Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்களைக் காப்பாற்ற இனியாவது சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் -ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் தமிழ்க்கட்சிகள் கோரிக்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களைக் காப்பாற்ற இனியாவது சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் -ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் தமிழ்க்கட்சிகள் கோரிக்கை.

[ வியாழக்கிழமை, 19 யூன் 2008, 10:05.01 AM GMT +05:30 ]

இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக இடம்பெற்று வரும் சட்ட விரோதப் படுகொலைகள், ஆட்கடத்தல்கள் மற்றும் ஆட்கள் காணாமல் போதல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களால் தமிழ் மக்களின் இருப்பே இன்று கேள்விக் குறியாகி விட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகளுக்கான தூதுவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள தமிழ்க் கட்சிகள்; தமிழ் மக்களைக் காப்பாற்ற இனியாவது சர்வதேச சமூகம் முன்வர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் இலங்கை நிலைமை குறித்தும் ஆராய்வதற்காகக் கொழும்புக்கு வந்துள்ள மேற்படி தூதர்கள் குழுவை நேற்றுப் புதன்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களும் மேலக மக்கள் முன்னணித் தலைவரும் மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட்டாளருமான மனோகணேசன் ஆகியோர் நீண்ட நேரம் சந்தித்துப் பேசிய போதே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

நேற்றுப் பிற்பகல் 2.45 மணியளவில் இந்தக் குழுவினருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய சந்திப்பில்,

இலங்கையில் மோசமடைந்து வரும் நிலைமைகள் குறித்துச் சர்வதேச சமூகத்திடம் தாங்கள் கூறியும் சர்வதேச சமூகம் இலங்கை அரசிடம் கூறியும் எதுவும் நடைபெறவில்லையென்பதைச் சுட்டிக்காட்டியது.

அதேநேரம், இலங்கையில் தமிழ் மக்களின் உயிர் வாழும் உரிமைக்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளதால் கொழும்பு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இடம்பெறும் சட்ட விரோதப் படுகொலைகள் மற்றும் வெள்ளைவான் கடத்தல்களை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருமாறு மனோ கணேசன் இந்தக் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியக் குழுவுடன் நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் ஆரம்பமான இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் ஆர்.சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது அவர்கள் கூறுகையில்;

இலங்கையில் கடந்த இரண்டரை வருடமாக மனித உரிமை மீறல்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதனைத் தடுக்க எவராலும் முடியவில்லை.

சர்வதேச சமூகம், ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் எவ்வளவோ கூறியும் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகிறதே தவிர, அதில் எவ்வித குறைவும் ஏற்படவில்லை.

இவற்றையெல்லாம் ஒரு முடிவுக்குக் கொண்டு வர ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தைத் திறக்கக் கூட இலங்கை அரசு அனுமதிக்கவில்லை.

மாணவர்கள், மதகுருமார்கள், பாராளுமன்ற உறுப்பினர்களென அனைவரும் கொல்லப்பட்டும் அதற்குப் பொறுப்பான எவருமே இன்றுவரை நீதிமன்றில் நிறுத்தப்படவில்லை. இதனாலேயே படுகொலைகள், ஆட்கடத்தல்கள், ஆட்கள் காணாமல் போதல் தொடர்கின்றன.

இவை குறித்தெல்லாம் சர்வதேச சமூகத்திடம் நாம் கூறியும் சர்வதேச சமூகம் இது குறித்தெல்லாம் இலங்கை அரசிடம் கூறியும் எதுவும் நடக்கவில்லை.

யாழ்.குடாநாட்டில் ஏற்பட்டு வரும் பாரிய உயிரச்சுறுத்தல் காரணமாகக் குடும்பம் குடும்பமாக அப்பாவி மக்கள் நீதிமன்றங்களில் சரணடைந்து வருகின்றனர். உலகில் எங்குமே நடக்காத மிகப் பெரிய அவலம் தினமும் அங்கு நடக்கின்றது.

இவற்றையெல்லாம் விடப் படுகொலைகள், கொள்ளைகள், பாலியல் வல்லுறவுகள் அந்த மக்களை அச்சத்தில் உறையச் செய்துள்ளது. இது ஓரிரு பகுதியிலென்றில்லாது அங்கு சகல பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

அரச படைகளே இவற்றுக்கெல்லாம் காரணமென அனைவரும் கூறிவருகின்ற போதும் இன்றுவரை எதுவுமே நடைபெறவில்லை. குற்றவாளிகள் இன்றும் அங்கு சுதந்திரமாகவே நடமாடுகின்றனர். அப்பாவிகள் எல்லோரும் வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றனர்.

எனினும் இவையெல்லாம் யுத்தத்தின் ஒரு பகுதியென்றே இலங்கை அரசு கருதுகிறது. இதனால் இவற்றையெல்லாம் நிறுத்த அரசு முன்வரவுமில்லை, முன்வரப் போவதுமில்லை.

வன்னியில் ஆழ ஊடுருவும் படையினரின் தாக்குதலில் தினமும் அப்பாவிகள் கொல்லப்படுகின்றனர். பலர் காயமடைகின்றனர்.

