Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியக் குழுவினரின் விஜயம் தீர்க்கதரிசனமானதா? பிராந்திய ஆக்கிரமிப்பா? அல்லது தற்காலிக ஏற்பாடா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியக் குழுவினரின் விஜயம் தீர்க்கதரிசனமானதா? பிராந்திய ஆக்கிரமிப்பா? அல்லது தற்காலிக ஏற்பாடா?

இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வில் இந்தியா தலையிடவேண்டும் எனத் தமிழர்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர். ஏனெனில் இந்தியா தமக்கு அநீதி இழைக்காது என்ற காரணமாகும். எனினும் இந்திராகாந்திக்குப் பின்னர் இந்தியாவின் நிலைப்பாடு இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுவது என்றில்லாமல் தமது பிராந்திய நலனுக்காக இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை ஒரு ஆயுதமாகக் கொள்வதாக அமைந்துள்ளது.

இந்தியாவின் முக்கிய தீர்மானங்களை எடுப்பவர்களாக விளங்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்புச் செயலர் மற்றும் வெளியுறவுச் செயலர் ஆகியோர் இலங்கைக்குத் திடீர் விஜயம் ஒன்றைக் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்புக்கு மேற்கொண்டனர்.

கொழும்பின் அரசியல் தரப்புகள் பல்வேறு ஊகங்களை வெளியிட்டன. ஜே வி பி, இதனை ஒரு அரசியல் விளையாட்டு எனக் குறிப்பிட்டது. ஐக்கிய தேசியக்கட்சி எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. எனினும் அதனைப் பொறுத்தவரையில் இந்தியா ஏதாவது அழுத்தத்தை இலங்கை அரசாங்கத்திற்குக் கொடுத்தால் போதும் என்ற நிலைப்பாட்டில் இருந்தது. எனினும் தமிழ் தரப்பும் முஸ்லிம் தரப்புகளும் இந்தியாவின் நகர்வு தொடர்பில் பாரிய நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை.

அந்தக் கட்சிகளைப் பொறுத்தவரையில், இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள தெற்காசிய ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். இதன் போது சண்டை இடம்பெற்று விடக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் முகமாகத் தற்காலிக சண்டை நிறுத்தம் ஒன்றை இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவே இந்திய குழுவினரின் விஜயம் அமைந்துள்ளதாகக் கருதுகின்றன.

ஏனைய நாடுகளுக்கு இந்தியப் பிரதமர் செல்லும் போது அதற்கு முன்னரே சென்று வெளியுறவு அமைச்சரோ அல்லது பாதுகாப்புத் தரப்பினரோ அந்த நாடுகளின் பாதுகாப்புக்களை ஆராய்வர். அதனைப்போன்றே இந்த விஜயமும் அமைந்துள்ளது எனினும் சிங்கள மற்றும் ஆங்கில செய்தித்தாள்கள் இந்தியக் குழுவின் விஜயம் தொடர்பாக வித்தியாசமான கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

முல்லைத்தீவை இலங்கைப் படையினர் கைப்பற்றப் போகிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அவர்கள் பிடிக்கப் போகிறார்கள். எனவே அதனைத் தடுப்பதற்கான முயற்சியிலேயே இந்தியா ஈடுபட்டுள்ளதாக சிங்கள செய்தித்தாள் ஒன்று கூறியுள்ளது. ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்று இதனை இந்தியா. இலங்கைக்கு ராஜதந்திர அழுத்தத்தைக் கொடுப்பதற்காகவே இந்தியக் குழுவினர் இலங்கைக்கு வந்ததாகத் தெரிவித்துள்ளது. எனினும் இதனை உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாத நிலையே எழுந்துள்ளது.

