Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜானக பெரேராவின் அறிமுகம் தமிழருக்கான தவறான சமிக்ஞை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜானக பெரேராவின் அறிமுகம்

தமிழருக்கான தவறான சமிக்ஞை

23.06.2008

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை எந்தச் சிங்களக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதன் அடிப்படைப் போக்கில் மாற்றம் இருக்கப் போவதில்லை என்பதுதான் ஒரே நிலைப்பாடு.

இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளும் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை "ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தாம்.'

இரண்டு கட்சிகளுமே சிறுபான்மையினரான தமிழர்கள் மீது தங்களது பேரினவாத பௌத்த, சிங்கள மேலாண்மை அதிகாரத்தைச் செலுத்தி, அவர்களை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தும் தமது மேலாதிக்கப் போக்கில் என்றுமே பின்னின்றமை கிடையாது. அதுவே கடந்த அறுபது ஆண்டுகால "சுதந்திர இலங்கையின்' வரலாறாகும். இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் மாற்றோ, வேறுபாடோ கிடையாது. இதுவே இன்றும் சரித்திரமாக நீடிக்கின்றது.

இப்போதும்கூட, ஈழத் தமிழர்களின் இராணுவ ரீதியான வலிமையைப் படை நடவடிக்கைகள் மூலம் சிதறடித்து, உரிமைகளுக்கான அவர்களது பேரம்பேசும் வலிமையைச் சின்னாபின்னமாக்கி, அவர்களை நிரந்தர அடிமைகளாக்கும் திட்டத்துடன் தமிழர் தாயகத்தின் மீது பெரும் போரைத் தொடுத்து நிற்கிறது ஆளும் கட்சி.

பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவோ வெளி வேடத்துக்கு சமரசம் பேசுகிறது. அமைதித் தீர்விலும், சமாதானப் பேச்சிலும், இணக்கப்பாட்டிலும் ஆர்வம் உள்ளது போல இன்று அது காட்டிக் கொண்டாலும், அதன் ஆட்சிக் காலத்திலும் அதன் இலக்கும் தமிழர் தரப்பை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்துவதாகவே இருந்தது என்பதை நாம் மறந்து விடமுடியாது.

இந்தச் சமயத்திலும் கூட, சமாதானத் தீர்வில் ஆர்வம் உள்ள கட்சி போலத் தன்னைக் காட்டிக் கொண்டு மறுபுறம் இராணுவ வெறிப் போக்கில் தீவிரம் கொண்ட ஒருவரை முன்னிலைப்படுத்தி பிழையான சமிக்ஞையை அது வெளிப்படுத்துகின்றது.

எதிர்வரும் வடமத்திய மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனது முதலமைச்சர் வேட்பாளராக மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவை முன்னிறுத்தப் போகின்றது. இனி அக்கட்சியின் பாதுகாப்புத்துறைப் பேச்சாளராகவும் அவரே பணிபுரியப் போகின்றார் என்றும் கூறப்படுகின்றது.

இது, தமிழர் தரப்புக்கு ஐக்கிய தேசியக் கட்சி கொடுக்கும் ஓர் அபாய எச்சரிக்கையாகவே கருதப்பட வேண்டிய விடயமாகும்.

தமிழரின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான சிங்களப் படையெடுப்பின் குறியீடாகக் கருதத்தக்கவர் ஜானக பெரேரா. அவரது கடந்த கால செயற்பாடுகள் அதனை உறுதிப்படுத்தி, நிரூபிப்பவை.

1995 96 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் யாழ். குடாநாட்டை இலங்கை இராணுவம் கைப்பற்றியபின்னர் அச்செழு ஊரெழுப் பகுதியில் தலைமையகத்தைக் கொண்டு செயற்பட்ட 51 ஆவது படையணிக்கு (டிவிஷனுக்கு) பொதுக் கட்டளையிடும் அதிகாரியாக இவர் பணியாற்றினார். அப்போது தான் இவரது அதிகாரத்தின் கீழ் இருந்த யாழ். குடாநாட்டுப் பிரதேசத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் இளைஞர்கள் கைதாகிப் பின்னர் காணாமற் போனார்கள். பின்னர் இவரது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பிரதேசத்தில் அமைந்திருந்த பாரிய செம்மணி நிலப் பகுதியில் ஓரிரு இடங்களில் நடத்தப்பட்ட தோண்டுதல்களின் போது சுமார் இரண்டு டசின் மனித எலும்புக் கூடுகளும் மனித சடலங்களின் எச்சங்களும் கண்டு பிடிக்கப்பட்டன. பல நூற்றுக்கணக்கில் காணாமற் போனவர்கள் இந்த செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று இன்றும் கருதப்படுகின்றது.

அதிஷ்டவசமாக ஜெனரல் ஜானக பெரேரா யாழ். குடாநாட்டிலிருந்து குறுகிய காலத்தின் பின் இடமாற்றம் செய்யப்பட்டமையை அடுத்து, ஆட்கள் கடத்திக், காணாமற் போதல் அங்கு உடனடியாக முடிவுக்கு வந்தது. அது இப்போது அங்கு மீண்டும் மோசமாகத் தலைதூக்கியிருக்கின்றமை வேறு விடயம்.

