Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனித நேய மகுடங்கள்! - சோலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனித நேய மகுடங்கள்! - சோலை

pg6kg4.jpg

மனிதநேயத்தின் கொடுமுடியாக அன்னை சோனியா காந்தி உயர்ந்து நிற்கிறார். பழிவாங்கும் உணர்வு, கோபம், குரோதம் ஆகியவை இடம் பிடிக்க முடியாத இதயம் படைத்தவர்.

கையகல அதிகாரம் வந்தாலே குதியோ குதியென்று குதிப்பவர்களைப் பார்க்கிறோம். வேலூர் சிறையில் அடைபட்டிருக்கும் நளினியை சோனியாவின் புதல்வி பிரியங்கா சந்தித்தார். அந்தப் பெண்ணிற்கு ஆறுதல் கூறினார்.

நளினி ஏன் அந்தச் சிறையில் தவம் செய்கிறார்? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஒரு குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர். குற்றம் சாட்டப்பட்ட 25 பேரும் குற்றவாளிகள் என்றும் தூக்குதான் அவர்களுக்கு தண்டனை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நளினிக்கும் தூக்கு தண்டனைதான். அவர் சிறை செல்லும்போதே தாய்மை எய்திய அன்னை. தூக்கு மேடையின் நிழலிலேயே அவர் அன்னையானார்.

அனைவரின் தூக்கு தண்டனையையும் ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று உலக மனித நேயர்கள் குரல் கொடுத்தனர். குறிப்பாக, நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படவேண்டும் என்று சோனியாவைச் சந்தித்தனர். உலகின் மனசாட்சி விழித்துக் கொண்டது. பகைவனுக்கும் அருளும் பேருள்ளம் படைத்த அந்த அன்னை அந்தக் கோரிக்கையை ஏற்றார். குரல் கொடுத்தார். நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. தூக்கு மேடையின் நிழலில் துயில் கொண்டிருந்த நளினி நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்று சோனியா கருதினார். எனவே, நளினிக்கு ஆயுள் தண்டனை போதும் என்று அறிவித்தார். உலகம் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனது. அந்தக் கருணைக் கடலை நன்றிப் பெருக்கோடு வாழ்த்தியது.

அடுத்து நடந்த ஒரு நிகழ்வு மீண்டும் உலகை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

வேலூர் சிறையில் தனிமைத் தவம் இருக்கும் நளினியை அண்மையில் ராஜீவ் _ சோனியாவின் புதல்வி பிரியங்கா சந்தித்தார். அந்த மங்கை மனித நேயத்தின் அருந்தவப் புதல்வி. தமது தாயைப்போல் அவரும், மனித உறவுகளுக்குப் புதிய இலக்கணம் படைத்து விட்டார். மனசாட்சி உள்ளவர்கள் மகிழ்ந்து போனார்கள்.

ஆமாம். ராஜீவ் காந்தியைக் கொன்ற குழுவில் அவரும் ஓர் அங்கம் என்று நீதிமன்றம் சொன்னது. சாமானிய மக்கள் என்ன கருதுவார்கள்? ‘பழிக்குப் பழி’ என்று ஆவேசம் கொள்வார்கள். ‘ஒரு கொலைக்கு இரண்டு கொலைகளாவது செய்வோம்’ என்று சபதம் செய்வார்கள். ஆனால், தனது தந்தையைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள்தண்டனை அனுபவிக்கும் நளினியை பிரியங்கா சந்திக்கிறார். நலம் விசாரிக்கிறார். எண்ணிப் பார்த்தாலே மெய்சிலிர்த்துப் போகிறோம்.

பிரியங்கா மிக ரகசியமாகத்தான் சந்தித்தார். ஆனால், ரகசியம் என்பதனை ஒருவர் மட்டுமே அறிவாரானால், அவர் நினைத்தால் காத்திட முடியும். இருவருக்குத் தெரிந்தால் அந்த ரகசியம் தாற்காலிகமாகத் தலைமறைவாக இருக்கலாம். ஆனால், அமுக்கி வைக்கப்பட்ட அந்த ரகசியம் சமயம் பார்த்துத் தாவி எழுந்து வரும். நளினி_ பிரியங்கா சந்திப்பை சிறை அதிகாரிகள் அறிவார்கள். எனவே, அந்தச் சந்திப்பின் ரகசியம் மரித்துப் போய்விட்டது.