ஏனெனில் இந்தியா, இலங்கைக்கு இராஜதந்திர அழுத்தங்களைக் கொடுக்க வேண்டுமானால் அதற்காக இலங்கைக்கு அதிகாரிகளை அனுப்பி அதனைச் செயற்படுத்தத் தேவையில்லை. அதனைப் புதுடில்லியில் இருந்தவாறே மேற்கொண்டிருக்கலாம். தமிழ்ச் செய்தித் தாள்களைப் பொறுத்தவரையில் இந்தியர்களின் விஜயத்தைக் கொண்டு பாரிய அனுமானங்களைத் தெரிவிப்பதைத் தவிர்த்துக் கொண்டுள்ளன. எனவே இந்திய குழுவினரின் திடீர் விஜயம் என்பது தமக்குப் பிராந்தியத்தில் அதிக அதிகாரம் உள்ளமையைக் காட்டுவதற்கு இந்தியா மேற்கொண்ட நடவடிக்கையாக எடுத்துக் கொள்ளலாம்.

பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இலங்கையில் செலுத்தும் செல்வாக்கு அண்மையில் இந்தியாவுக்குச் சென்று வந்த இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைத் திருப்திப்படுத்துவது இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு அதிர்ச்சியை உண்டாக்குவது என்பன இந்தியக் குழுவினரின் விஜயத்திற்கான காரணங்களாகக் கொள்ளலாம்.

இந்தியர்களின் விஜயத்தின் போது அவர்கள் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்கவில்லை. இந்தியக் குழுவினர் இலங்கைக்கு வந்த பின்னரே தனக்குத் தெரியவந்ததாக ரணில் அதிர்ச்சியாகத் தெரிவித்திருக்கிறார். எனில் ஏனைய அரசியல் கட்சியினரைச் சந்தித்த இந்தியக் குழுவினர், ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திக்காமை குறித்து அவர் அதிருப்தியை வெளிப்படுத்தாமையானது அவருக்கு ஏற்கனவே இந்திய அதிகாரிகள் வருவது தெரிந்த விடயம் என்றே கருதப்படுகிறது. ஏனெனில் ரணில். கட்சிக்குத் தெரியாமலேயே தமது அரசியலைக் கொண்டு செல்பவர் என்பதனால் இதனை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம்.

இந்தியாவும் ரணிலின் கருத்துக்களைக் கேட்ட பின்னரே .இலங்கைக்குத் தமது பிரதிநிதிகளை அனுப்பியதாகக் கதை வந்துவிடாமல் இருப்பதற்காக வெளிநாட்டு அமைச்சர் ரோஹித்த போகல்லாகம இந்தியாவுக்கு விஜயம் செய்த பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்தமையானது. யாருக்கும் விளங்காத அரசியலைப் பிராந்தியத்தில் முன்கொண்டு செல்லும் நோக்கத்தைப் பிரதிபலித்து நிற்கிறது.

எனவே இறுதியாகச் சில தீர்மானங்களுக்கு நாங்கள் வரலாம்.. இந்திய அதிகாரிகளின் விஜயம் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கையில் நடைபெறப்போகும் தெற்காசிய ஒத்துழைப்பு மாநாட்டுக்கு வரும் போது ஒரு இயல்பு சூழ்நிலை இலங்கையில் உருவாகவேண்டும். பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுக்கு இந்தியா இன்னமும் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் நாடு என்பதைக் காட்ட வேண்டும். அத்துடன் இலங்கையில் இனப் பிரச்சினைக்காகக் காணப்படும் தீர்வு இந்தியாவின் தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பவற்றைக் கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்டதாகும் என்பதே உண்மை.

தமது நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் வந்த வழியிலேயே இந்தியக் குழுவினர் தமிழ்த் தரப்பினரைச் சந்தித்துள்ளதாகத் தமிழ் மக்கள் நம்புகின்றனர். எனினும் எதிர்வு கூறப்படாத இந்த நகர்வுகள் தமக்கு நிம்மதியை மாத்திரம் கொண்டு வந்தால் போதும் என்பதுதான் தமிழர்களின் தற்போதைய நிலைப்பாடாக உள்ளது.

tamilwin.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.