Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உயர்மட்ட அதிகாரிகள் கூறுகின்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தியக் கட்சிகள் தமிழர் பிரச்சினையில் முடிவுகளை எடுக்கின்றன'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உயர்மட்ட அதிகாரிகள் கூறுகின்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தியக் கட்சிகள் தமிழர் பிரச்சினையில் முடிவுகளை எடுக்கின்றன'

[27 - June - 2008]

* "வேதனைதரும் இந்தப் போக்கில் மாற்றம் ஏற்படவேண்டுமெனில், அது தமிழகத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும்'

ஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழின உணர்வாளர்கள் இடையே ஒற்றுமை அவசியம் என்று திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருக்கும் அவர், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வழங்கிய நேர்காணல்:

ஸ்ரீலங்காவுக்கு இந்திய உயர்மட்டக் குழுவொன்று திடீரென கடந்த வெள்ளிக்கிழமை பயணம் செய்தது. அக்குழுவில் இடம்பிடித்தவர்கள் பாதுகாப்புத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்களாகவும் உள்ளனர். அதேவேளை, இராணுவ உதவிகளை வழங்கும் பயணமாகவே இதனை இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. நீங்கள் இவர்களின் பயணத்தினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

அமெரிக்காவில் இருந்தவாறு நானும் அச்செய்திகளை கவனித்துக்கொண்டே இருக்கின்றேன். ஈழ மக்களின் நன்மைக்கான பயணமே இது என முதலில் கூறப்பட்டது. ஆனால், என் போன்றவர்களுக்கு முதலில் இருந்தே அதில் நம்பிக்கை இல்லை. இப்போது வருகின்ற செய்திகள் எமக்கு ஒரு வகையில் அதிர்ச்சியையும் இன்னொரு வகையில் இப்படித்தான் நடக்கும் என்பதையும் வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றன.

ஸ்ரீலங்காவுக்கு இராணுவத் தளபாடங்களை வழங்குவதும் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருககும் இலங்கை அரசுக்கு மறைமுகமாக உதவுவதும் இந்திய அரசின் நிலைப்பாடாக இருப்பது உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பெரும் வேதனையாக உள்ளது.

அதிலும் குறிப்பாக, உயர் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கும் எம்.கே.நாராயணன் எப்போதும் தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துடையவராகவே இருக்கின்றார். அவர் இந்திய அரசின் உயர் அதிகாரப் பொறுப்பில் இருக்கின்றார்.

ஸ்ரீலங்காவுக்கான இவரது பயணத்தில் என்ன நடந்திருக்கின்றது என்பது எனக்கு அதிகாரபூர்வமாகத் தெரியவில்லை. இருந்தாலும், இந்த உயர் அதிகாரிகளின் போக்கை கணிக்கின்றபோது தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நடந்துள்ளதா என்ற வேதனைதான் ஏற்படுகின்றது.

இந்தியப் பிரதமரை சந்திப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நான் டில்லி சென்றிருந்தபோது பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வலது புறத்தில் எம்.கே.நாராயணனும் இடதுபுறத்தில் சிவ்சங்கர் மேனனும் அமர்ந்திருந்தனர்.

அச்சந்திப்பில் எம்.கே.நாராயணன் பேசும்போதும் அவரது பேச்சின் தொனி தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிரானதாகவே இருந்தது. அந்த இடத்திலேயே பிரதமருக்கு முன்பாகவே நாம் அதனை சுட்டிக்காட்டினோம்.

எனவே, இந்திய அரசு இந்த அதிகாரிகளின் போக்கை நம்பாமல் தமிழ் மக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தொடர்நதும் முன்வைப்போம்.

இந்திய அரசின் இந்தப் போக்கு நீடிக்கக்கூடாது என்பதே உலகத் தமிழ் மக்களின் ஒருமித்த கருத்தாக மீண்டும், மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இத்தகைய கோரிக்கைகளை பலரும் தொடர்ச்சியாக அனுப்பியிருந்த போதும் இந்திய அரசின் நிலைப்பாட்டில் இதுவரை மாற்றம் ஏற்படவில்லை. அப்படி இருக்கும்போது இந்திய அரசின் நிலைப்பாடு எதிர்காலத்தில் மாற்றமடையும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு எம்மைப் போன்றவர்களுக்கு மிகவும் குறைவாகவே உள்ளது. ஏனெனில், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் டில்லியில் இருக்கும் உயர்அதிகாரிகள் சிலரே இந்தியாவின் கொள்கைகளை தீர்மானிப்பவர்களாக உள்ளனர்.

அடுத்து இந்தியாவிலிருக்கும் கட்சிகளும் தமிழர்களின் பிரச்சினைகளை நுணுகிப் பார்ப்பதில்லை. அவர்கள் அதிகாரிகளின் பேச்சை அடிப்படையாகக் கொண்டே முடிவெடுக்கின்றனர். இது ஒரு வேதனையான செய்தி. இதில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனில் அந்த மாற்றம் தமிழகத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும்.

தமிழக மக்களிடையே ஒரு எழுச்சியும் இந்த போக்கிற்கு எதிரான ஒரு வேகமும் ஏற்படுமானால் அதுதான் டில்லியில் இருக்கும் உயர்அதிகாரிகளின் மனநிலையை மாற்றும். அந்நிலை ஏற்படாதவரை டில்லியில் இருக்கும் உயர்அதிகாரிகளின் மனநிலையை மாற்ற முடியாது.