எனவே, அந்தச் சந்திப்பு பகிரங்கமாக மைதானத்தில் வலம் வர ஆரம்பித்தது. இனி பிரியங்காதான் நடந்தது உண்மையா என்பதனை உலகிற்குச் சொல்ல முடியும். அவரும் மௌனம் கலைத்தார். விவரித்தார். ‘எனது தந்தையின் கொலை வழக்குக் குற்றவாளி நளினியைச் சந்தித்தது உண்மைதான். இந்தச் சந்திப்பு முழுக்க முழுக்க தனிப்பட்ட முறையில் நடந்த சந்திப்பாகும். என்னுடைய தனிப்பட்ட முயற்சியின் காரணமாகவே இந்தச் சந்திப்பு நடந்தது.

வன்முறையில் தந்தையைப் பறிகொடுத்த எனக்கு இந்தச் சந்திப்பு ஆறுதலை அளித்தது. ஆனால் பகை எண்ணம், பழி உணர்வு, கோபம், குரோதம் போன்றவற்றில் எமக்கு நம்பிக்கை இல்லை. அந்த உணர்வு என்னை ஆட்கொள்ள அனுமதிக்க மாட்டேன்.

எனது தாயும், காங்கிரஸ் பேரியக்கத் தலைவருமான சோனியாஜி இந்தப் பிரச்னையில் தலையிட்டு நளினிக்கு ஆயுள் தண்டனையாகக் குறைக்க வழி செய்தார். காரணம், எங்களுக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை’ என்றார் பிரியங்கா.

பிரியங்காவின் உடன்பிறப்பு ராகுல் காந்தியும் இதே போன்ற மிகுந்த மனித நேயம் பொங்கும் கருத்துக்களைக் கூறியிருக்கிறார்.

இவர்கள் ராஜீவ் காந்தியை இழந்ததால் நேரடி பாதிப்புக்கு உள்ளானவர்கள். ஆனால் மனிதநேயத்தை வளர்ப்பதில், உணர்த்துவதில் ஒருவருக்கு ஒருவர் போட்டி போடுகின்றனர். நிச்சயமாக பிரியங்காவின் சந்திப்பு நளினிக்குப் பெரும் ஆறுதலை அளித்திருக்கும்.

ஆனால், இங்கே அவசரக் குடுக்கைகள் சிலர் இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் கட்சிகளைத் தடை செய்ய வேண்டும் என்கிறார்கள். நடந்துபோன துயர் நிகழ்வுக்காக உரியவர்கள் மன்னித்து விட்டனர். ஆண்டன் பாலசிங்கம் மறைவுக்குப் பின்னர் தமிழ்ச்செல்வன் அந்தப் பணியைத் திறம்படச் செய்து கொண்டிருந்தார். சிங்கள ராணுவம் கண் மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். இந்த நிகழ்வு நடந்து ஆறு மணிநேரங்களுக்குப் பின்னர்தான் தலைமையே அறிவித்தது. அதன் பின்னர் ‘வெற்றி வெற்றி’ என்று சிங்கள ராணுவம் உரிமை கொண்டாடியது.

அந்தத் தமிழ் மகன் மறைவுக்கு கலைஞர் ஒரு கவிதையில் அஞ்சலி செலுத்தினார். அவ்வளவுதான்! இங்கே புழுதிக் காற்றாய் சுழன்றனர். ‘ராஜீவைக் கொலை செய்த குழுவினருக்கு அஞ்சலியா?’ என்று ஆர்ப்பரித்தனர். அநியாயம், அக்கிரமம் என்றனர். இல்லை. கலைஞர் தெரிவித்த கருத்து மனிதநேயத்தின் மகுடம். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவ்வப்போது அவர் மனிதநேயத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதில் என்ன வேடிக்கையென்றால், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன்தான் விடுதலைப் புலிகளுக்கு எதிராக முழங்கோ முழங்கு என்று முழங்குகிறார். சட்டமன்றத்தில் உரத்த குரல் எழுப்புகிறார். ஆனால் மனிதநேய ஞானசேகரன், அவரது உள்ளத்திலேயே ஒளிந்து கொண்டிருக்கிறார். தனது நிலைமையை விளக்கி நளினியை சோனியாவுக்குக் கடிதம் எழுதச் சொன்னவரே அவர்தான்.

அதன்பின்னர் சோனியாவுக்கு நளினி கண்ணீர்க் கடிதங்களை எழுதினார். கிடைத்த கடிதங்களுக்கெல்லாம் சோனியாவும் ஆறுதல் கூறும் பதில் கடிதங்களை அனுப்பினார். சோனியா _ நளினி உறவும் தொடர்பும் இப்படித்தான் வளர்ந்தது.

இது உலக மாந்தர்கள் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

-குமுதம் ரிப்போர்ட்டர

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.