Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெரியுமா எனக்கும் வலிக்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரந்து விரிந்து கடல்,கரை கழுவிச் செல்லும் அலைகள்,வளைந்து நெளிந்த தென்னைகள்,இருந்த தென்னைகளுல் ஓங்கி நேராய் வழர்ந்த தென்னைகள் அதிகம்.கவிட்டு வைத்த படகுகள்,என்னதான் கடலோடு நீந்தி வந்தாலும் கவிட்ட பின்னே மணல் ஒட்டித்தான் கிடந்தது.தொடை தெரிய மடித்து கட்டிய சாரம்.தோளில் ஒரு தும்புத்துவாய்.ஏதொ மகாறாஜா தோரணையில் நடை.

அந்தோனிபிள்ளையார் படகுகளூடு மணலில் கால் புதைய புதைய நடக்கையில் சிப்பியும், ஊரியும் ஈரபாதத்தை உறுத்தினாலும், உரத்துப்போன பாதத்தோலை ஊடறுக்க முடியாது மண்ணுல் புதையுண்டு கொண்டிருந்தன.

சின்னையன் இப்பத்தான் கொண்டுவந்தது,ஒரு பொரியல் ஒரு குழம்பு வைச்சால் போதும்.2 முட்டையையும் அவிச்சு விடு.மணி ஆறாகுது,தம்பிமார் வரப்போறங்கள், மினக்கெடாமல் சமையலை முடி என்ன, நிக்கிலசை விட்டு சுந்தரதின்ர கடையில அரிசியை வாங்கு,மறக்காம கணக்கு கொப்பியை கொடுத்து விடு,பழைய கடனை வாறகிழமைக்குள்ள முடிக்கிறதாக சொல்ல சொல்லு..வாற பிள்ளைகள் வயிறாற சாப்பிட வேணும்....என்ன சொன்னது கேட்டதே ...?மனைவி இராசத்துக்கு கேட்டிருக்கும்..,பதிலேதும் சொல்லாமல் நிண்டவரை விளித்து கொண்டே மனுசன் கிணத்தடிக்கு போட்டார்.

அது ஒரு இறாத்தல் பாணளவுதான் இருக்கும்.பெரியம்மாவிட மகன் சவுதியால் கொண்டு வந்து தந்தது,காட்டி பெருமையடிப்பான் நிக்லசு.3 பற்றியும் புதுசென்றால் புது மனைவியாய் சிரிக்கும்.ஒரு திங்கள் கழிந்தால்,கந்தையம்மானின் மீன் லொறி தூரத்தில வரும் போது கேட்க்கும் சத்தமாய் இழுக்கும் அந்த றேடியோ. என்றாலும் அதுதான் முழுக்குடும்பத்தினதும் அரும்பெரும் சொத்து.

இரவு BBC க்கு மட்டும் அந்தோனியாரின் காதில் சினுங்கினாலும், நிக்கிலசு சாபிட்டால் சமையலறை திட்டு சுமக்கும்,விழையாடினால் முற்றத்து பூவரச மரம் சுமக்கும் அந்த றேடியோவை.தாயிடம் மன்றாடி மூன்று மாசமாக காசு சேர்த்து பற்றி வாங்கிறதுதான் நிக்கிலசு சாதனை.

டேய் தம்பி உதுல சுந்தரண்ண கடையில ரண்டு கிலோ அரிசி வாங்கி ஓடிவாட என்று மாத கணக்கு புத்தகத்தை நீட்டிய தாயிடம்,அந்த மனிசன் பழைய கடனை கேட்டு திட்டும். நீங்கள் போட்டு வாங்கோ.எனக்கேலது.வாறகிழமைக்க

ுள்ள கணக்கடைக்கலாம் என்று சொல்லப்பு,அச்சாபிள்ளையெல்லே.

..உனக்கு றேடியோவை திருத்தி தரோனும் அவ்வளவு தானே...அண்ணமார் இண்டைக்கு வரேக்க குடுத்து விடுவம், கட்டாயம் திருத்தித் தருவாங்கள்,இப்ப ஓடி போட்டு வாப்பு.. நேரம் போகுது....உண்மையாக திருத்தி தருவினமோ கேட்ட மகனுக்கு கண்களால் சத்தியம் செய்தாள் தாய்.