அதாவது, தமிழின உணர்வாளர்களின் குரல் மட்டும் அந்நிலையை மாற்றிவிடும் என்றும் நான் கருதவில்லை. அதற்காக எமது செயற்பாடுகளை கைவிட்டுவிட வேண்டியதில்லை. எமது தொடர் செயற்பாடுகளால் ஒரு மாற்றம் வரலாம்.

தமிழின உணர்வாளர்கள் அங்கே இருக்கும் பெரிய அரசியல் கட்சிகளை மிக நெருக்கமாக அணுகி அக்கட்சிகளின் மூலமாகத்தான் இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்ற முடியும் என்பதுதான் சாத்தியமாக இருக்கும் என கருதுகின்றேன். அப்பணியை இன்னமும் நாம் போதுமானதாக மேற்கொள்ளவில்லை என்பது எமது பக்கத்தில் இருக்கும் குறைபாடாகும்.

தமிழகத்தில் உள்ள சில தமிழின உணர்வாளர்கள் இந்திய அரசின் இந்த நிலைப்பாடு குறித்து சில அறிக்கைகளை வெளியிடுகின்றனர். ஆனால், தமிழக முதல்வர் கருணாநிதி இந்த விவகாரம் குறித்து எந்தவித கண்டனத்தையோ அல்லது கருத்துகளையோ வெளியிடாது மௌனம் காட்டுகின்றார். இதன் காரணமாகத்தான் தி.மு.க.விலிருந்து பா.ம.க. தற்போது பிரிந்து சென்றிருக்கிறது என்று கருதலாமா?

தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு இன்று எப்படி உள்ளது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். பா.ம.க. பிரிந்த பின்னர் தி.மு.க. முழுமையாக காங்கிரஸை நம்பியே கூட்டணி ஆட்சியை நடத்த வேண்டிய நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.

பா.ம.க. திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், நெடுமாறன் ஐயாவின் தமிழர் தேசிய இயக்கம் போன்ற கட்சிகள் கலைஞரின் அருகில் இருந்துகொண்டு ஈழப் பிரச்சினையில் ஒரு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே என் போன்றவர்களின் கருத்து.

கலைஞரின் போக்கில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. ஏனெனில், அவரும் ஏனைய கட்சிகளின் பலத்தை நம்பியே செயற்பட முடியும். வைகோ, ராமதாஸ், நெடுமாறன், திருமாவளவன், வீரமணி ஆகிய ஐவரும் கலைஞரின் அருகில் இருந்து கலைஞருக்கு ஆதரவாக நின்று ஈழத்தின் செய்திகளை எடுத்துக்கூறினால் தமிழகத்தில் ஒரு மாற்றம் வரும்.

இவர்கள் ஐவரும் மக்கள் செல்வாக்குப் பெற்றவர்கள். பெரிய கட்சியைச் சேர்ந்தவர்கள். நான் சில நூறு அல்லது ஆயிரம் இளைஞர்களிடம் மட்டும் தொடர்பு வைத்திருக்கும் ஒருவராகவே உள்ளேன். ஆனால், மேற்படி ஐவரும் பெரிய இடங்களில் செல்வாக்குள்ளவர்கள்.

எனவே, இவர்கள் ஐவரும் கலைஞரை அணுகி ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பது எனது அழுத்தமான கருத்தாகும்.

ஆனால், இதற்கு எதிராக வைகோவும் நெடுமாறன் ஐயாவும் கலைஞருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றனர். தற்போது ராமதாஸும் எதிர்நிலைக்கு போய்விட்டார். இப்படி எதிர்நிலையில் இருந்துகொண்டு சொல்லும்போது ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது.

எனவே, ஒரு மாற்றம் வரவேண்டும் எனில், கலைஞருக்கு ஆதரவாக இவர்கள் இருக்கவேண்டும். அந்த ஆதரவை வைத்துக்கொண்டுதான் அவர் காங்கிரஸையும் பா.ஜ.க.வையும் சமாளிக்க முடியும். தற்போது இவர்களின் ஆதரவு அனைத்தும் விலகிவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியை மட்டுமே நம்பி செயற்படும் அவர், காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து ஒரு அறிக்கை வெளியிடுவார் என்று எதிர்பார்க்க முடியாது.

இதுதான் அங்கே உள்ள ஈழ மக்களுக்கு எதிரான சூழ்நிலை.

தனது அரசியல் எதிர்காலம், தனது குடும்பத்தின் எதிர்கால நலன் ஆகியவற்றினை கருதாமல் தமிழக முதல்வர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பார் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா?

தமிழக முதல்வரை மட்டுமே நம்பி ஒரு நாட்டின் அரசியலை நடத்த முடியாது. தமிழக முதல்வரின் அல்லது ஒரு கட்சியின் தலைவரின் அரசியல் என்பது பெரும்பான்மையான மக்களின் போக்குச் சார்ந்ததாகத்தான் இருக்க முடியும். நான் மேற்கூறிய ஐந்து பேரும் அரசியல் செல்வாக்கு பெற்றவர்கள்.

எனவே, இவர்கள் ஈழத் தமிழர்கள் விடயத்தில் தமிழகத்தில் ஒரு எழுச்சியைக் கொண்டு வருவதன் மூலம்தான் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என நம்புகின்றேன்.

என்னதான் நாம் கூறினாலும் தமிழகத்தில் கலைஞரும் ஜெயலலிதாவும்தான் இன்று செல்வாக்கு மிக்க பெருந்தலைவர்களாக இருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. இவர்களில் ஜெயலலிதா நேர் எதிர் கருத்துடையவராக தமிழீழ மக்களை அழித்துவிட வேண்டும் என்ற கருத்துடையவராக இருக்கின்றார்.

(தொடரும்)

thinakural.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.