Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுவிக்கப்பட்ட பிரதேசமாக கிழக்கைக் கருத முடியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2008-05-14

விடுவிக்கப்பட்ட பிரதேசமாக கிழக்கைக் கருத முடியுமா?

கிழக்கிலங்கையைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பது "ஜனநாயக மீட்பு' என்று கொழும்பு ஆரவார மாக அறிவித்தபோது அதை வரவேற்ற மேற்குலகு, இப் போது ஜனநாயகத்தின் அடிப்படை அங்கமான தேர்தலும், வாக்களிப்பும், ஜனநாயகத்தின் பெயரால் படுகொலை செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றது.

நிர்வாக ரீதியாகப் பிளவுபடுத்தப்பட்டு, துண்டாடப் பட்ட வடக்கு, கிழக்குக்கு பதின்மூன்றாவது அரசமைப் புத் திருத்தத்தின் கீழ் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தல் என்ற புருடா நாடகத்தை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் யோசனைத் திட்டமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைக்கச் செய்தபோது, அத்திட்டத்தின் பின் னணியில் பின்னப்பட்டிருந்த கபட வலையைப் புரிந்து கொள்ளாமல், "அதிகாரப் பகிர்வுக்கான முதல் காலடி' என்று அந்த முயற்சிக்குப் புகழாரம் சூட்டியது இந்தியா. இப்போது அந்தத் தொடர் நடவடிக்கைத் திட்டத்தின் ஓர் அங்கமாகக் கிழக்கு மாகாணத் தேர்தல் ஜனநாயகப் படு கொலையாக அரங்கேறியமையைப் பார்த்து இந்தியா விக்கித்து, வாயடைத்து நிற்கின்றது கருத்துஎதுவும் வெளியிடாமல் அமைதி காத்து.

ஈழத் தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்கான போராட்டத்தை எப்போதுமே கொச்சைப்படுத்தி, குறை கூறி, அதற்கு ஆப்பு வைக்கும் தனது காலாதிகாலப் போக் கைக் கைக்கொள்கின்ற "த ஹிண்டு' போன்ற இந்திய அதி கார வர்க்க அடிவருடிகள் மட்டுமே, ஜனநாயகத்தை அடித் துப் பறிக்கும் பகற்கொள்ளை கிழக்கிலங்கையில் அரங் கேறியமையைக் கண்டுங்காணாமல் இருப்பது போல கவனிக்காமல் புறமொதுக்கிவிட்டு, அந்தத் தேர்தல் முடிவுகளை வரவேற்று சப்புக்கட்டுக் கட்டியி ருக்கின்றனர்.

ஜனநாயகக் கோட்பாடுகளும் அடிப்படைப் பண்பி யல்புகளும் கடந்த பத்தாம் திகதி கிழக்கு மாகாணத் தேர்தல் வாக்களிப்பின்போது பகல் கொள்ளையாகச் சூறையாடப்பட்டமை தொடர்பாக அமெரிக்க அரசு தனது கவலையையும் சிரத்தையையும் இலங்கை அர சுக்கு இராஜதந்திர ரீதியில் கடிதம் மூலம் தெரிவிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நீதியாகவும், நியாய மாகவும் நடத்தப்படவேயில்லை எனப் பல பொது அமைப் புகள், நிறுவனங்கள், சுயாதீனக் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்திருக்கின்றமையைக் கணக்கில் எடுத் திருக்கும் அமெரிக்கா, பொதுமக்கள் தங்களின் பிரதிநிதி களையும், நிர்வாகத்தையும் சுயாதீனமாகத் தெரிவுசெய் வதற்கு அனுமதிக்கப்படாதமை பல புதிய பிரச்சினைக ளையும் நெருக்கடிகளையும் உருவாக்கும் ஆபத்தை ஏற்ப டுத்தியுள்ளது என்பதை இப்போதாவது உணரத் தலைப்பட்டிருக்கின்றது என்பது வரவேற்கத்தக்க அம்சமே.

ஈழத் தமிழர்கள் தங்களின் சுதந்திர உரிமைகளுக்கும், கௌரவ வாழ்வுக்குமாக நடத்தும் போராட்டத்தை "பயங்கரவாதமாக' அடையாளம் கண்டு, அப்போராட் டத்தை முன்னெடுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை "பயங்கரவாத அமைப்பாக' பட்டியலிட்ட மேற்குலகம், இப்போதுதான் தமிழர்களின் உரிமைக்கான எழுச்சியை அடக்கி, ஒடுக்குவதற்காகத் தென்னிலங்கை முன்னெடுக்கும் "அரச பயங்கரவாதத்தின்' ஆழ, அக லங்களையும், அதன் கொடூரத்தையும், தாற்பரியத்தை யும் புரிந்துகொள்ளத் தலைப்பட்டிருக்கின்றது.

அதேபோல, புலிகளின் பிடியிலிருந்து கிழக்கு மாகா ணத்தை அரசுத் தரப்பு விடுவித்தபோது அதனை வர வேற்ற அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள், அந்த விடு விப்பின் பின்னர் அங்கு "ஜனநாயகம்', "சட்டத்தின் ஆட்சி' , "நியாயச் செயற்பாடுகள்' என்பன குழிதோண்டிப் புதைக்கப்பட்டு, ஆட்சித் தரப்பின் பயங்கரவாதம் கட்டவிழும் போதுதான் கிழக்கு மாகாணம் "சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த' தாற்பரியத்தைப் புரிந்து கொள்ளும் கட்டத்துக்கு வந்திருக்கின்றன.