தம்பிமார் வடிவா சாப்பிடுங்கோ. குமணன் அந்த முட்டையையும் சேர்த்து சாப்பிடப்பு பார்த்துப் பார்த்து கவனித்தார் அந்தோனியார்.தம்பி அங்க எத்தனை பேர் நிக்கினமோ தெரியாது ,இதிலை ஒரு நாலு பாசல் தான் கிடக்கு, கொண்டு போய் குடுங்கோ என்ன...,இராசம் கொண்டுவந்து வைத்த பாசலை நன்றி பார்வையால் தழுவிவைத்தான் குமணன்.ஒரு கையில ரேடியோவை பிடிச்சுக் கொண்டு, மறுகையால் பூவரசம் மரத்தை அணத்தபடி பம்பரமாக சுற்றி கொண்டிருந்த நிக்கிலசு, எல்லோரும் சாபிட்டு வெளியே வரவும் தானும் வந்து சேர்ந்து கொண்டான்.

அப்ப இனி எப்ப இந்த பக்கமோ தெரியாது...இழுத்தார் அந்தோனியார்.. உங்கட சாப்பாட்டை ருசி பார்க்கவேனும் இங்கால வரத்தானே வேணும், என்று சிரித்துக்கொண்டே குமணன், என்னடா தம்பி படிகிறதில்லையே...ரேடியோவும் கையுமாக நிக்கிற...ஈன்னு பால்லு தெரிய சிரித்தாலும் ரேடியோவைப் பற்றி கதைக்கச் சொல்லி தாயிடம் கென்சின நிக்கிலசு கண்கள்.அதையெல்லாம் கவனிக்காதவளாக, சொல்லுங்கோ தம்பி நல்லாச் சொல்லுங்கோ படிக்கிறதும் இல்லை ஒரே விழையாட்டும் கூத்துந் தான் ...

தம்பி டேய் எப்பவும் விழையாடலாம் ,பாட்டு கேட்கலாம்..இப்ப ஒழுங்காப் படி, புத்தி சொன்னவனிடம், நான் றேடியோ கேட்கிறதில்லை, அது பழுதாப் போச்சு என்றான் நறுக்கென.என்ன பழுதாப் போச்சோ,சரி இங்க தா, நாங்கள் திருத்தி கொண்டுவந்து தாறம் என்ன,துப்பாக்கியின்பட்டியை தோளில் கொழுவிக்கொண்ட்டே மறு கையால் றேடியோவை வாங்கி கொண்டான் குமணன்.எப்ப வருவியல் வெடுக்கென கேட்டான் நிக்கிலசு தகப்பனின் கோபப் பார்வையையும் கவனிக்காதவனாக... நாளைண்டைக்கு இந்த பக்கம் வருவம் அப்ப கொண்டு வந்து தாறம்,தகரப்படலையை திறந்து கொண்டே பதில் சொன்னான் குமணன்.

மண் ஒழுங்கையின் இரு முனையையும் அவதானித்து விட்டு, அப்ப நாங்கள் வெளிகிடுறம்..மெத்த பெரும் உபகாரம் செயிறியல்.இதுக்கெல்லாம் நாங்கள் என்ன கைமாறு செய்யபோறமோ ... ....சரி புனிதன் இந்த பாசல் பையை முன்னுக்கு கொழுவிக்கொண்டு சைக்கிளை எடு. ஐயா நாங்கள் வாறம்,அம்ம அடுத்தமுறை வரேக்க எல்லாரும் ஒண்டா இருந்து தான் சாபிடோனும் என்ன ...தம்பி டேய் உன்ற றேடியோவோடைதான் முற்றத்தை மிதிப்போம் இல்லையெண்டால் படலையோட போடுவம்...என்று சிரித்து கொண்டே சைக்கிளை மிதித்தான் புனிதன்.சைக்கிள் மண் ஒழுங்கையில் தடம் பதித்து விரைந்தாலும் துப்பாக்கி முனைகள் மட்டும் மண் பார்த்து முதுகில் தொங்கிக் கொண்டிருந்தன.

அவங்கள் பாவம் ,தங்கட வேலைகளுக்குள்ளையும் இவன் கேட்டுப் போட்டானே என்று றேடியோவை வாங்கிக் கொண்டு போறாங்கள்.கண்டறியாத பிள்ளை வழர்த்து வைச்சிருக்கிற....சினந்து கொண்டே தோள் துண்டை உதறி கொடியில போட்டுவிட்டு திண்ணையிலை இருக்கவும், பட பட படவென வெடிச் சத்தங்கள் அதிரவும் சரியாக இருந்தது....

நிக்கிலசு ஓடிப் போய் தாயை கட்டிப் பிடித்துக் கொண்டான்.அந்தோனியார் முகத்தில் பல திகில் ரேகைகள்...,என்னப்பா...கேட்ட மனைவிக்கு பதில் சொல்லாமலே வேலியால் எட்டி பார்த்தார்.பக்கத்து வீட்டு பொன்னம்பலத்தார் அரக்க பரக்க ஓடி வருவது தெரிந்தது.என்னடாப்ப சத்தம்..கோவில் மதகடியில ஆமிக்காரங்கள் பதுங்கி கிடந்து ரண்டு இயக்கப் பொடியங்களை சுட்டுப் போட்டாங்களாம்...மூச்சிரைக்க சொல்லி கொண்டே மனுசன் ஓடிப்போனார்..

