Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த தெழிலாளர் வார்க்கத்தின் ஒத்துழைப்பு அவசியம்-மே தினச் செய்தியில் பிரதமர் ரட்ணசிறி விக்கரமநாயக

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த தெழிலாளர் வார்க்கத்தின் ஒத்துழைப்பு அவசியம்-மே தினச் செய்தியில் பிரதமர் ரட்ணசிறி விக்கரமநாயக

வீரகேசரி இணையம் 5/1/2008 10:39:43 AM - நாட்டின் இறைமைக்கும் சமாதானத்துக்கும் சவாலாக எழுந்துள்ள பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்காக தொழிலாளர் வர்க்கத்தினரின் ஒத்துழைப்பு அவசியாமாகும் என பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க விடுத்துள்ள மே தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அச்செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

உயிர்த் தியாகத்தின் மூலம் பல உரிமைகளைப் பெற்றுக்கொண்ட வீரமிக்க தொழிலாளர் வர்க்கத்தினரின் வெற்றியினை நினைவுகூரும் இந்த மே தினத்தில் முதலில் அவர்களுக்கு எனது மரியாதையைச் செலுத்துகிறேன். தொழிலாளர் வர்க்கத்தினரின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பததற்காகவும் பெற்றுக்கொண்ட உரிமைகளைப் பாதுகாத்துக் கொடுப்பதற்காகவும் நடவடிக்கை எடுக்கவேண்டியது முற்போக்குவாத அரசாங்கமொன்றின் பொறுப்பும் கடமையுமாகும். அவ்வாறே எமது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள் மற்றும் அவர்களின் முன்னேற்றத்துக்காகவும் அர்ப்பணித்துள்ளது. உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் அதேநேரம் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்காகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டியமையும் முக்கியமானதொரு விடயம் என்பதனையும் ஞாபகப்படுத்த வேண்டும்.

இலங்கையில் காணப்படும் பயங்கரவாதப் போராட்டம் போன்ற துரதிஷ்டவசமான சம்பவங்கள் தொடர்பாக முழுமையான விளக்கமொன்று தொழிலாளர் வாக்கத்தினரிடம் காணப்படுதல் வேண்டும். ஏனெனில் இவ்வாறானதொரு நிலையிலே அரசாங்கம் முகம் கொடுத்துள்ள இந்த சவாலின் கீழ் தொழிலாளர் வர்க்கத்தினர் தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும். அனைத்தையும் விட நாட்டின் ஐக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும்.

இலங்கையில் தொழிலாளர் வர்க்கத்தினரின் பெறுமதி மற்றும் முக்கியத்துவம் பற்றி நாம் புரி;ந்து கொண்டுள்ளோம். தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நாம் பின்நிற்கப் போவதில்லை. சாதி, இன, மத. மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரே தாயின் பிள்ளைகளாக முன்னோக்கிச் சென்று நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்குத் தோள் கொடுப்போம். அதற்காக எமது தொழிலாளர் வர்க்கத்தினருக்கு பலமும் சக்தியும் கிடைக்கவேண்டுமென இந்த மே தினத்தில் பிரார்த்திக்கிறேன் என பிரதமர் தனது மே தின செய்தியில் தெரிவித்துள்ளார்

Edited by கறுப்பி

இலங்கையில் பாட்டாளிகள் எண்டால் சம்பளத்துக்கு அதிகமாக வேலை செய்து உயிரை விடும் இராணுவத்தினர்தானே....

அவை கட்டாயம் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவினம்...

Edited by தயா

பிரதமர் பிராத்திக போராராம்..

ஏதோ பொங்கலுக்கு அல்லது வெசாக்குக்கு.. செய்த அறிக்கையை இங்க கொணந்து வாசிச்சுட்டான் பொலகிடக்கு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.