Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தக்காளி சாதம்

Featured Replies

தக்காளி சாதம் செய்வது எப்படி ? எங்கே எங்கள் சமையல் தேவதை தூயா ?

தேவையானப் பொருட்கள்

பச்சரிசி/ பசுமதி அரிசி =2 சுண்டு

தக்காளி =5

ப.மிளகாய் =4

வெங்காயம் =3

செத்தல்தூள்: =1ஸ்பூன்

மஞ்சள்தூள் =1/2ஸ்பூன்

கடுகு - 1/4 தேக்கரண்டி

இஞ்சி- சின்னத்துண்டு

பூண்டு = 6 /7 பல்

தேங்காய்ப்பால் =1கப்

எண்ணை =3மேசைக்கரண்டி

கறுவா, , ஏலக்காய்

கருவேப்பிலை, கொத்தமல்லி =1 நெட்டு

உப்பு - 2தேக்கரண்டி

செய்முறை

நீளமாக வெங்காயத்தையும் தக்காளியையும் அரியவும் , இஞ்சியையும் பூண்டையும் சேர்த்து அரைத்து வைக்கவும். பின் அடுப்பில் தாச்சி சட்டியை வைத்து எண்ணெய் விட்டு வெங்காயம் கறிவேப்பிலை பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். வதங்கி வந்த பின் கறுவா, கடுகு, ஏலக்காய் இஞ்சி பூண்டு அரைத்தது தக்காளி எல்லாவற்றையும் போட்டு பச்சை மணம் போகுமட்டும் வதக்கவும். பின் அரிசியை கழுவி சேர்த்து வதக்கி,செத்தல் தூள், மஞ்சள்தூள் சேர்த்து தேங்காய்ப்பாலுடன் (தேங்காய்பால் பாவிக்காதவர்கள் பசுப்பாலும் சேர்க்கலாம். ஆனால் தேங்காய்ப்பாலின் சுவை வராது) தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கருவேப்பிலை, கொத்தமல்லி தூவி மிக மெல்லிய தீயில் அவியவிடவும் . அல்லது தாளித்த பின் எல்லாவற்றையும் ரைஸ் குக்கரில் போட்டும் அவிய விடலாம்.

Edited by Rasikai

  • தொடங்கியவர்

நன்றி ரசிகை

அரிசியை பிறகு போட்டால் அவியுமா ? நிறைய நேரம் பிடிக்காதா ? நான் நினைத்தேன் சோற்றை சமைத்துவிட்ட அதற்குள் போட்டு குழைப்பதாக. . .

எதுவாகினும் வாசிக்கும்போது சாப்பிட்ட உணர்வு. . . நன்றி நன்றி

நட்புடன் பரணீதரன்

நன்றி ரசிகை

அரிசியை பிறகு போட்டால் அவியுமா ? நிறைய நேரம் பிடிக்காதா ? நான் நினைத்தேன் சோற்றை சமைத்துவிட்ட அதற்குள் போட்டு குழைப்பதாக. . .

எதுவாகினும் வாசிக்கும்போது சாப்பிட்ட உணர்வு. . . நன்றி நன்றி

நட்புடன் பரணீதரன்

பச்சைஅரிசி பசுமதி அரிசி அவியக்கனநேரம் எடுக்காது. அதனால் பிரச்சினை இல்லை.

தாளிச்சுப் போட்டு ரைஸ் குக்கரில் எல்லாத்தையும் போட்டு அரிசியைப் போட்டும் அவிய விடலாம்.

இல்லை சோறை காச்சிப் போட்டும். எல்லாத்தையும் தாளிச்சுப் போட்டும் சாதத்தை அதனுடன் சேர்க்கலாம்.

அரிசியை பிறகு போட்டால் அவியுமா ? நிறைய நேரம் பிடிக்காதா ? நான் நினைத்தேன் சோற்றை சமைத்துவிட்ட அதற்குள் போட்டு குழைப்பதாக. . .

அப்படியும் ஒரு முறை இருக்கு...

தேவையான பொருட்கள்:

தக்காளி 2

வெங்காயம் 1

பச்சை மிளகாய் 3

பசுமதி அரிசி / பச்சரிசி 1கப்

மஞ்சள்தூள் 1/2தே.க

சீரகம் 1/2 தே.க

கடுகு 1/2 தே.க

வத்தல்மிளகாய் 2

உ.ப 1 தே.க

க.ப 1 தே.க

நெய் / பட்டர் 1 தே.க

உப்பு தேவைக்கு ஏற்ப

இனி செய்ய வேண்டியது:

1. தக்காளியை நீரில் அலசி சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். அதே போல வெங்கயத்தை சிறிதாக நறுக்கவும். பச்சை மிளகாயை நான்காக கீறி வெட்டவும்.

