Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை கடற்படை ஒரு காட்டுமிராண்டி-ஜெயலலிதா

Featured Replies

இலங்கை கடற்படையினரின் காட்டுமிராண்டித்தனமான செயலை கடுமையாக கண்டிப்பதாக தமிழக முன்னாள் முதலமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழத்தின் பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு இப்போதுதான் கண் தெரிகிறதா!!!

தமிழக அரசு விதித்த 45 நாள் தடைக்குப் பின்னர் கடந்த இரண்டு நாட்களாக தமிழக மீனவர்கள் ஏராளமான படகுகளில் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஜூன் 2-ம் தேதியன்று ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனனர்.

இதில் சந்தியாகு என்ற மீனவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இலங்கை கடற்படையினரின் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக ஜெயலலிதா நேற்று (யூன்3) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு தமிழக மீனவர்கள் அடிக்கடி ஆளாகி இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதும் சுட்டுக் கொல்லப்படுவதும் அன்றாட நடவடிக்கைகளாக இருந்து வருகின்றன.

தமிழக மீனவர்கள் தினம் தினம் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே தமிழக முதலமைச்சர் கருணாநிதி ‘கடிதம் எழுதுகிறேன்’, ‘நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்கிறேன்’ என உருக்கமாகப் பேசி தட்டிக் கழிக்காமல்,

இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு உறுதியான நடவடிக்கையை முதல்வர் கருணாநிதி எடுக்க வேண்டும்.

இலங்கை கடற்படையினரால் உயிரிழக்கும் மீனவர் குடும்பத்தினருக்கான கருணைத் தொகையை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக முதல்வர் உயர்த்தித் தர வேண்டும்” எனவும் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

http://isoorya.blogspot.com/

space.gif

சூர்யா உங்கட கையொப்ப பகுதியிலை அகலமாக போடப்பட்டு இருக்கும் படத்தின் அகலத்தை தயவு செய்து குறையுங்கப்பா.... செய்தியை படிக்க பக்கத்து வீட்டுக்கை எல்லாம் போய் எட்டி பாக்க வேண்டியதா கிடக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

மிச்சம் சரி எனக்கும் அதே பிரச்சினைதான். ஆரிட்டச் சொல்லி அழுவதென்றிருந்தேன். நீங்கள் (தயா) சொல்லிப்போட்டியள். நன்றி

சூர்யா, அகலத்திரை பாவிக்கறவர் போல, அதில அழகாகத்தான் இருக்கு.... ஆனா 1024 மற்றும் 800, பிக்சல்களில பாக்கிற ஆக்களுக்காக கொஞ்சம் கருணை காட்டுங்கப்பா!

எனக்கு கொஞ்சம் அகலக்கண் இருக்கிறதால பறவாயில்லை....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.