, இலங்கை ரியாக்ஷன் காட்டவும் தொடங்கிவிட்டது.

பிப்ரவரி 2002-ல் அன்று இலங்கை அதிபராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே, எரிக் சோல்ஹைம் உதவியுடன் போர்நிறுத்தம் ஏற்பட வழிவகுத்தார். சோல்ஹைம், புலிகளின் தலைவரான ஆன்டன் பாலசிங்கத்தின் நண்பர் என்பதும் ரணில் விக்ரம சிங்கே அறியாததல்ல. சுமார் பத்து ஆண்டுகளாக இலங்கையில் போர் நிறுத்தத்துக்காகக் குரல் கொடுப்பவர் சோல்ஹைம். இவருக்கு அமெரிக்காவின் ஆதரவும் இருப்பதாக நம்பப்படுகிறது.

வைகோ-எரிக் ஸ்லோஹைம் சந்திப்புப் பற்றி மத்திய அரசுக்கோ, நார்வேயில் உள்ள இந்திய தூதரகத் துக்கோ தெரியாமல் போயிருக்க முடியாது. இந்திய அரசு 'வேண்டாம்' என்று சொல்லியிருந்தால் வைகோவைப் பார்ப்பதை சோல்ஹைம் தவிர்த்திருப்பார். இலங்கைப் பிரச்னையில் நேரடியாகத் தலையிடமுடியாத இந்தியா, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்குப் பச்சைக்கொடிக் காட்டியிருப்பதாகவே அமெரிக்க உயரதிகாரிகள் கருதுகிறார்கள். ரணில் விக்கிரமசிங்கே பதவிபோன பிறகு இலங்கை அரசால் தரக்குறைவாக நடத்தப் பட்ட எரிக் சோல்ஹைம், 'வெள்ளை புலி' என்று கேலியும் செய்யப்பட்டார் (புலிகளுக்கு ஆதரவா கவே அவர் இருக்கிறார் என்ற கிண்டல்தான் இது!).

இந்நிலையில், இந்திய அரசு வைகோவின் நார்வே சந்திப்பை எப்படிப் பார்த்துக்கொண்டிருக்கிறது?

சீனாவிடமிருந்தும் பாகிஸ்தானிடமிருந்தும் இலங்கை அரசு மிக நவீன ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் (அணுகுண்டு நீங்கலாக) அனைத்தையும் இலவசமாகவோ மானியமாகவோ வாங்கிவருகிறது. இலங்கையில் இப்படி நவீன ஆயுதங்கள், போர்க்கருவிகள் குவிவது நல்லதில்லை என்று மத்திய அரசை ராணுவ மற்றும் உளவுத்துறை நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். ராஜீவ் காந்தி கொலையால் இலங்கைத் தமிழர்கள் மீதான அடக்குமுறையைப் பார்த்து மத்திய அரசு மௌனம் சாதித்தாலும், போர்நிறுத்தத்துக்கு இப்படிப்பட்ட புழக்கடைப் பேச்சுவார்த்தைகளை ஆதரிப்பதில் தவறில்லை என்றும் பாதுகாப்புத்துறை அறிஞர்கள் கருதுகிறார்கள்.

p45xt4.jpg

மேலும், தீவிரவாதத்துக்கு எதிராகக் குரல் கொடுக் கும் அமெரிக்காவும் ஆசியக் கண்டத்தில் சீனாவின் கை ஓங்குவதை விரும்பவில்லை. ஒருவேளை சீனா- இலங்கை-பாகிஸ்தான்-பங்களாதேஷ்-நேபாளம் ஆகிய நாடுகள் இணைந்து இந்தியாவுக்கு ஆபத்தை உருவாக்கலாம்... அப்படியரு சூழ்நிலையில் எல்லாவிதத்திலும் பலம் வாய்ந்த அமெரிக்காவின் அனுசரணை நமக்குத் தேவை என்று முடிவெடுத்து, அதற்காகவே இந்திய அணு ஆயுத ஒப்பந்தத்தை ஆதரித்தது.