என்ர அந்தோனியாரே..... இறுகிப்போனார் அந்தோனியார் !! முற்றத்து மணல் ஒரு ஈழத் தாயின் கண்ணீர் துளிகளை குடித்துக் கொன்டிருந்தது.... தாயின் மடியில் தலை புதைத்து கதறிகொண்டிருந்தான் நிக்கிலசு... தனது றேடியோவுக்காக......!!!

Edited by sangiliyan

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலியன் உங்கள் ஆக்கம் படித்து எனக்கும் வலிக்கிறது தெரியுமா? மிகவும் நல்ல எழுத்தோட்டம்

பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சங்கிலியன் .........

எனக்கும் வலிக்கிறது...நல்ல கதை உண்மை சம்பவமா ?

சில. எழுத்து பிழைகள் . திருத்தி வாசித்து ,பயன் பெற்றேன் .

நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசித்து கருத்தெழுதிய காவலூர் கண்மணிக்கு மிகுந்த நன்றிகள்.

நிலாமதி

இன்னுந்தான் எழுத்துப் பிழைகளை தவிர்க்க முடியவில்லை .வேலைகளுக்கு நடுவே கிடைக்கும் ஓய்வு நேரத்துக்குள் எழுதிவிடுகிறேன்.அது மட்டுந்தான் பிழைகளுக்கு காரணம் என்றில்லை. மன்னிக்கவும்.கவனயீனத்தை குறைத்துக்கொள்கிறேன்.

சில பிழைகளை திருத்திவிட்டுள்ளேன்.

உங்கள் கருத்துக்கு நன்றி.

Edited by sangiliyan

ம்ம்..சங்கிலியன் அண்ணா கதையை வாசிக்க எனக்கும் வலிக்கிறது :lol: ..கதையை நகர்த்திய விதம் மிகவும் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் <_< ...எத்தனையோ வேலை பளுக்களின் மத்தியிலும் அந்த அண்ணாமார்கள் "றேடியோவை" கொண்டு சென்றது ம்ம்ம்... :lol:

உண்மை சம்பவமா அண்ணா..??..தொடர்ந்தும் உங்கள் கதைகளை வாசிக்கும் ஆவலில். :o

அப்ப நான் வரட்டா!!

எனக்கும் கூட வலிக்கின்றது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[ஃஉஒடெ நமெ='Jஅமுன' டடெ='Jஉல் 12 2008, 02:35 PM' பொச்ட்='427261']

[cஒலொர்="#0000FF"]ம்ம்..சங்கிலியன் அண்ணா கதையை வாசிக்க எனக்கும் வலிக்கிறது :) ..கதையை நகர்த்திய விதம் மிகவும் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் :நுப்: ...எத்தனையோ வேலை பளுக்களின் மத்தியிலும் அந்த அண்ணாமார்கள் "றேடியோவை" கொண்டு சென்றது ம்ம்ம்... :(

ஜமுனா வாழ்த்துகளுக்கு நன்றி.... ஆனால்....வேலை பளுக்களுக்கிடையில் றேடியோவை கொண்டு போகவைத்தது ....? என்று ஏதோ சொல்ல வந்து நிறுத்திப்போட்டீங்கள்...சொல்

Edited by sangiliyan

நெஞ்சத்தொட்டு சென்றது மட்டுமன்றி கண்களும் ஈரமாகின.

நல்லாக எழுதி இருக்கிறீங்க.

இறுதியில் நிக்லஸும் கதறினான்.... தனது ரேடியோவுக்காக என முடித்த விதம் அருமை,.

ஜமுனா வாழ்த்துகளுக்கு நன்றி.... ஆனால்....வேலை பளுக்களுக்கிடையில் றேடியோவை கொண்டு போகவைத்தது ....? என்று ஏதோ சொல்ல வந்து நிறுத்திப்போட்டீங்கள்...சொல்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துகளுக்கு நன்றி வெண்ணிலா...

ஓ அப்படியா ஜமுனா...?

ம்ம்...என்னால் முடிந்ததை எழுதுகிறேன்...அதை கதையென்று அங்கிகரித்தீர்களென்றால் சந்தோசப்படலாம்....இல்லை குறைகளை சுட்டிகாட்டினால் திருத்திகொண்டு, நானும் ஓர் கதாசிரியனாக வர முயற்செய்வேன்.வாசித்த,கருத்த

ுகள் பகிர்ந்த்த உறவுகள் அனைவருக்கும் நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.