Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூங்கிவிட்ட நாமும் தூங்காத மன்னிப்புச் சபையும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஜனாதிபதி வருகையை ஒட்டி லண்டனில் ஆர்ப்பாட்டம்.

20080609144122vigil1.jpg

காமன்வெல்த் எனப்படும் பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்குபெறும் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டன் வந்துள்ள நிலையில், அம்னஸ்டி இண்டர் நேஷனல் எனப்படும் சர்வதேச பொதுமன்னிப்பு சபையானது லண்டன் பொதுநலவாய அமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.

இலங்கை பிரஜைகள், மனித நேய ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் உட்பட கணிசமான எண்ணிக்கையிலானோர் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இலங்கையில் நடக்கின்ற மோதல்கள் தொடர்பில் ஒரு கவன ஈர்ப்பை கொண்டுவரும் நோக்கிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்று சர்வதேச அபய ஸ்தாபனத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளரான சாம் ஷரிபி பிபிசியிடம் தெரிவித்தார்.

அங்கு அரசாங்கத்தாலும் விடுதலைப்புலிகளாலும் மேற்கொள்ளப்படுகின்ற வன்செயல்கள் காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் குறித்து, உலக மக்களின் கவனத்தை ஈர்ப்பது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக இலங்கையில் செய்தியாளர்கள் தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாவதையும் திங்களன்றைய ஆர்ப்பாட்டம் கண்டித்தது.

பிபிசி/தமிழ்.

இலங்கை ஜனாதிபதியின் லண்டன் விஜயத்தை ஒட்டி ஆர்ப்பாட்டங்கள்

95441578eq9.png

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் லண்டன் வருகையை முன்னிட்டு இன்று இங்கு பொதுநலவாய அமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக சில ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

நண்பகல் பன்னிரண்டு மணியளவில் அங்கு ஆரம்பமான இரண்டு ஆர்ப்பாட்டங்களில் ஒன்று அரசுக்கு ஆதரவானது, விடுதலைப்புலிகளுக்கு எதிரானது.

ஆனால், அதற்கு அருகாகவே மற்றுமொரு ஆர்ப்பாட்டமும் அங்கு நடந்தது அது, இலங்கை ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் ஆகியவற்றுக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளையும், அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் ஆதரித்தும் நடத்தப்பட்டது.

தாம் பயங்கரவாதத்துக்கு எதிராகவே இந்த ஆர்பாட்டத்தை நடத்துவதாக அரச ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகிறார்கள்.

அதேவேளை இதற்கு அருகில் நடந்த ஆர்ப்பாட்டம் அதற்கு முற்றிலும் எதிரானதாக இருந்தது.

தமிழர்கள் மீது இலங்கை அரசு இனப்படுகொலையை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக குற்றஞ்சாட்டும், இந்த ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டு அமைப்புக்களில் ஒன்றான பிரிட்டிஷ் தமிழ் போரத்தை சேர்ந்த ராஜமனோகரன். அதனை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தை தாம் நடத்துவதாகக் கூறினார்.

அதேவேளை, இன்று பிற்பகலில் மற்றுமொரு ஆர்ப்பாட்டமும் பிறிதாக அதே இடத்தில் நடத்தப்பட்டது.

இனங்களுக்கு இடையே நீதிக்கும் சமத்துவத்துக்குமான குழுவினால் நடத்தப்பட்ட அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலங்கை நிலைமைகளுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகள் என இரு தரப்பினரையும் குற்றஞ்சாட்டினார்கள். அதற்காகவே இந்த ஆர்ப்பாட்டம் என்கிறார் இந்த ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சபா நாவலன்.

நன்றி பிபிசி

வசம்புக்கு சந்தோசம் ம்ம் நடக்கட்டும்

நெடுக் சேர் எனக்கு ஒரும் சந்தேகம் இந்த மன்னிப்பு சபையின் கருத்தை அமெரிகக இங்கிலாந்த் போன்ர ஆடுகள் கணக்கில் எடுப்பது இல்லையா?

எதை வைத்து தூங்காத மன்னிப்பு சபை என்று கூறுகிறிங்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.