Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருணா விடயத்தில் பிரித்தானியா நீதியை நிலை நாட்டத் தவறிவிட்டது: மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

Featured Replies

பாரதூரமான போர்க் குற்றங்களில் ஈடுபட்ட ஒரு குற்றவாளிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காது பிரித்தானிய அரசாங்கம் நீதியை நிலைநாட்டத் தவறியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

கருணா என்று அறியப்பட்ட விநாயகமூர்த்தி முரளீதரன் லண்டனில் உள்ள வூம்குரொப்ற் சிறையிலிருந்து விடுதலையாக உள்துறை அமைச்சின் குடிவரவு கட்டுப்பாட்டுப் பிரிவினரால் உடனடியாகக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சு செய்தி அலுவலகம் தெரிவிக்கிறது.

கேணல் கருணா அரசியல் தஞ்சம் கோராத பட்சத்தில் விரைவில் இலங்கைக்கு திரும்பலாம் என்று தெரியவருகிறது. இவர்மீதான குற்றங்களை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இல்லாமையல் பிரித்தானிய பொலிசார் கேணல் கருணா மீது குற்றச்சாட்டுகள் எதனையும் பதிவு செய்யவில்லை எனவும் nதிரியவரகிறது.

கைது செய்யப்படும் போது கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார். இதற்காக உள்துறை அமைச்சு அவர்மீது நடவடிக்கை எடுக்குமா என்பதும் தெரியவில்லை.

மோசடியாக இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்கு வந்த குற்றத்தை ஒத்துக் கொண்டமையால் கருணாவிற்கு 9 மாதங்கள் சிறைத் தண்டனை ஐல்ஸ்வேர்த் கிறவுண் கோட்டில் நீதிபதி மக்டௌல் ஜனவரி 25, 2008ல் வழங்கி இருந்தார். தண்டனையை வழங்கிய நீதிபதி அவ்வழக்கு அவருடைய கடவுச்சீட்டு மோசடி தொடர்பானது மட்டுமே என்றும் குடிவரவு மற்றும் விடயங்களை உள்துறை அமைச்சு முடிவெடுக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

நிதிபதி தண்டனையை வழங்கி தீர்பளிக்கையில் இத்தண்டனைக் காலம் முடிவடையும் போது உள்துறை அமைச்சு சிலசமயம் கருணாவை மேலும் தடுத்து வைக்கலாம் என்பதையும் கூறியிருந்தார்.

ஆனால் நீதிமன்றத்தில் கருணா தண்டனை பெற்ற நாள் வரை அவர் அரசியல் தஞ்சம் கோரியிருக்கவில்லை. ஆனால் அவருடைய குடும்பத்தினர் ஏற்கனவே அரசியல் தஞ்சம் கோரியிருந்தனர்.

அதன் பின்னர் கருணா அரசியல் தஞ்சம் கோரியிருக்கிறாரா இல்லையா என்பதை உள்துறை அமைச்சு செய்தி அலுவலகம் உறுதிப்படுத்த மறுத்துவிட்டது.

கொலை, ஆட்கடத்தல், கப்பம், சிறுவர்களை படையில் சேர்த்தல் போன்p பல்வேறு மனித விழுமியங்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்ட கருணா மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய தங்களதும் மற்றும் மனித உரிமை அமைப்புகளும் பிரித்தானிய பொலிசாருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று ரெட்றெஸ் மனிதஉரிமைகள் அமைப்பின் நிபுணத்துவ ஆலோசகர் கெவின் லூவே ஜனவரி 25ல் தெரிவித்தார்.

கருணாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தாம் தொடர்ந்தும் பொலிசாருக்கு அழுத்தம் வழங்கி வருவதாகவும் அவர் அப்போது குறிப்பிட்டு இருந்தார்.

