Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யார் யாரை ஏமாற்றுகிறார்கள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யார் யாரை ஏமாற்றுகிறார்கள்?

[23 - June - 2008]

அரசாங்க சேவையில் அரசியல் தலையீட்டை இல்லாமற் செய்யும் நோக்குடன் அரசியலமைப்புக்கான 17 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு 8 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் கூட, அத்திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரம் தொடர்ச்சியாகச் சிக்கலுக்குள்ளாகிக் கொண்டேயிருக்கிறது. அரசாங்கத்துறையில் உள்ள முக்கிய நிறுவனங்களுக்கான நியமனங்களை மேற்பார்வை செய்வதற்கான சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பதற்கு வகைசெய்வதாக அத்திருத்தச் சட்டம் அமைந்திருக்கிறது. திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொறுப்பைக் கொண்ட அரசிஞிலமைப்புப் பேரவையின் (Constitutional Council) உறுப்பினர்களை நியமிப்பதை தாமதப்படுத்துவதற்கு திருத்தத்தில் காணப்படக் கூடியதாக இருக்கும் பல வீனங்களை அதிகாரத்தில் இருப்பவர்கள் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அரசியலமைப்புப் பேரவைக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் இணக்கப்பாடு காணப்பட முடியாமல் போனதையடுத்து 2004 ஆம் ஆண்டில் இருந்து பேரவைக்கான நியமனங்களில் முட்டுக்கட்டை நிலை தொடருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதைத் தாமதப்படுத்துகின்ற ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசாங்கம் சர்வாதிகாரத்திசையில் சென்று கொண்டிருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது. இது தொடர்பில் கடந்தவாரம் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவான ஜோசப் மைக்கேல் பெரேரா முன்மொழிந்த பிரேரணை மீது சபை ஒத்திவைப்பு வேளையில் விவாதமொன்றும் நடைபெற்றது. இவ்விவாதத்தில் கலந்து கொண்டு அரசாங்க உறுப்பினர்களும் எதிரணி உறுப்பினர்களும் ஆற்றிய உரைகளை நோக்கும்போது அரசியலமைப்புப் பேரவையை நியமிப்பதென்பதோ அரசியமைப்புக்கான 17 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வருவதென்பதோ அண்மைய எதிர்காலத்தில் சாத்தியப்படக் கூடிய விடயமாகத் தெரியவில்லை. எதிரணியினர் அரசாங்கத்தை குறை கூறிக்கொண்டிருக்கின்ற அதேவேளை, அரசாங்கத் தரப்பினரோ எதிர்க் கட்சிகளிடம் இருந்து இது விடயத்தில் ஒத்துழைப்புக் கிடைப்பதாக இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளான ஜனதா விமுக்த்திபெரமுனை (ஜே.வி.பி.), தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜாதிக ஹெல உறுமய போன்றவை சார்பில் அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் ஒருவரை நியமிப்பதில் இக்கட்சிகளிடையே இணக்கப்பாடு ஏற்பட முடியாத காலகட்டமொன்று இருந்தது. நீண்டகால இழுபறிக்குப் பிறகு இந்த மூன்று சிறிய கட்சிகளும் தங்கள் சார்பிலான உறுப்பினராக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் எஸ்.சி.மாயாதுன்னையை பிரேரிப்பதற்கு இணங்கிக் கொண்டன. கணக்காய்வாளர் நாயகம் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற மாயாதுன்னை பாராளுமன்றத்தில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் நிதியுதவியுடனான செயற்திட்டமொன்றில் பணிபுரிவதால் அரசியலமைப்புப் பேரவையில் உறுப்பினராகப் பதவி வகிக்க முடியாது என்ற ஆட்சேபனையை கிளப்பிய அரசாங்கத்தரப்பினர் அரசியலமைப்புப் பேரவையை நியமிப்பதை மீண்டும் சர்ச்சைக்குள்ளாக்கினர்.

கடந்தவாரம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க அரசியலமைப்புப் பேரவைக்கான உறுப்பினரை நியமிப்பதில் சிறியகட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வரமுடியாதிருந்த பழைய விவகாரத்தைக் கிளப்பி அதன் காரணத்தினாலேயே ஜனாதிபதியினால் அரசியலமைப்புப் பேரவையை நியமிக்கமுடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அரசியலமைப்புப் பேரவை நியமிக்கப்பட்டு சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்படும் வரை முக்கிய அரசாங்க பதவிகளுக்கான நியமனங்களைத் தாமதித்தால் அரச இயந்திரம் செயலற்றுப் போய்விடக் கூடிய ஆபத்து ஏற்பட்டு விடும் என்பதை உணர்ந்தே ஜனாதிபதி குறிப்பிட்ட சில அரசாங்க நிறுவனங்களுக்கான நியமனங்களைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார் என்பதே மகிந்த சமரசிங்கவின் வாதம்.

அரசியலமைப்புக்கான 17 ஆவது திருத்தத்தில் இருக்கக் கூடிய குறைபாடுகளை இனங்கண்டு அதில் திருத்தங்களைச் செய்வதற்கான யோசனைகளைத் தெரிவிப்பதற்காக 2006 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. அக்குழுவின் தலைவராக இருக்கும் அரசியலமைப்பு விவகார அமைச்சர் டியூகுணசேகர பாராளுமன்றத்தில் அன்றையதினம் உரையாற்றுகையில் அரசியலமைப்புப் பேரவையை நியமிப்பது தொடர்பாக தோன்றிய முட்டுக்கட்டைக்கு ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ காரணமல்ல என்று கூறினார். தனது தலைமையிலான பாராளுமன்றத் தெரிவுக்குழு 17 ஆவது திருத்தத்தில் இருக்கக் கூடிய குறைபாடுகளை இனங்கண்டு விட்டதாகவும் செய்ய வேண்டிய திருத்தங்களை உள்ளடக்கிய அறிக்கையைப் பூர்த்தி செய்து சபையில் சமர்ப்பிக்க முடியுமென்றும் கூறிய டியூ குணசேகர, அறிக்கையைப் பூர்த்திசெய்வதற்காக கையெழுத்துகளை பெறுவதற்கு தெரிவுக்குழுவில் உள்ள அதன் உறுப்பினர்களை ஐ.தே.க.அனுப்பி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அமைச்சர்கள் மகிந்த சமரசிங்கவும் டியூ குணசேகரவும் தெரிவித்த கருத்துக்களைப் பார்த்தால் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கும் செயற்பாடுகளுக்கு எதிரணிக்கட்சிகள் தான் தடையாக இருக்கின்றன என்ற அர்த்தம் அல்லவா தொனிக்கிறது? உண்மையில் மக்களுக்குத் தெரிய வேண்டியது யாரை யார் ஏமாற்றுகிறார்கள் என்பதுதான்!

http://www.thinakkural.com/news/2008/6/23/...l_page53132.htm

17வது திருத்தச்சட்டம் நிறைவேறமல் இருக்க புலிகள்தான் காரணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.