அதேவேளை

உலக நாடுகளும், கண்காணிப்புக் குழுக்களும் அக லக் கண்விழித்துப் பார்த்திருக்கவே "ஜனநாயகப் படு கொலையை' கிழக்குத் தேர்தலில் வெகு "ஸிம்பிளாக' ஆட் சித்தரப்பு அரங்கேற்றியமையை உள்வாங்கி நோக்கும் சர்வதேச சமூகத்துக்கு, அதே ஆட்சிப் பீடம் சர்வதேசப் பார்வை விழாத யுத்த முனையில் குறிப்பாக இராணுவ நடவடிக்கைகளின் கோரப் பிடிக்குள் சிக்கியிருக்கும் தமிழர் தாயகத்தில் எவ்வளவு "நியாயமாக' செயற்படும் என்பதை உணர்ந்துகொள்வது அவ்வளவு ஒன்றும் கஷ் டமான காரியமாக இருக்காது.

அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பிரதேசங்களிலும் மற்றும் தென்னிலங் கையிலும் ஆள்கடத்தல்கள், பலவந்தமாகக் கடத்திக் காணாமற்போகச் செய்தல், சட்ட விரோதப் படுகொலை கள், அச்சுறுத்திக் கப்பம் அறவிடல் என்று மோசமான அராஜகங்களும், மனித உரிமை மீறல்களும் தமிழர்க ளுக்கு எதிராகப் பெருமளவில் தொடர்கின்றன.

அரசு, புலிகளின் பிடியிலிருந்து விடுவித்ததாகக் கூறிக் கொள்ளும் கிழக்கிலும் இந்நிலைமை மோசமாகத் தொடர் கின்றது. போதாக்குறைக்கு ஜனநாயகத் தேர்தலின் போதும் அங்கு அட்டூழியம் அரங்கேறியிருப்பது அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில் சட்டத்தின் ஆட்சியும், ஜனநாயகத்தின் மாண்பும் அங்கு குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கையில் கிழக்கை உண்மையில் "விடுவிக்கப்பட்ட பிரதேசமாக' கருத முடியுமா கூறமுடியுமா என்பது குறித்து அமெரிக்காவுக்கு சந் தேகம் எழுந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

காலம் கடந்தாவது உண்மை நிலைவரத்தைப் புரிந்துகொள்ளும் நிலைக்கு அமெரிக்கா வந்திருப்பது ஓரளவு நல்ல சகுனமே.

http://www.uthayan.com/

அமெரிக்கா உட்பட எந்த ஒரு சர்வதேச நாட்டிற்கும் இப்போதுதான் சிங்களத்தின் உணமையான முகம் தெரிந்தது என்று எண்ணுவது தவறு.

அப்படியே உண்மையைப் புரிந்து கொண்டதாகக் காட்டிக் கொண்டாலும் எதுவும் ஆகிவிடப் போவதில்லை. ஒரு அறிக்கையுடன் எல்லோரும் திருப்தி அடைந்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

:D அதுமட்டுமல்ல இணையவன், உதயன் ஏதோ இந்தியா இலங்கையின் கபடத்தனத்துக்கு ஏமாந்து விட்டது போலவும், கிழக்கில் அரங்கேரவிருந்த அரசியல் பம்மாத்தைத் தெரிந்திருக்கவில்லை என்பது போலவும் கதை விடூது! உண்மையாகவே தமிழரின் ஏக பிரதிநிதிகளான புலிகளை கிழக்கில் தமிழ் மக்கள் ஒதுக்கி விட்டார்கள் என்று நாடகத்தின் மூலம் சிங்களம் ஆடிய செய்தியை உள்ளூற பேரின்பத்துடன் வரவேற்று இருக்கும் இந்தியாவை ஏதோ ஒன்றும் தெரியாத பாப்பா என்பதுபோல உதயன் வர்ணிக்குது!!!!!

இன்று சிங்களம் ஈரானுடனும், பர்மாவுடனும் செய்துவரும் ராணுவ , பொருளாதார ஒப்பந்தங்களால் கொதிப்படைந்திருக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகள் இலங்கைக்கு பாடம் புகட்டத்தான் இந்த தேர்தல் குற்றச்சாடை முன்வைத்திருக்கிறார்கள் என்பது உதயனுக்கு எப்படித் தெரியாமல்ப் போனது ? சிலவேளை சிறிலங்கா ஈராணுடனும், பர்மாவுடனும் ஒட்டி உறவாடாமல் அமெரிக்கச் சொல் கேட்டு நடந்து கொண்டிருந்தால் இத்தேர்தலை வரவேற்று வாழ்த்துச் செய்தி அறிவிக்கும் muthal நாடு அமெரிக்காதான் என்பது சிறுபிள்ளைக்குக் கூடத் தெரியுமே ?!!!!!

ஆக உதயன் செய்ய விரும்புவதெல்லாம், இந்தியாவை அப்பாவியாகக் காட்டி, இலங்கையில் நடக்கும் தமிழின அழிப்பிற்கும் அதற்கும் தொடர்பில்லை எனக்காட்டுவது, மற்றயது, அமெரிக்கா தமிழர் சார்பாக மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருப்பதாக தமிழரை நம்பச் செய்வது !!!!!

Edited by ragunathan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.