இதே நடவடிக்கையையே HRW ம் எடுத்திருப்பதாகத் தெரிவித்து இருந்தது. இது தொடர்பாக HRW உடன் தொடர்புகொண்ட போது அதற்கு பதிலளிக்கக் கூடியவர்கள் அப்போது அங்கிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கர்ணல் கருணா மீது மேலதிக வழக்குகளை தொடருவதற்கான போதிய ஆதாரங்கள் கிடையாது என்று Crown Prosecution Service - CPS தெரிவிப்பதாக இன்று (மே 9) பிபிசி செய்தி தெரிவிக்கிறது.

கருணா மீது எந்தவிதமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் வழக்கு தொடர்ந்து தண்டனை தரும் அளவுக்கு தேவையான யதார்த்தமான ஆதாரங்கள் போதியளவுக்கு இல்லை என Crown Prosecution Service - CPS கூறியுள்ளது. Crown Prosecution Service - CPS இன் ஆலோசனைப்படி பிரித்தானிய பொலிசார் கருணாவுக்கு எதிராக மனித விழுமியங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றப் பத்திரிகையை பதிவு செய்யமாட்டார்கள்.

கருணா அரசியல் தஞ்சம் கோரியிருந்தால் அவரது அரசியல் தஞ்ச விண்ணப்பத்தை விசாரிக்கும் வரை அவரைத் தடுத்து வைக்கலாம். தஞ்சம் கோராத பட்சத்தில் கருணா மிக விரைவில் இலங்கைக்கு திரும்பி அனுப்பப்படுவார்.

இலங்கையில் கருணா - பிள்ளையான் முரண்பாடுகள் சுமுகமாக்கப்பட்டுதா இல்லையா? கருணா மீண்டும் ரிஎம்விபி யின் தலைவராக வருவாரா இல்லையா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரலாம்.

space.gif

கருணா, இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டால், அவர் மீது இலங்கையின் சட்டமுறையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு துறைக்கான பேச்சாளர் கேஹிலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் உரையாற்றிய அவர், ஊடகங்களி;ன் மூலம்; இது தொடர்பாக தகவல்களை அறிந்துக்கொண்டதாக குறிப்பிட்டார். கருணா உண்மையாக திருப்பியனுப்பபடுவராக இருந்தால், அவர் மீது இலங்கையின் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். போலிக்கடவுச்சீட்டுடன் பிரித்தானியாவுக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த வருடம் பிரித்தானியாவில் கைதான கருணாவிற்கு மூன்று மாத தண்டனைக்காலம் முடிவடைந்து அவர் பிரித்தானிய நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அவர்,தற்சமயம் குடிவரவு குடியகழ்வு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.இந்தநில

பிரித்தானிய அரசாங்கம், விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்;படும் கருணாவுக்கு எதிராக போர் குற்றச்சாட்டை சுமத்துவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டுள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

போலி கடவுச்சீட்டுடன் பிரித்தாணியாவுக்குள் பிரவேசித்தார் என்றக்குற்றச்சாட்டின் பேரில், கருணா 2007 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் திகதி மெட்ரோபொலிடன் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.

இதனையடுத்து கருணாவுக்கு எதிராக போர் குற்றச்சாட்டை முன்வைக்கவேண்டும் என மனித உரிமை அமைப்புகள் பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுத்தன. எனினும் அதனை ஏற்றுக்கொள்ளாத பிரித்தானியா, கருணாவை இலங்கைக்கு நாடு கடத்த தற்சமயம் முடிவெடுத்துள்ளது. இந்தநிலையில், ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆசிய பிராந்திய பணிப்பாளர், பிரட் அடம்ஸ்,பிரித்தானிய பொன்னான வாய்ப்பை தவறிவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கருணா 1990 ஆண்டுக்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த சுமார் 400 இலங்கை காவல்துறையினரை சித்திரவதைக்கு உள்ளாக்கினார்.சிங்களவர்களுக

  • கருத்துக்கள உறவுகள்

மற்றைய எல்லா விடயத்திலும் பிரித்தானியா நீதியை நிலைநாட்டியுள்ளது? இதைதான் மனித உரிமை அமைப்பு சொல்ல வருகின்றது என நினைகிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.