Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நளினி பிரியங்கா சந்திப்பு இலங்கைத் தமிழர் மீதான இந்தியாவின் அனுதாபத்தினை அதிகரிக்கும் - அமைச்சர் சந்திரசேகரன்

Featured Replies

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளியான நளினியை பிரியங்கா சந்தித்துப் பேசியுள்ளமை இலங்கை தமிழர் மீதான இந்தியாவின் அனுதாபத்தினை அதிகரிக்கச் செய்யும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், அமைச்சருமான பெ. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இந்தியா காங். கட்சியின் தலைவியும், ராஜீவின் துணைவியாருமான சோனியா காந்திக்கு நேற்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே தெரிவித்துள்ளார்.

பிரியாங்கா காந்தியின் செயற்பாட்டினை வரவேற்று அனுப்பி வைத்துள்ள இக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது : : பிரியங்காவின் இந்த நடவடிக்கை இந்திய பெண் இனத்திற்கும் காந்தி குடும்பத்துக்கும் பெருமை சேர்க்கும் செயலாகும். இந்த நடவடிக்ககை மனிதாபிமான சிந்தனைகளின் சிகரமாக அமைந்துள்ளது.

ராஜீவின் மறைவு ஈழப் போரட்டம், இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் மிகப் பெரும் இடைவெளியை ஏற்படுத்தியிருப்பினும் தற்போதைய பிரியங்காவின் அணுகு முறை இலங்கை தமிழர்களின் பிரச்சினையில் இந்திய அனுதாப வெளிப்பாட்டினை எடுப்பதற்கு வழிவகுக்குமாயின் இலங்கை தமிழர்கள் அனைவரும் அதற்காக என்றும் நன்றியுடையவராக இருப்பார்கள் இந்த சந்திப்பு ஒரு தற்செயல் சந்திப்பாக அமையாமல் அனைத்து இந்திய மக்களுக்கும் ஒரு புதிய தகவலை சொல்வதாகவும் அமையவேண்டும்.

இப்படியான ஒரு நல்ல விளைவு இந்தியா மீதான விசுவாசத்தை அதிகரிக்கும். பிரியங்காவின் இந்த நடவடிக்கைக்கு மலையக மக்கள் சார்பில் எமது வாழ்த்தினைத்; தெரிவித்துக் கொள்கின்றேன்.

பிரியங்கா நளினி சந்திப்பு குறித்து கருத்து கூற அரசு மறுப்பு.

முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கின் குற்றவாளியான நளினியுடன் அவரது மகள் பிரியங்கா மேற்கொண்ட சந்திப்பு தொடர்பாக அரசு கருத்துக் கூறுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது பிரியங்கா-நளினி சந்திப்பு தொடர்பாக இலங்கi அரசின் நிலைப்பாடு என்ன? என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே அமைச்சர் கேஹெலிய கருத்துக் கூறுவதற்கு மறுத்து விட்டார்.

காந்தி குடும்பத்தினரை அழிக்க நினைத்த ஓர் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபட்டுள்ளவருக்கும் காந்தியின் பரம்பரையை சேர்ந்தவருக்கும் இடையில் சிறைச்சாலையில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது என்று மட்டும் கெஹெலிய கூறினார்.

பிரியங்கா மீது சட்ட நடவடிக்கை சுப்பிரமணிய சுவாமி

கடந்த மாதம் 19ம் திகதி சிறைச்சாலை விதிமுறைகளை மீறிய நிலையில் நளினியை பிரியங்கா சந்தித்ததற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி அறிக்கை வெளியிட்டுளார். அவ்வறிக்கையில் அதிக பாதுகாப்பு நிறைந்த வேலூர் சிறைக்குள் ராஜீவின் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான நளினியை, பிரியங்கா எந்த விதமான அனுமதியும் இன்றி சந்தித்துள்ளர்ர். இந்த சந்திப்பு சிறைத் துறை அதிகாரிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

தீவிரவாதிகள் அடைக்கபட்டுள்ள வேலூர் சிறைக்குள் முன் அனுமதியின்றி, அத்துமீறி நுழைந்த பிரியங்கா மீது தமிழக அரசு சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மே 21ம் திகதிக்குள் இது சம்மந்தமாக தமிழக அரசு நடவடிக்கை மெற்கொள்ளாவிட்டால் நான் சட்டப்படி நீதிமன்றில் வழக்குத் தொடர்வேன். என்றுள்ளது.

நன்றி வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா,

இப்ப மட்டும் ஈழத் தமிழர் மேல் இந்தியாவின் அநுதாபம் பொங்கி வழியுது, இனி அது கண்ணீர் கசிந்துருகி கரைபுரண்டோடும்! மற்றவனை மடையனாக்குவதற்கு ஒரு அளவு வேண்டாமா ? அதுசரி மலை நாட்டு மந்தைக் கூட்டத்தை வழிநடத்தும் தலைவனல்லவா? அதுதான் தன்மானத்தமிழனையும் ஏய்த்துப் பார்க்கலாம் எண்டு கதை விடுகிறான் போல.

வேட்டை நாய் பிள்ளையான் கிழக்கு உள்ளூராட்ச்சித் தேர்தலில் வெ(கொ)ன்று கொழும்பு திரும்பியவுடன் ஓடிப்போய்ப் பார்த்து குசலம் விசாரித்து அடுத்த தேர்தல் கூட்டணி பற்றியும் பேசிய தலைவனல்லவா ? மகிந்தவுக்கு...கழுவிவிடும் இதெல்லாம் எமக்குக் கதை சொல்ல வெளிக்கிட்டு விட்டதுதான் கவலை.

அட உவன் கிடக்கிறா விடுங்கோ ரகுநாதன்

சுப்பிரமணிய சாமி சொல்லுறார் அதை கேளுங்கோ...

இதை விட சிரிப்பு வரும்

அத்துமீறி நுழைந்தாராம் பிரிங்கா..

பிறகு சொல்லுறான் சிறை அதிகாரி களும் சம்மதித்தார்களாம்.. அனுமதிச்சா பிறகு என்னண்டு அய்யா அத்து மீர்றது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.