ஜெனரல் ஜானக பெரேராவின் அதிஷ்டமோ, என்னவோ அப்போதைய அந்த மனித குலத்துக்கு எதிரான கொடூரங்கள் பற்றிய விடயங்களில் சட்டச் சான்றுகளும், சாட்சிகளும் இல்லாமல் போனதால் அவர் நீதியின் முன் இலகுவாகச் சிக்காமல் தப்பிப் பிழைக்க முடிந்தது.

பின்னர் மீண்டும், 2000 ஆம் ஆண்டில் ஆனையிறவுப் படைத்தளம் புலிகள் வசம் வீழ்ந்து, குடாநாட்டை அரசுப் படைகள் தக்கவைத்திருப்பது கேள்விக்குறியானபோது மீண்டும் யாழ். குடாநாட்டின் படைத்தளபதியாகப் பொறுப்பேற்று 2000 மேயில் யாழ். சென்றார் ஜானக பெரேரா. அவர் அந்தப் பொறுப்பை ஏற்று சில தினங்களில், எந்தவித நியாயமான காரணங்களோ, விளக்கங்களோ வெளிப்படுத்தப்படாமல், யாழ்ப்பாணத்திலிருந்து ஈழத் தமிழரின் தேசியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பிரசுரமாகும் "உதயன்' நாளிதழ் அரசினால் "சீல்' வைத்து மூடப்பட்டது. அந்த ஊடக அடக்குமுறைக்கு அப்போதைய அரசை சிபார்சு செய்து வழி நடத்தியவர் ஜெனரல் ஜானக பெரேராதான் என்பதும் ஊரறிந்த இரகசியம்.

அதற்கு முன்னர் சில காலம் அவர் மட்டக்களப்பு மாவட்டப் படைத் தளபதியாக இருந்தபோதும் அங்கும் அப்போது தமிழ் இளைஞர்கள் கடத்தி அல்லது கைது செய்யப்பட்டுக் காணாமற்போகும் சம்பவங்கள் தாராளமாகவே அரங்கேறின.

தமிழர் மீதான இராணுவக் கொடூர அழுத்தத்தின் குறியீடான சின்னமான ஜெனரல் ஜானக பெரேராவை இந்தச் சமயத்தில் முன்னுக்குக் கொண்டு வருவதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி சிங்கள மக்களுக்கு பூடகமாக ஒரு தகவலை முன்வைக்க முயல்கின்றது போலும். ஆனாலும் அதுவே மறுபுறத்தில் தமிழர்களுக்கும் ஒரு முக்கிய செய்தியை உரைகின்றது என்பதைத் தமிழர்கள் மறந்து விடக்கூடாது.

இராணுவ வெறித் தீவிரத்தில் முனைப்புக் கொண்டவரான கடும் போக்காளர் ஜெனரல் ஜானக பெரேரா ஐக்கிய தேசியக் கட்சியின் பாதுகாப்புப் பேச்சாளராகவும் நியமிக்கப்படவிருக்கின்றமை, ஐ.தே.கட்சியைப் பொறுத்தவரை "மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுகின்றது' என்பதையே கோடிகாட்டுகின்றது என்பது தெளிவு.

இனப்பிரச்சினைக்கு, விட்டுக்கொடுப்புடன் தமிழர்களுக்கு நியாயம் செய்வதே நீதியான நடைமுறை என்ற வாதத்தை சில காலம் வெளிப்படுத்தி வந்த ஐ.தே.க. அந்தக் கோஷம், பௌத்த சிங்களப் பேரினவாதத்தில் மூழ்கிக் கிடக்கும் தென்னிலங்கையில் எடுபடாது என்பதைப் புரிந்து கொண்டு, தனது சமரச வேடத்தைக் கலைத்து, மீண்டும் பழையபடி தனது உண்மையான பேரினவாத முகத்தைக் காட்டத் தயாராகி விட்டது. அதற்கான கட்டியம் கூறலே ஜெனரல் ஜானக பெரேராவின் அரசியல் அறிமுகமாகும்.

http://www.sudaroli.com/editorial.htm

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனரல் ஜானக பெரேராவின் அதிஷ்டமோ, என்னவோ அப்போதைய அந்த மனித குலத்துக்கு எதிரான கொடூரங்கள் பற்றிய விடயங்களில் சட்டச் சான்றுகளும், சாட்சிகளும் இல்லாமல் போனதால் அவர் நீதியின் முன் இலகுவாகச் சிக்காமல் தப்பிப் பிழைக்க முடிந்தது.

தமிழர்களுக்கு எதிராகச் செயற்படும் சிங்களவர்களுக்கு எதிராக எப்ப சிங்களத்தின் சட்டம் நடவடிக்கை எடுத்தது?. சாட்சிகள் இருந்த எத்தனையோ வழக்குகளில் சாட்சி சொல்ல வந்தவர்கள் கொலை செய்யப்பட்டு அல்லது அச்சுருத்தலுக்கு உள்ளாகப் பட்டிருந்தார்கள்.சாட்சி இருந்தால் ஜானக பெரேரா தப்பி இருக்க மாட்டார் என்று உதயன் சொல்கிறது. சிரிப்பாய்த்தான் இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.