Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கில் செய்தி சேகரித்த ஊடகவியலாளர்கள் இருவர் படையினரால் வெளியேற்றம்

Featured Replies

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் செய்திகளைச் சேகரிக்கச் சென்ற அனைத்துலக செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் இருவர் அங்கிருந்து சிறிலங்காப் படையினரால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

அனுமதி மறுக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மீண்டும் அனுமதி

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்து செய்திசேகரிக்கச் சென்றபோது பாதுகாப்புத் தரப்பினரால் அனுமதி மறுக்கப்பட்ட வெளிநாட்டு ஊடகங்களைச் சேர்ந்த உள்ளூர் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற அசோசியேட்டர் பிரஸ் சர்வதேச செய்திச் சேவையின் உள்ளூர் செய்தியாளர்களான கெமுனு அமரசிங்க மற்றும் ரவி நெஸ்மன் ஆகியோர் மட்டக்களப்பு வாழைச்சேனை இராணுவச் சோதனைச் சாவடி ஊடாக உட்செல்வதற்கு அனுதிக்கப்படவில்லை. இவர்களைத் திரும்பிச் செல்லுமாறு இராணுவத்தினர் பணித்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து இராணுவ உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு செய்தியாளர்களும் உட்செல்ல அனுமதிக்கப்பட்டதாக சுதந்திர ஊடக இயக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன

http://isoorya.blogspot.com/

.space.gif

கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பான செய்திகளை சேகரிக்க வெளிநாட்டு ஊடகங்களுக்கு தடையேற்படுத்தப்பட்டுள்ளது. அசோசியேட் பிரஸ் நிறுவனத்தின் ஊடகவியலாளர் இன்று காலை மட்டக்களப்பு சென்று கொண்டிருந்த வேளையில் கறுவங்கேணி சந்தியில், ஊடகவியலாள பயணித்த வாகனம் இராணுவ காவலரணில் நிறுத்தப்பட்டு, அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் அடையாள அட்டையை பரிட்சித்த படையினர், தேர்தல் தொடர்பாக செய்தி சேகரிக்க செல்ல அவரை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

ஏன் அனுமதிக்க மாட்டீர்கள் என கேட்ட போது, பாதுகாப்பு அமைச்சு வெளிநாட்டு ஊடகவியலாளர்களை அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் எசோசியேட்ஸ் பிரஸ் ஊடவியலாளருக்கு மட்டக்களப்புக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏ.பி ஊடகவியலாளர் நேற்றே மட்டக்களப்புக்கு சென்றிருந்தார், அங்கு அவர் தங்கியிருந்த விடுதியில் அவர் கொண்டு சென்ற உடைகளை வைத்து விட்டு வந்துள்ள நிலையில் அவற்றை எடுத்து வர கூட படையினர் அனுமதிக்கவில்லை எனவும் பின்னர் விடுதியினருக்கு தொலைபேசியில் தெரியப்படுத்தி உடைகள் திரும்ப பெற்றுக்கொண்டதாக ஏ.பி ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் ஜெனரல் பாலித பெர்ணான்டோவிடம் கேட்ட போது அமைச்சு அவ்வாறான தடை எதனையும் விதிக்கவில்லை என கூறினார். எனினும் ஏ.பி ஊடகவியலாளர் மட்டக்களப்பில் இருந்து திரும்பி அனுப்பட்டுள்ளாரே என அவரிடம் கேட்டபோது, தேர்தல் நடைபெற உள்ள மூன்று நாட்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி எந்த வெளிநாட்டினரையும் கிழக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அறிவிப்பு ஊடகவியலாளர்களுக்கு பொருந்தாது எனவும் அவர் கூறினார்.

பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி இவ்வாறு கூறினாலும் ஏ.பபி ஊடகவியலாளர் ஓட்டமாடி பிரதேசத்தில் சென்று கொண்டிருந்த போது, வாகனத்தின் இலக்கத்தை ஒரு காகிதத்தில் குறித்துக் கொண்ட சோதனை சாவடியில் உள்ள படையினர், உடனடியாக கிழக்கை விட்டு செல்லுமாறும், குறுக்கு பாதைகளில் செல்ல கூடாது என எச்சரித்ததுடன் பிரதான வீதியின் ஊடாக செல்லுமாறும் பணித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து இராணுவ பேச்சாளர் பிரிகேடிய உதய நாணயக்காரவிடம் கேட்டபோது, அரசாங்க தகவல் திணைக்களத்தின் அடையாள அட்டைகளை வைத்திருக்கும் எந்த ஊடகவியலாளருக்கும் கிழக்கு மாகாணத்திற்கு செல்ல முடியும் எனவும் அவர்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

ஏ.பி ஊடகவியலாளருக்கு எதேனும் தடையேற்பட்டிருந்தாலும் அதனை தற்போது சீர்செய்துள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பான செய்திகளை சேகரிக்க ஏற்பட்டுள்ள தடை குறித்து தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி செய்தி சேகரிக்க செல்ல முடியாது என உத்தரவிடப்பட்டிருந்தால், அது தகவலை அறியும் அடிப்படை உரிமையை மீறும் செயல் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் சுயாதீனமான செய்தி அளிக்கைக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

space.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.