Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மியன்மாரைப் போல இலங்கையையும் சீனா தன்பக்கம் இழுக்கும் என புதுடில்லி பீதி! அதனால்தான் அதன் உயர்மட்டக்குழு கொழும்பு வருகையாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மியன்மாரைப் போல இலங்கையையும்

சீனா தன்பக்கம் இழுக்கும் என புதுடில்லி பீதி!

அதனால்தான் அதன் உயர்மட்டக்குழு கொழும்பு வருகையாம்

இலங்கை தனது பூகோள, அரசியல் வாய்ப்புகளைப் பரவலாக்க வேண்டும் என்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொள்கையைப் பயன்படுத்தி மியன்மாரில் செய்ததை சீனா இலங்கையிலும் செய்கின்றதா என்ற கேள்வி புதுடில்லியில் காணப்படுவதாக இந்திய முன்னாள் புலனாய்வு அதிகாரி பி.ராமன் தெரிவித்துள்ளார்.

மலேசியா, ஈரான், சவூதி அரேபியாவை இலங்கைக்குள் கொண்டு வரும் மஹிந்த ராஜபக்ஷவின் நடவடிக்கையால் இலங்கை மீதான இந்தியாவின் செல்வாக்கு மென்மேலும் குறையலாம் எனத் தெரிவித்துள்ள அவர், இது தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:

இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவை விரும்புவதாக இலங்கை தெரிவிக்கும் அதேவேளை, இலங்கை தனது பூகோள அரசியல் வாய்ப்புகளைப் பரவலாக்க வேண்டும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொள்கையைப் பயன்படுத்தி சீனா தான் மியன்மாரில் செய்ததை இலங்கையிலும் செய்ய முயற்சிக்கின்றதா?

இந்தியாவின் கவலைக்குரிய விடயங்களில் இதுவுமொன்றாகக் காணப்படுவதுடன் பிரதமர் மன்மோகன் சிங்கின் மூத்த ஆலோசகர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமைக்கு இதுவே முக்கிய காரணமாகவுமுள்ளது.

கடந்த செப்டெம்பரில் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயளலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டமைக்குப் பதிலாகவே இவ் விடயம் சித்திரிக்கப்பட்டதுடன் சார்க் உச்சி மாநாட்டிற்கான முன்னோடி ஏற்பாடுகள் குறித்து ஆராயவும் இது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

சார்க் உச்சிமாநாடு கொழும்பை விடப் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறைவாக உள்ள கண்டியிலேயே இடம்பெற்றிருக்க வேண்டும். எனினும் உட்கட்டமைப்பு வசதிகளைக் கருத்தில் கொண்டு அதனைக் கொழும்பிற்கு மாற்ற இலங்கை அரசு தீர்மானித்தது.

எனினும் சார்க் உச்சிமாநாடு கொழும்பிற்கு மாற்றப்பட்டமை இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனையை அதிகரித்துள்ளது.

இலங்கை கடந்த காலங்களிலும் 6 ஆவது, 10 ஆவது சார்க் உச்சி மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளதுடன் தலைவர்களுக்கு சிறப்பான பாதுகாப்பையும் வழங்கியிருந்தது.

15 ஆவது சார்க் உச்சிமாநாடு வடபகுதியை விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து மீட்பதற்குப் பெருமளவு இராணுவத்தினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தருணத்தில் இடம்பெறுகின்றது. கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள விடுதலைப்புலிகள் கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து விடுதலைப் புலிகள் விமானங்களைப் பயன்படுத்தித் தாக்குதல்களையும் மேற்கொண்டுள்ளனர்.

இந்த விமானங்கள் எங்கு மறைத்து வைக்கப்படுகின்றன, எங்கிருந்து தாக்குதலிற்காகப் புறப்படுகின்றன என்பதைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இலங்கைப் படையினர் உள்ளமையும், உச்சிமாநாட்டிற்கு முன்னதான பாதுகாப்புச்சூழலை கவலைக்குரியதாக்கியுள்ளது.

விடுதலைப் புலிகள் உச்சிமாநாட்டின் மீதோ அல்லது அதில் கலந்துகொள்பவர்கள் மீதோ தாக்குதலை மேற்கொள்ளப் போவதில்லை.

அதேவேளை, விடுதலைப் புலிகள் மீள எழ முடியாத நிலைக்குப் பலவீனப்படுத்தப்பட்டுள்ளனர் என்ற அரசின் கூற்றுப் பிழையானது எனக் காண்பிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்கான தருணம் இதன் அவர்களுக்கு மூலம் உருவாகியுள்ளது.

சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவரிற்கும் மற்றும் இந்தியப் பிரதமருக்கும் வலுவான பாதுகாப்பை அளிக்கும் நிலையில் இலங்கைப் பாதுகாப்புப் படையினர் உள்ளனரா என்பதை ஆராய்வதும் இந்த அதிகாரிகள் குழுவின் விஜயத்தின் நோக்கம்.

இலங்கைக்குள் ஏனைய வெளிநாட்டு சக்திகளைக் கொண்டுவரும் ராஜபக்ஷவின் கொள்கையினால் இந்தியாவிற்கு உண்டாகக் கூடிய பாதிப்பை மதிப்பிடுவதும் இந்த விஜயத்தின் இன்னுமொரு நோக்கமாகும்.

கடந்த காலங்களில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா குறித்து மாத்திரம் கவலையடைய வேண்டியிருந்தது.

எனினும், தற்போது ராஜபக்ஷ ஈரான், சவூதி அரேபியா, மலேஷியா போன்ற நாடுகளையும் உபசரிக்கத் தொடங்கியுள்ளார்.

ஈரான், இலங்கையின் எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கையில் முக்கிய பங்காற்றத் தொடங்கியுள்ளது. வெகுவிரைவில் அந்தநாடு எண்ணெய் விற்பனையில் தனக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனக் கோரலாம்.

இந்தத் துறையில் இந்தியாவே இதுவரை முன்னணி பங்காற்றியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.sudaroli.com/

இலங்கை என்னும் விபச்சாரி சீனவுடன் நிரந்தரமாக தங்கிவிடுடவளோ என்ற

பயத்தினால் நமது பெரியவ்ர் இந்தியா கைகொடுத்து வைத்திருக்க முடிவு செய்துள்ளராம்.....

என்னையா கதை இது,.......? அப்ப ஈரான்? அமெரிக்க? இப்படியே பட்டியல் நீளப்போகிறது.....

தன்ரை முதுகிலை கிடக்கிற ஊத்தையை எடுக்கிற வழியை காணேல்லையாம் அடுத்தவன்ரை முதுகை துடைக்கப்போயிட்டாங்களாம்.

இந்தியா இன்னுமொரு தடவை அனுபவப்படவேண்டும். அப்போதுதான் அடுத்தவன் விசயத்தில் தலையிடாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.