இப்படியரு சூழ்நிலையில், நார்வேயில் எரிக் சோல்ஹைமிடம் வைகோ பேசியிருப்பது ஈழத் தமிழர்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்றுவிட்டது.

p46bdi1.jpg

''பாலா அண்ணன், தமிழ்ச்செல்வன் ஆகி யோர் மறைவுக்குப் பிறகு உலக அளவில் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க, உலகத் தலை வர்களைச் சந்திக்க, பேச்சுவார்த்தை நடத்த ஒரு தலைவர் இல்லாத குறையை வைகோ போக்கிவிட்டார். தேர்தல் அரசியலை மட்டுமே மனதில்கொண்டு முதலைக்கண்ணீர் வடிக்கும் மற்ற தமிழகத் தலைவர்களை இனி நம்பத் தயாராக இல்லை. ஆட்சியில், அதிகாரத்தில், மத்திய அரசை ஆட்டிப்படைக்கும் இடத்தில் இருக்கும் தமிழினத் தலைவர்கள் எங்கள் மரியாதையை இழந்துவிட்டார்கள். அவர்கள் போலிகள்'' என்று ஆவேசப்பட்டார் அமெரிக்க ஈழத்தமிழர்களின் ஆதரவுத் தலைவர் ஒருவர்.

அவரே மேலும் சொல்லும்போது, ''நான் இந்த மாநாட்டைப் பற்றிக் கேள்விப்பட்ட வரைக்கும் வைகோவை மாநாட்டில் கலந்து கொள்ளச் செய்ய முடியாத அளவுக்கு

இலங்கை அரசு கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தியது. வைகோவின் விசாவை நிராகரிக்க பெரிய அளவில் முயற்சிகளைச் செய்தது. ஆனால், எரிக் சோல்ஹைம்தான், 'வைகோ நிச்சயம் வரவேண்டும். அவருக்கான விசா எந்தக் கட்டத்திலும் மறுக்கப்பட்டுவிடக் கூடாது' என்று சொல்லி பெரும் முயற்சி எடுத்தார். அதுமட்டுமல்ல, வைகோ மீது நார்வே அரசு கொண்டிருக்கும் மரியாதையை இன்னொரு சம்பவமும் எங்களுக்கு எடுத்துக் காட்டி இருக்கிறது. நார்வேயின் வெளிவிவகாரத்துறை அமைச்சக அதிகாரிகள் வைகோவுக்கு 12-ம் தேதி மதியம் கிராண்ட் லஞ்ச் கொடுத்துக் கௌரவித்தார்கள். அதோடு, வைகோவின் நார்வே பயணத் திட்டத்தில் இல்லாத ஒரு நிகழ்ச்சிக்கும் வைகோ எங்களுக் காக ஒப்புக் கொண்டார். நாங்கள் சுமார் 300 பேர் இணைந்து வைகோவை சந்தித்து ஈழப் பிரச்னை பற்றிப் பேச அழைத்தோம். அன்று இரவே, ஒரு அரங்கத்தில் வைத்து எங்களிடம் உணர்ச்சிப் பூர்வமாகப் பேசினார். அப்போது நல்ல மழை பெய்தது. ஆயிரம் பேர் அமரக்கூடிய அந்த அரங்கம் நிறைந்து வெளியிலும் நூற்றுக்கணக்கானவர்கள் மழையில் நனைந்தபடியே வைகோவின் உரையைக் கேட்டார்கள்... வைகோவின் நார்வே வருகை எங்களைப் போன்ற ஈழத்தமிழர்களுக்கு எதிர்கால நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது'' என்றார் உணர்ச்சிப் பொங்க.

