Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணவரின் புற்றுநோய்-அவரை கொல்ல முயன்று மனைவி தற்கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோவை: புற்று நோயால் அவதிப்பட்டு வந்த கணவர் படும் துயரத்தை காண சகிக்காமல் அவரை சுத்தியலால் அடித்து கருணைக் கொலை செய்ய முயன்று தற்கொலை செய்து கொண்டார் மனைவி. ஆனால் அவரது கணவர் உயிருக்குப் போராடி வருகிறார்.

கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை பின்புறம் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் பசுபதி (வயது 72). இவரது மனைவி அனுசுயா (68).

இவர்களுக்கு மனோன்மணி, ரேணுகா தேவி என இரு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி மனோன்மணி கோவையை அடுத்த காரமடையிலும், ரேணுகாதேவி திருச்செங்கோட்டிலும் வசித்து வருகிறார்கள்.

பசுபதி கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் கடை நடத்தி வந்தார். அதில் கிடைத்த வருமானத்தை வைத்து இரு மகள்களையும் படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்தார். உடல் நலம் சரியில்லாமல் கடந்த சில ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு பசுபதிக்கு தலைவலி ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு தலையில் புற்றுநோய் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஆபரேஷன் செய்யப்பட்டது. மருந்துகள் சாப்பிட்டு வந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை பசுபதியின் மகள் ரேணுகா தேவி வீட்டுக்குப் போன் செய்தார்.ஆனால் மணி ஒலித்துக் கொண்டே இருந்தது. யாரும் எடுக்கவில்லை. இதையடுத்து சந்தேகமடைந்த அவர் பக்கத்து வீட்டுக்குப் போன் செய்து என்ன என்று பார்க்குமாறு கூறினார்.

பக்கத்து வீட்டுக்காரர்கள் பசுபதி வீட்டுக்கு சென்று கதவை தட்டினார்கள். யாரும் திறக்கவில்லை. கதவை திறந்து பார்த்தனர். அப்போது பசுபதியின் மனைவி அனுசுயா தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார்.

அவரது அருகில் தரையில் பசுபதி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இது பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பசுபதி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.

உடனடியாக அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு ஏற்கனவே தலையில் ஆபரேசன் செய்யப்பட்டு இருந்ததாலும் அதே இடத்தில் தாக்கப்பட்டு இருந்ததாலும் அவரது நிலைமை மோசமாக இருக்கிறது.

சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தியதில் பசுபதியை அவரது மனைவி அனுசுயா தலையில் தாக்கிவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

பசுபதி, தினமும் தலைவலியால் அவதிப்படுவதும், அடிக்கடி மயங்கி விழுவதும் அனுசுயாவுக்கு வேதனையை கொடுத்தது. மேலும் அனுசுயாவுக்கு சரியாக காது கேட்காத நிலையில் கணவன்-மனைவி இருவரும் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கே பெரும் அவதிப்பட்டனர். இயலாமை ஒருபுறமும், நோய்க்கொடுமை மறுபுறமும் சேர்ந்து துரத்த முதிய தம்பதிக்கு வாழ்க்கை பெரிய சுமையாக மாறியது.

அதனால் கணவர் படும் வேதனை தாங்க முடியாமலும், மேற்கொண்டு வாழ விருப்பமில்லாததாலும் தற்கொலை செய்துகொள்ள அனுசுயா முடிவு செய்தார். தான் இல்லாவிட்டால் கணவரின் கதி என்ன ஆகும் என்று சிந்தித்த அவர், கணவரை கொன்றுவிட்டு தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

நேற்று முன்தினம் இரவு அனுசுயா போலீஸ் கமிஷனருக்கு ஒரு கடிதத்தை எழுதி தபால் உறையில் போட்டு அருகில் வைத்துக்கொண்டார். அதன்பிறகு முதலில் கணவரை கொல்ல திட்டமிட்டு வீட்டில் கிடந்த சுத்தியலை எடுத்தார். அப்போது பசுபதி தூங்கிக்கொண்டு இருந்தார்.