இதைவிட தினமும் அங்கு நடைபெறும் விமானத் தாக்குதல்களால் அப்பாவி மக்களுக்கு ஏற்படும் உயிரிழப்புகள் சொல்லும் தரமற்றது. பெரும் சொத்தழிவுகளையும் இடப்பெயர்வுகளையும் படையினர் ஏற்படுத்தி வருகின்றனர்.

பொது மக்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாது இந்த அரசு கொடூர யுத்தத்தை நடத்துகிறது. ஆனால், இது பற்றி உலகெங்கும் கூறியும் எதுவுமே நடக்கவில்லை. முழு உலகமுமே மௌனம் சாதிக்கிறது.

இனிமேலாவது இலங்கை அரசுக்குப் புரியும் விதத்தில் சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அவர்களது கொடூர நடவடிக்கைகள் தொடரும்.

இலங்கைக்கு மிகப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும்.

கிழக்கு நிலைமையும் இன்று இது போலவேயுள்ளது. அங்கும் நிலைமை மோசமடைந்து வருகிறது. இவை குறித்தெல்லாம் உலக நாடுகள் உடனடிக் கவனம் செலுத்த வேண்டுமென்றனர்.

இதேவேளை, இலங்கையில் தமிழ் மக்களின் உயிர்வாழும் உரிமைக்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளதால் கொழும்பு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இடம்பெறும் சட்டவிரோதப் படுகொலைகள் மற்றும் வெள்ளைவான் கடத்தல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு மேலக மக்கள் முன்னணித் தலைவரும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளருமான மனோகணேசன் எம்.பி. ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகளுக்கான தூதர்கள் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியக் குழுவை கொழும்பிலுள்ள நெதர்லாந்துத் தூதரின் இல்லத்தில் சந்தித்த மனோகணேசன் அவர்களிடம் மேலும் கூறுகையில்;

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த நிலைமை நாளுக்குநாள் அதிகரித்துவருகின்றது.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் உயிர்வாழும் உரிமைக்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளது. இதுவே அவர்கள் இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரும் பிரச்சினையாகும். இதிலிருந்து விடுபடமுடியாது அவர்கள் தத்தளிக்கின்றனர்.

இந்தப் பேராபத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதாயின், தலைநகர் கொழும்பு உட்பட அனைத்துப் பகுதிகளிலும் இடம்பெறும் சட்டவிரோத படுகொலைகளையும் வெள்ளை வான் கடத்தல்களையும் ஆட்கள் காணாமல் போவதையும் நீங்கள் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

இங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமடைகிறது. தமிழர்கள் இந்த நாட்டில் வாழமுடியாத நிலையேற்பட்டுள்ளது. இந்த மக்களைப் பாதுகாப்பதற்காகக் குரல் கொடுப்போரும் பெரும் ஆபத்துகளை எதிர்நோக்குகின்றனர்.

மனித உரிமைகளைப் பேணுவதாக இலங்கை அரசு கூறுவது அப்பட்டமான பொய். இங்கு நிலைமை தலைகீழாகவேயுள்ளது. இலங்கை அரசால் அமைக்கப்பட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு கடத்தல், காணாமல்போதல் தொடர்பான அமைச்சர்கள் குழு எனப் பலகுழுக்களையும் ஆணைக்குழுக்களையும் அரசு அமைத்தபோதிலும் அவை பலவீனமடைந்து செயற்படாது செயலிழந்து பெயரளவில் மட்டுமேயுள்ளன.

இவற்றிலெல்லாம் சர்வதேச சமூகம் நம்பிக்கை வைக்கக்கூடாது. இதைவிடுத்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தை உடனடியாக கொழும்பில் அமைத்து இங்கு மனித உரிமைகளைப் பேண சர்வதேசம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கையின் தற்போதைய நிலையில் இது இன்றியமையாததென்பதை சர்வதேசம் உணரவேண்டும்.

கொழும்பில் இந்த அலுவலகத்தை அமைப்பதுடன் நின்றுவிடாது, வடக்கு கிழக்கிலும் அமைக்கவேண்டும். கிளிநொச்சியிலும் அமைக்கலாம்.

இவ்வாறு ஐ.நா.வின் பாதுகாப்பின் மூலமே மிகமோசமான மனித உரிமை மீறல்களுக்கு கடிவாளமிட முடியும். இதனை ஐரோப்பிய ஒன்றியமும் வலியுறுத்தவேண்டுமென்றார்.

மேலும், இந்தச் சந்திப்பில் வடக்கு கிழக்கில் தினமும் இடம்பெறும் சட்டவிரோத படுகொலைகள், ஆட்கடத்தல்கள் மற்றும் ஆட்கள் காணாமல் போதல்கள் குறித்தும் நாடுமுழுவதிலும் தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்கள் மற்றும் அவர்கள் மனோரீதியாக அனுபவிக்கும் இம்சைகள் குறித்து புள்ளிவிபரங்களுடன் விளக்கமளித்தார்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இங்குள்ள நிலைமைகள் குறித்து அனைத்தையும் அவர்கள் கேட்டறிந்து கொண்டதாகவும் மனோகணேசன் தெரிவித்தார்.

tamilwin.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.