Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெயரிடப்படாதது - வாசுதேவன்.

Featured Replies

பெயரிடப்படாதது

இதோபார்

நாம் இப்போ கீழொதிங்கி நிற்கும்

இம்மரத்தின் பெயரை நானறியேன்

இலைகளிலிருந்து வழிந்தோடும்

மழைத்துளிகள் மட்டுமே எனக்குப் பரிச்சயமானவை

மழைத்துளிகளுக்குப் பெயரிடாமலே

மனம் அவற்றுடன் பரிச்சயமடையவில்லையா

வசந்தகாலப் பசுமையைத் தாங்கும்

மரங்களின் பெயர்களை அறிந்திருந்த ஒரு காலமமிருந்தது

கலவிக்கழைக்கப் பாட்டிசைக்கும்

பறவைகளின் நாமங்களும் பரிச்சயமாகவிருந்தன

இலையசையும் திசைகொண்டு

காற்றிற்கு நாமமிடும் திறனிருந்தது

அப்போ பூமி உருண்டையானதென அறிந்திருந்தபோதும்

தட்டையான ஒரு நிலத்துண்டம் மாத்திரமே

உணர்திறனுக்குள் அகப்பட்:டுக்கிடந்தது

தட்டையான உலகம் அர்த்தமுள்ளதாக இருந்தது

இதோபார்

பின்னர் வலங்கள் பலவற்றைக் கடந்து

உருண்ட உலகை உள்வாங்குதலில்

பெயரிடல் முக்கியமானதாக இருந்தது

பெயரிடப்படாத அனைத்துமே ஊமையாகவிருந்தது

பெயரிடலின்றி உறவுகள் சாத்தியமற்றிருந்தது

ஆனால் பெயரிடல் இப்போ அபத்தமாகிவிட்டது

நாம் நடைபயணிகளாக இருக்கும் இக்காட்டில்

இம்மரத்ததடியில் அருகருகாய் மழைக்கொதுங்கினோம்

எமது பெயர்கள் எதுவாயிருந்தாலென்ன

இக்காட்டு மரங்களினதும் இங்கு பாடும் பறவைகளினதும்

பெயர்கள் எவையாயிருந்தாலென்ன

வசந்தம் பிழிந்தொழுகும் இவ்வடர் வனம்

நமக்கு விடும் அழைப்பை மாத்திரம் ஏற்றுக்கொள்வோம்

மழையில் நனைந்த மூடலாடைகள்

உன்னுடலழகை மகிமைபப்படுத்தியிருக்கிறது

வினையெச்சங்களாலும் குரல் வளைவுகளாலும் மட்டுமே

விபரிப்புறும் புயலின் தோற்றத்திற்குக் காரணமாவோம்

இதோபார்

நிரந்தரமாகக் கலைந்தோடிக்கொண்டிருக்கும

முகில்களுக்குப் பெயரிடுவதில் என்னயிருக்கிறது

ஆகவே பெயரெதுவுமின்றி ஞாபகங்களெதுவுமின்றி

சில படிமங்களை மட்டும் சுமந்தவாறு

பின்னர் அகன்று செல்வோம்

பெயரிடாத மரத்தின் வேர்களுடன்

அனைத்தும் விட்டுச் செல்லப்படட்டும்

உன் நீல விழிகளுள் சிறைப்பட்டுப்போன

மாலை வெளிச்சத்தை மட்டும்

நான் என்னுடன் அழைத்துச் செல்கிறேன்

மீண்டும் மழை வரலாம்.

******

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசுதேவன் கவிதை அருமையாக இருக்கிறது.

அனஸ்

  • தொடங்கியவர்

வாசுதேவன் கவிதை அருமையாக இருக்கிறது.

அனஸ்

நன்றி அனஸ்.

உஙகளது கவிதையை வாசித்தேன்.

அதை நானே எழுதினேனோ என ஒரு சந்தேகம் என்னுள் எழுகிறது.

மன்னித்து விடுங்கள்.

ஒரே விதமான உணர்வுகள் இரு மனங்களில் அதிர்வது சாத்தியமில்லை என்று நாம் கூறிவிட முடியாது.

நான் எழுதியவற்றையெல்லாம் நீங்களும் எழுதியிருக்கலாம்.

யார் நீங்கள் ?

கவிதை அருமை.

பொருள் விளக்கங்களும், பெயரிடல்களும், வரையறைகளும், தத்துவ நியாயங்களும்

நேர்கோடான வாழ்வை சிக்கல் படுத்தி சிந்திக்க வைக்கிறதோ என்று சிலவேளைகளில்

எண்ணுவதுண்டு.

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசு தேவன் உங்களைப்பற்றியும் நான் நிறையவே யோசிக்கிறேன். நீங்கள் எனக்குத்தெரிந்த வாசுதேவனா என்றெல்லாம்

நல்லது எனது Email anasnawas@yahoo.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள் நிறையவே பேசுவோம்.

அனஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.