ஆபேரஷன் செய்த இடத்தில் அடித்தால் அவர் உயிரிழந்து விடுவார் என நினைத்து அந்த இடத்தில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதனால் துடித்த பசுபதி ரத்த வெள்ளத்தில் மிதந்தார். பின்னர் மயக்கமடைந்தார்.

பின்னர் பூச்சிக்கொல்லி மருந்தை தண்ணீரில் கரைத்து குடித்தார்.

ஆனால் அனுசுயாவுக்கு ஒன்றும் செய்யவில்லை. உடனே கயிற்றால் வீட்டின் விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த கொடுமையான சம்பவம் சிங்காநல்லூர் மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பசுபதியைத் தாக்குவதற்கு முன்பு அனுசுயா எழுதியிருந்த தற்கொலைக் கடிதம் மிகவும் உருக்கமாக உள்ளது.

அதில் அனுசுயா கூறியிருப்பாதவது ..

ஐயா, என் கணவருக்கு புற்றுநோய் உள்ளது. தலையில் கட்டி ஏற்பட்டு அதற்காக 6 மாதத்துக்கு முன்பு ஆபரேசன் செய்யப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் அவருக்கு மரணம் ஏற்படலாம் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். மருந்து மாத்திரை சாப்பிட்டு வாருங்கள் என கூறினர். அவருக்கு வலிப்பும் ஏற்படுவதுண்டு. எனக்கு சரியாக காது கேட்காது.

என் கணவர் புற்றுநோயால் அவதிப்படுவதை பார்த்து நான் தினந்தோறும் வேதனைப்பட்டேன். தூக்கம் வரவில்லை. அதனால் நான் உயிர் வாழ விரும்பவில்லை. புற்றுநோய் வந்தால் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு தொந்தரவு கொடுக்கும். அதன்பிறகு வேதனைப்பட்டு சாகவேண்டும். இதை பார்க்க வேதனையாக இருக்கும். என் கணவர் படுக்கையில் விழுந்தால் நான் என்ன செய்ய முடியும்.

அதனால் சாவுக்கு தயாராகிவிட்டேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. யாரையும் நீங்கள் சந்தேகப்பட வேண்டாம். அவரை தனியாக விட்டு செல்ல என்னால் முடியவில்லை. என் கணவர் மிகவும் தைரியசாலி. கோழையாக இருக்கக் கூடாது என்று அவர் என்னிடம் சொல்வார். அவரை விட்டு நான் தனியாக சாக முடியாது. அதனால் அவரை என்னுடன் அழைத்து செல்கிறேன்.

நான் கரப்பான் பூச்சி மருந்து சாப்பிட்டு என் மரணத்தை நானே தேடிக் கொள்கிறேன். என் கணவரை சுத்தியலால் தலையில் அடித்து கொன்றுவிட்டு நானும் மருந்து சாப்பிட்டுக்கொண்டேன். என் சொந்த நினைவில் இதை எழுதுகிறேன். என் நிலைமை வேறு எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது. இது என் விருப்பப்படி எடுத்துக்கொண்ட முடிவு என்று கூறியுள்ளார் அனுசுயா.

ஆனால், அனுசுயா இறந்துவிட அவரது கணவர் பசுபதி கோமா நிலையில் மருத்துவமனையில் உள்ளார். தன்னை மனைவி கொல்ல முயன்று தற்கொலை செய்து கொண்டது கூட தெரியாமல்...

நன்றி தற்ஸ் தமிழ்

அச்சோ..உது என்ன கொடு(மை) <_< ..நல்லத செய்ய போய் கடசியா மனிசனை "கோமா" நிலைக்கு கொண்டு போய் மனிசி விட்டு போட்டு போயிட்டுது..சா..சா இப்படியும் மனிசிமார் இருக்கீனமோ லோகத்தில..வேற ஒன்னும் கிடைக்காம சுத்தியலாலையா அடித்தவா..(முடியல).. <_<

எனக்கு ஏதோ மர்மமா இருக்கு..ஒரு வேள "அடி வாங்குவோர் சங்க" ஆட்களுக்கு நடக்கிற மாதிரி தான் உவருக்கு நடந்துச்சோ யாருக்கு தெரியும்.. :)

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில சாவு உன்னை தேடி வரணும் நீ அத தேடி போக கூடாது" <_<

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.