Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்: அரசியல் தஞ்சம்கோரும் திட்டமாம்- கெஹலிய ரம்புக்வெல

Featured Replies

ஊடகவியலாளர்கள் உட்பட சிலர் அரசியல் தஞ்சம்கோரி நாட்டைவிட்டு வெளியேறுவதற்காக தம்மீது தாமே தாக்குதல்கள் நடத்துவதாக அரசாங்கத்துக்குத் தகவல்கள் கிடைத்துள்ளது என பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வெளிநாட்டுக்குச் செல்வதற்கு விண்ணப்பித்திருக்கும் ஊடவியலாளர்கள் தொடர்பான பெயர்களும், விபரங்களும் அரசாங்கத்துக்குக் கிடைத்திருப்பதாக நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் கூறியுள்ளார்.

'நேஷன்' பத்திரிகையின் இணை ஆசிரியர் கீத் நொயர் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட பின்னரே நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார் என ஊடகவியலாளர்கள் கூறியமைக்குப் பதிலளித்த அமைச்சர், நொயரின் விடயம் அவ்வாறு இல்லையெனவும், வேறு சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

கீத் நொயர் மீதான தாக்குதல்கள் போன்றவற்றின் விசாரணைகளை அவசர அவசரமாக நடத்தி முடிக்க இயலாது எனவும், பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை மாத்திரம்கொண்டு விசாரணைகளைத் துரிதமாக மேற்கொள்வது இலகுவானதல்ல எனவும் அமைச்சர் கூறினார்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் நாமல் பெரேரா மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் தகவல் மற்றும் அரசியல் பிரிவு அதிகாரியான மகேந்திர ரட்னவீர ஆகியோர், போலியான இலக்கத் தகட்டைக்கொண்ட வாகனத்தில் வந்தவர்களாலேயே தாக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். உலகத்தில் பாதுகாப்பு நிறைந்த எந்தவொரு பகுதியிலும் இவ்வாறான தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், குற்றச் செயல்கள் குறித்த சில தடயங்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

ஊடகவியலாளர்களைத் தாக்கும் வகையில், பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் வெளியிட்டிருந்த தகவல்கள் குறித்து, ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழு கவனம் செலுத்தியுள்ளதா எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், இந்த விடயம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்றார்.

http://isoorya.blogspot.com/

  • கருத்துக்கள உறவுகள்

கெகலிய சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை. நான் அறியவே கொழும்பில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகை ஒன்றைச் சேர்ந்த சிலர்... சில காலம் அங்கு ஊடவியலாளர்கள் என்று வேலை செய்துவிட்டு.. அசைலம் அடித்திருக்கிறார்கள். இவ்வாறான துஷ்பிரயோகங்களை அரசு அறிந்து வைத்துக் கொண்டு தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் மற்றும் அரசுக்கு ஆதரவில்லாத ஊடகங்களின் ஊடகவிலாளர்கள் மீது திட்டமிட்டு ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுகிறது. அதை மூடி மறைக்க நொண்டிச் சாட்டுக்களையும் முன் வைக்கிறது...! இதற்கு ஒரு வகையில் எம்மவரின் சுயநலமும் காரணம்..! :D

Edited by nedukkalapoovan

நெடுக்காலபோனவரே!

நீங்கள் புலத்திலா அல்லது தாய் நிலத்திலா இருக்கிறிங்கள்?... இலங்கையில உயிருடனும் நிம்மதியாகவும் வாழமுடியாமல் எம்மினத்தவர் படும் அவலம் சொல்லி முடியாதவை. எப்படியெண்டாலும் போய் சேரவேணுமெண்டு அவங்கள் நினைத்தால் அதில் என்ன பிழை? ஏன் அவங்கள் போறதுக்கு காரணாம் தெரியாதா?

இதுக்கு இதை விட நிறைய என்னால் சொல்லமுடியும் ஆனாலும் தவிர்க்க விரும்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோனவரே!

நீங்கள் புலத்திலா அல்லது தாய் நிலத்திலா இருக்கிறிங்கள்?... இலங்கையில உயிருடனும் நிம்மதியாகவும் வாழமுடியாமல் எம்மினத்தவர் படும் அவலம் சொல்லி முடியாதவை. எப்படியெண்டாலும் போய் சேரவேணுமெண்டு அவங்கள் நினைத்தால் அதில் என்ன பிழை? ஏன் அவங்கள் போறதுக்கு காரணாம் தெரியாதா?

இதுக்கு இதை விட நிறைய என்னால் சொல்லமுடியும் ஆனாலும் தவிர்க்க விரும்புகிறேன்.

எந்த அச்சுறுத்தலுக்கும் இலக்காகாதவர்கள்.. அசைலம் அடிப்பதற்கென்றே அத்துறையில் சில காலம் பணி செய்வது போல செய்துவிட்டு அசைலம் அடிக்க அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இவர்களின் இந்தச் செயற்பாடுகளே அர்ப்பணிப்புடன் தாயகத்தில் சேவை புரியும் ஊடகவியலாளர்களின் சேவையையும் ஆபத்துக்கு உள்ளாக்குவதோடு அரசு மலினத்தனமான பிரச்சாரம் செய்யவும் காரணமாகிறது என்பதையே நான் இங்கு குறிப்பிட விரும்பியுள்ளேன். அதனடிப்படையில் அமைந்ததே மேற்கண்ட பதிவு..! மற்றும்படி தியாக எண்ணத்தோடு சேவை புரியும் தாயக ஊடகவியலாளர்களை போராளிகளுக்கு நிகராக நான் எப்போதும் மதித்தே வருகின்றேன்..! :D

Edited by nedukkalapoovan

ஊண்மைதான் நான் உங்கள் இரண்டாவது இணைப்பை ஒத்துக்கொள்கிறேன்... சிலரின் சுயநலத்தால் சிவராம் போன்று வாழும் பத்திரிக்கையாளர்களுக்கு களங்கம்தான்.

இன்னமொன்று.. ஈழத்தமிழர் என்று எவனவனோ எல்லாம் அகதி என்று அலைகிறான்... ஏன் எனக்கு தெரிந்து எத்தனையோ சிங்களவங்கள் கூட...

அதனால் கூட எங்களின் துயரம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.