Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு கிடைத்தால், கச்சதீவை இந்தியாவிடம் ஒப்படைப்போம்

Featured Replies

இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்தவுடன் கச்சதீவை இந்தியாவிடம் ஒப்படைத்து தமிழக மீனவர்களின் நலனை காப்போம் என யாழ்ப்பாணம் எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

ராமேஸ்வரம் வருகை தந்த இலங்கை யாழ்ப்பாணம் மாவட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) கட்சியை சேர்ந்த எம்.பி. சிவாஜிலிங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; இலங்கை தமிழர்களுக்காக தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ,பி,ஆர்,எல்,எப்,) ,அகில இந்திய தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய அமைப்பு ஆகிய 5 கட்சிகளும் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி தமிழர்களுக்கு தனிநாடு கோரி போராடி வருகிறோம்.

எங்கள் அமைப்பில் விடுதலைபுலிகள் இல்லாவிட்டாலும் அவர்களது தலைமையில் தான் நடந்துவருகிறோம். தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கவேண்டுமானல் இந்தியா தலையிட்டு சமரச பேச்சு நடத்த வேண்டும். இலங்கைவுடன் உறவை நார்வே முறித்து கொண்டு வெளியேறிவுள்ளது. இந்த தருணத்தில் இந்தியா தலையிட வேண்டும். வல்லரசு நாடான இந்திய தமிழ் மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டு கொள்வது கண்டிக்கதக்கது. இந்தியாவின் எதிரியான பாகிஸ்தான் கடற்படையினர் இந்தியா மீனவர்களுக்கு இடையூர் கொடுப்பது கிடையாது. சுண்டைக்காய் நாடு இலங்கை அரசு வல்லரசு நாட்டின் மீனவர்களை கொள்வது கண்டிக்கதக்கது.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் உயிர், பல லட்சம் மதிப்புள்ள படகுகள் அழிந்து வருகிறது. இதற்கு இலங்கை அரசு தான் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

இந்தியா சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சி, ஆயுதம் வழங்க கூடாது. இலங்கைக்குள் சீனா காலடி மிதித்து வருவதை இந்தியா உன்னிப்பாக கவனித்து தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் இன்னும் சில ஆண்டு களில் தமிழர்களுக்காக தனி நாடு கிடைத்துவிடும் . அப்போது தமிழக மீனவர்களும்_ இலங்கை மீனவர்களும் மீன்பிடிக்கும் வண்ணம் கச்சதீவை இந்தியாவிடம் ஒப்படைக்க தமிழர் கட்சிகள் அனைத்தும் முன்வரும்.

சேது சமுத்திர திட்டம் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது தமிழ்நாடு, பாண்டிச்சேரி மீனவர் கூட்டமைப்பு தலைவர் போஸ், ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

News from : Tamilwin.com

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஆட்டை வெட்டுவோம்.

கச்சதீவு தமிழர்களுக்கு சொந்தம் எண்டா பிறகு என்ன பிரச்சினை....??

நீங்கள் கச்சதீவை குடுக்கமுன்னம்.. இந்தியா மன்னாரையும் திருகோணமலையையும் எடுத்துடும்.

சிவாஜிலிங்கம் அண்ணை நிணைத்தார் தமிழ்நாட்டு அரசுதான் மத்திய அரசு என்று , கச்சதீவை தமிழ்நாட்டுக்குகொடுப்போம் என்று சொன்னால் மத்திய அரசு தமிழீழத்தை ஆதரிக்கும் என்று. ஆனால் தமிழ் நாட்டையே கனெக்கெடுக்காத கிந்தி அரசாங்கம் எங்க உதல்லாம் ........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.