Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முகமாலையில் படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: 8 படையினர் பலி- 20 பேர் காயம்

Featured Replies

வட போர்முனையான முகமாலை ஊடான சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 8 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் போடுற சாப்பாட்டை சாப்பிட்டு இராணுவ முகாமில் சும்மா இருக்க முடியாமல் உள்ளது.

புலியிடம் சாப்பிட்டால் தான் பத்தியப்படும் போல் தெரிகின்றது.

வரலாறு காணாத பாரிய படை நடவடிக்கை ஏதுமில்லையோ? பொன்னர் சலிச்சுப் போயிற்றைரோ தெரியல்ல.

முகமாலையிலைதான் இராணுவத்தை பலிகொடுப்பம் என்று என்று வெளிக்கிட்டவை. அதாலை அவையளின்ரை வெற்றியோ தோல்வியோ அங்குதான் நிர்ணயிக்கப்படும்போலை.. நடக்கட்டும் நடக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முகமாலைப் பகுதியில் மீண்டும் இன்று காலை மோதல் 8 படையினர் பலி

Monday, 05 May 2008

யாழ்ப்பாணக் குடாநாட்டின் முன்னரங்க காவல்நிலையாகவுள்ள முகமாலை பகுதியில் இன்று இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் எட்டு படையினர் கொல்லப்பட்டதுடன், 20 படையினர் காயமடைந்திருப்பதாக அறிவிக்கப்படுகின்றது. முகமாலை ஊடாக சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சியின் போதே இந்த மோதல் இடம்பெற்றது.

படையினரின் முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்த் தாக்குதலால் முறியடிக்கப்பட்டது என வன்னியிலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 8 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாண பின்தளங்களில் இருந்து சரசமாரியான பல்குழல் வெடிகணைகள் மற்றும் ஆட்டிலெறி எறிகணைகளின் சூட்டாதரவுடன் இன்று முற்பகல் 10:00 மணியளவில் முகமாலையில் உள்ள விடுதலைப் புலிகளின் காவலரண்கள் மீது படையினர் தாக்குதல் தொடுத்தனர். இதற்கெதிராக கடுமையான எதிர்த் தாக்குதலை புலிகள் தொடுத்தனர். படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் சடலம் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளது.

இதில் படையினரிடமிருந்து ஏகே எல்எம்ஜி – 01, நடுத்தர ரவைகள் - 1,500, ஆகியன புலிகளால் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் புலிகள் தரப்பில் இழப்புக்கள் எதுவும் ஏற்பட்டதாக அறிவிக்கப்படவில்லை.

இதேவேளையில், முகமாலை பாதுகாப்பு முன்னரங்கு மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை 9.30 அளவில் விடுதலைப் புலிகள் தாக்குதல் மேற்கொண்டதாகவும் நடவடிக்கைகளுக்கான தலைமைச் செயலக்ததின் அறிக்கையில் தெரியவிக்கப்படுகிறது.

பாரிய எண்ணிக்கையிலான விடுதலைப் புலி உறுப்பினர்கள் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், எனினும் இராணுவத்தினர் வெற்றிகரமாக பதில் தாக்குதல் மேற்கொண்டதாகவும் இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மோதல்களின் போது இரண்டு படையினர் கொல்லப்பட்டதுடன், 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இராணுவத்தைச் சேர்ந ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த மூன்று படையினர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், ஏனைய காயமடைந்த படையினர் பலாலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

http://www.ajeevan.ch/content/view/2453/1/

  • கருத்துக்கள உறவுகள்

முகமாலையில் கடும் மோதல் இரு படையினர் பலி; 14 பேர் காயம் - முன்னேற்ற முயற்சி முறியடிப்பு என புலிகள் அறிவிப்பு

வீரகேசரி இணையம் 5/6/2008 12:06:28 AM - யாழ்ப்பாணம், முகமாலைப் பகுதியில் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் நேற்று முற்பகல் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. புலிகளின் பகுதியினை நோக்கி படையினர் முன்னேற முயற்சித்ததையடுத்தே இருதரப்பினருக்குமிடையில் மோதல் வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்ற மோதலில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர். புலிகள் தரப்பில் 10 பேர் பலியானதுடன் 52 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

இதேவேளை, படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.