நார்வே பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பும் வைகோ, அடுத்து அமெரிக்கா செல்ல திட்ட மிட்டிருக்கிறார். சிகாகோ நகரில் வசிக்கும் தன் மகளைப் பார்த்த கையோடு நியூயார்க் சென்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் பங்கி மூனை சந்திக்க அவர் நேரம் கேட்டிருக்கிறார். ஐ.நா-வில் வேலை செய்யும் தமிழர்கள், இலங்கையின் ஐ.நா-வுக்கான சிறப்பு தூதர் ராதிகா குமாரசாமி ஆகியோர் வைகோவை ஐ.நா. சபைக்கு அழைத்து புதிய திருப்பங்களை ஏற்படுத்த முயல்கிறார்கள். நியூயார்க்கில் சர்வதேச மனித உரிமைக் கழகம், அகதிகள் மேம்பாட்டுத் தலைமையகம், அமெரிக்க அரசியல்வாதிகள் ஆகியோரைச் சந்தித்து இலங்கையில் நடக்கும் தமிழர்களுக்கெதிரான கொடுமைகளை வைகோ ஆதாரங்களுடன் விவாதிக்கப் போகிறார். புலிகளின் 'சர்வதேச நல்லெண்ணத் தூதுவராக' மாறிவிட்ட வைகோ, அமெரிக்காவில் புலிகள் இயக்கத் துக்குத் தடைவிதிக்கப்பட்டது தவறு என்று வாதாடும் அமெரிக்க சட்ட நிபுணர் குழுவையும் சந்தித்து ஆலோசனை செய்ய திட்டமிட்டிருக்கிறாராம்!

புலிகளிடமிருந்து பிரிந்து வந்த கருணா வுக்கு எதிராக ஏராளமான ஆதாரங்களைத்

p46kq4.jpg

திரட்டியிருக்கும் வைகோ, இலங்கை அரசின் செல்வாக்கோடு அந்தக் குழு அழகான இலங்கைத் தீவை எப்படியெல்லாம் அலங் கோலப்படுத்திக் கொண்டிருக்கிறது என்ற விவரங்களையும் சர்வதேச தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்களிடம் ஆதாரத்தோடு எடுத்துச் சொல்லப் போகி றாராம்!

''ஈழந்தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய அரசியல் தலைவர் ஒருவர் குரல் கொடுத்து, உலக அளவில் பிரசாரம் செய்வது இந்தியா- இலங்கை உறவை மோசமான நிலைக்குத் தள்ளிவிடும். இந்திய அரசு வைகோவைக் கட்டுப்படுத்த வேண்டும்'' என்று இலங்கை வெளியுறவு அதிகாரிகள் தங்கள் அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவை நெருக்கி வருகிறார்கள். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ''சீனாவில் பயங்கரவாதத்தை எதிர்க்கும் தலாய் லாமாவின் பேச்சுக்கு எப்படி இந்தியாவில் தடை போட முடியாதோ... அதேபோல் வைகோ முயற்சிகளுக்கும் ஜனநாயக ரீதியாகவும் பேச்சுரிமையின்படியும் ஒன்றும் செய்ய இயலாது'' என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் சூசகமாகக் கூறிவிட்டது.

மொத்தத்தில் நார்வேயில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஏற்பாடு செய்த இந்த மாநாடே, 'இலங்கையில் அமைதி' என்ற ஒரே நோக்கத்துக்காக நடத்தப்பட்டதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இதே மாநாட்டில் இலங்கை ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் இலங்கை தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், ஆளுங்கட்சிக்கு மிக நெருக்கமான ஜெயவர்த்தனா, புத்த பிட்சுக்கள் என்று ஒரு படையே வந்திருந்தது. கடந்த பல ஆண்டுகளாகவே இலங்கையில் அமைதி வரவேண்டும் என்று ஆசைப் படும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஐரோப்பாவில் உள்ள தன் பக்தர்களின் உதவியுடன் இந்த மாநாட்டைக் கூட்டி யிருக்கிறார் என்கிறார்கள்.

இப்படியரு சூழ்நிலையில் அவருடைய எண்ணம் ஈடேறுமா..? திருப்பங்கள் மிகுந்த இலங்கைப் பிரச்னையில் இது இன்னுமொரு திருப்புமுனைக் கான தருணம்!

http://www.vikatan.com

வைகோ நோர்வே விஜயம், பிரியங்கா நளினி சந்திப்பு இதையும்விட இந்தியமத்திய அரசின் மவுணம்.எங்கேயோ இடிக்குது....... அப்ப தமிழீழம்கண்ணுக்கு தெரியுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.