Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அது தான் ஒரு மாதிரி இருக்கோ

Featured Replies

அது ஒரு மரண வீடு அதுக்குத்தான் போய் விட்டு வந்தேன் .அதனால் தான் என்னவோ மனசு என்னமோ மாதிரி இருக்கு. இறந்தவன் வேண்ட பட்டவனோ அல்ல.இருக்கும் பொழுது ஒரு நாளும் கண்டதில்லை .அவனை முதல் முதலாக பிணமாக பார்க்க வேண்டிய எனக்கு ஏதோ எழுத்து போலும்,எனக்கு வேண்ட பட்டவருக்காக போயிருந்தேன் , மனசுக்கு என்னமோ மாதிரி இருந்தது இறந்தவனை பார்த்து அல்ல, அந்த மரண வீட்டு சடங்கு நடக்கும் சூழல் போய் விட்டு வந்தாலே ஒரு மாதிரி இருக்குமோ என்னவோ.

இறந்தவன் இள வயதுக்காரன் என்ற படியால் அகலா மரணம் என்று நினைக்கலாம் ,அப்படி இல்லை வருத்தம் வந்து தான் இறந்து இருந்தான் .

இது பற்றிய விசயங்களை நானே தேடி கேட்க வேண்டியதில்லை . அங்கு வந்தவர்களே பேசி கொண்டார்கள். அவர்களுக்கு தான் பேசிக்கொள்வதற்க்கு உந்த கல்யாண வீடு பிறந்த நாள வீடு உந்த செத்த வீடு உதை விட்டால் வேறு எங்கே இடம் .மற்ற நேரங்களில் மனித இயந்திரங்கள் தானே இந்த புலத்தில்

அந்த களைப்பு தெளிய தான் கொஞ்சம் மதுவில் தாக சாந்தி இங்கு கூட செய்து கொள்ளுகிறார்கள் அதுவும் ஊரை ஒப்பிடும் பொழுது மலிவாகவும் தாராளமாக இங்கு கிடைக்கிறது, அப்பிடியான ஒரு மரணம் தானாம் இது.

ஊரில் உந்த ஒப்பாரியும் அந்த பறை மேளமும் மரண வீட்டுக்கு அறிகுறி காட்டி பயமுறுத்தும். இங்கு என்றால் இருக்கும் சுடலை இருக்கும் இடத்தின் அமைதியும் வேண்ட பட்டவர்களின் அழுகை ஒலியும் சில வேளை என்னவோ செய்யும்

அவனுடன் தண்ணி அடித்த நண்பர்கள் எனக்கு பின்னுக்கு கதைத்துக்கொண்டார்கள், மச்சான் நாங்களும் தானே அடிச்சோம்.இவனுக்கு என்ன வயது இப்ப போறதுக்கு ..ஏதோ இவனுக்கு சொல்லாமால் போன மாதிரியும் போக விரும்பி போன மாதிரி எல்லோ இவரின் கதை இருக்கு.

நாங்கள் அடுத்த டிக்கட் தெரியலோ என்றான் இன்னொருவன்

உந்த கருமத்தை சனியனை தொடக்கூடாது என்றான் ஒருவன்

சுடலை ஞானம் என்பார்களே இது தான்

இவர்கள் விட நினைத்தாலும் இவர்கள் சொன்ன உந்த கருமம் சனியனை நாளைக்கு இவர்களை கட்டி பிடித்து கொண்டிருப்பதை நிச்சயம் காணலாம்

மற்றொருவன் பியர் அடிப்பவராம் அவர் சொன்னார் மச்சான் எனக்கு ஒரு வெள்ளைக்காரன் சொன்னவன் தான் உந்த சிறிலங்கா காரரை போல உந்த விஸ்கி அடிக்கிற ஆட்களை ஒரு நாட்டவரையும் காணலை என்று.

அவசரத்தில் நடந்த ஜயரின் மந்திரம் ஓய்ந்தது..அவசரபடுத்தும் நேரத்துக்கு எரித்து தமது தொழிலை முடிப்பதுக்கு அவர்கள் வந்து விட்டார்கள், எல்லாம் முடிந்து விட்டது அங்கு வந்தவர்கள் எல்லாம் ...வேறு என்ன தாக சாந்தி செய்தார்கள் ,,, என்ன விஸ்கி என்று நினைக்க கூடாது தேனீர் குளிர் பானம் போன்ற வகையறாக்காள் தான்

இப்ப எல்லாரும் தான் கலைந்து விட்டார்கள் ,,மரணம் யாருக்கு வராது இள வயதுக்காரன் முதல் கொண்டு வயது வந்தவர்கள் வரை இந்த மரணம் மூலம் அவர்களின் நான் ஒன்று இல்லாமால் போவதை விரும்ப மாட்டார்கள் தானே ...

மரணம் நிகழும் தருணத்தை விட இந்த மரண வீட்டு க்கு போய் வரும் போது இருக்கும் எண்ணமே பயங்கரமாயிருக்கும்.

அது தான் ஒரு மாதிரி இருக்கோ

இது தான் சுடலை ஞானமோ

Edited by matharasi

அப்பிடி எண்டால் இனி நீங்கள் தண்ணி அடிக்காமல் இருக்கலாம்தானே? ஆபத்து எண்டு தெரிஞ்சுகொண்டு, பின்விளைவுகள் வரும் எண்டு தெரிஞ்சுகொண்டு ஒருவிசயத்த தொடர்ந்து செய்தால் என்ன செய்யிறது?

  • தொடங்கியவர்

அப்பிடி எண்டால் இனி நீங்கள் தண்ணி அடிக்காமல் இருக்கலாம்தானே? ஆபத்து எண்டு தெரிஞ்சுகொண்டு, பின்விளைவுகள் வரும் எண்டு தெரிஞ்சுகொண்டு ஒருவிசயத்த தொடர்ந்து செய்தால் என்ன செய்யிறது?

சலாம் முரளி சாப் .. என்னையா சொல்றீங்க ..உந்த கருமத்தை விட்டு நிரம்ப காலமாச்சுங்க. :lol: ..

எதுக்கும் நன்றிங்க ..ஊங்களுக்கு :D

நல்லகாலம் தப்பீட்டீங்கள் அம்மாராசி... பாராட்டுக்கள்! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

செத்தவீடு, ஆஸ்பத்திரி,வயோதிபர் மடம் ஆகிய இடங்களுக்கு சென்றுவந்தால் " சுடலை ஞானம் "வரும் பாருங்கோ....

  • தொடங்கியவர்

செத்தவீடு, ஆஸ்பத்திரி,வயோதிபர் மடம் ஆகிய இடங்களுக்கு சென்றுவந்தால் " சுடலை ஞானம் "வரும் பாருங்கோ....

சலாம் புத்தன் சாப்..நீங்க சொல்லுறது மெய்யாலுமே கரெக்ட்டுங்க..நன்னிங்க

இன்னா மாமோய் கத எல்லாம் அந்த மாதிரி ஈக்கு :lol: ..என்னா தான் படம் காட்டினாலும் உசிரோட இருக்க போகக்க தனியுன்டா தான் போகனும் இன்னா நைனா உலகம் :lol: ..தண்ணியில மீனு அழுதா எவனய்யா கண்டு கொள்ளுறான் மாமு நேக்கும் ஏறிட்டுது நாம அந்திக்கு சந்திபோம் என்ன... :)

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.