2. அடுப்பில் சட்டி வைத்து, அதில் எண்ணெயை சூடாக்கி அதில் உ.ப, க.ப, கடுகு, சீரகம், வத்தல்மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்

3. அடுத்து அதிலே வெங்காயம், மிளகாய், ம.தூள் & உப்பு சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும். வதங்கி வந்ததும் வெட்டி வைத்திருக்கும் தக்காளி துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கி, ஏற்கனவே செய்து வைத்துள்ள நெய் சாதத்தில் போட்டு நன்றாக கலக்கவும்.

* அரிசியை வேகவைத்து அதில் நெய்யை கலக்கவேண்டும். இதை முன்னரே செய்து வைத்துவிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை இரசிகை, மணி அண்ணைக்கும் தக்காளிச்சாதத்தினைச் சமைத்துக் காட்டினால் தான் நான் உந்தச் செய்முறையினை நம்புவேன்.

பிள்ளை இரசிகை, மணி அண்ணைக்கும் தக்காளிச்சாதத்தினைச் சமைத்துக் காட்டினால் தான் நான் உந்தச் செய்முறையினை நம்புவேன்.

நல்ல குறிப்புகள், ரசிகை மற்றும் தூயா. தூயாவின் முறை தான் நான் முன்பு கேள்விப்பட்டது. ரசிகையின் முறை கொஞ்சம் கஷ்டமாகத்தோன்றுகிறது, ஆனால் தேங்காய்ப்பால் எல்லாம் சேர்த்து செய்யும்போது சுவையாக இருக்கும் என்று நினைக்கிர்றேன்.

பரணீயின் பட்டம் தூயாவுக்கு பொருத்தம் தான். - "சமையல் தேவதை" - தூயா இதை குறைவாக எண்ண மாட்டா என்று நினைக்கிறேன்.

இனி ஜம்முபேபி வந்து தக்காளி சாதம் தனக்கு பிடிக்காது, அதுக்குள் ஆட்டிறைச்சியை போடுங்கோ என்று சொன்னாலும் சொல்லுவார்!

பிள்ளை இரசிகை, மணி அண்ணைக்கும் தக்காளிச்சாதத்தினைச் சமைத்துக் காட்டினால் தான் நான் உந்தச் செய்முறையினை நம்புவேன்.

பிள்ளை இரசிகை, மணி அண்ணைக்கும் தக்காளிச்சாதத்தினைச் சமைத்துக் காட்டினால் தான் நான் உந்தச் செய்முறையினை நம்புவேன்.

இதை இரண்டு தான் சொல்லியிருக்கிங்க? ;)

ஆணித்தரமாக சொல்லவா? :huh:

பரணீயின் பட்டம் தூயாவுக்கு பொருத்தம் தான். - "சமையல் தேவதை" - தூயா இதை குறைவாக எண்ண மாட்டா என்று நினைக்கிறேன்.

இனி ஜம்முபேபி வந்து தக்காளி சாதம் தனக்கு பிடிக்காது, அதுக்குள் ஆட்டிறைச்சியை போடுங்கோ என்று சொன்னாலும் சொல்லுவார்!

(அ) இதை எப்படி குறைவாக எடுப்பேன்...பெருமையாகவே உணர்கின்றேன் (ஏதோ சிலராச்சும் நான் நல்லா சமைக்கிறதா நம்பவச்சிட்டோம்ல ;)

(ஆ) யம்முவை பற்றி அப்படியே சொல்கின்றீர்களே :o :o

(அ) இதை எப்படி குறைவாக எடுப்பேன்...பெருமையாகவே உணர்கின்றேன் (ஏதோ சிலராச்சும் நான் நல்லா சமைக்கிறதா நம்பவச்சிட்டோம்ல ;)

சமையல் ஒருபக்கமிருக்க, புலத்தில் பிறந்து, தமிழ் கற்று வெளுத்துவாங்குவதற்கும் விருது கொடுக்கவேண்டும்!

  • தொடங்கியவர்

உண்மையிலேயே தூயா ரசிகை இருவருமே யாழ் இணையத்திற்கு மட்டுமல்ல எல்லோருக்கும் கிடைதத பொக்கிசங்கள். நான் நேற்று ஆசைப்பட்டு கேட்க உடனேயே பதில் வழங்கினார் ரசிகை. நான் செயது சாப்பிட்டும் விட்டேன். நண்பர்களிற்கு சொல்லி பெருமைப்பட்டு மகிழ்நதேன்.

வாழ்த்துக்கள் இன்னும் இன்னும் வளரவேண்டும் உங்கள் கலை. . .

குறிப்பு

நீங்கள் இருவருமாக இணைந்து ஒரு சமையல் கலை என்ற புத்தகம் வெளியிடலாமே பலரிற்கு உதவும் . குறிப்பாக என்னைப்போன்றவர்களிற்கு. . .

பிள்ளை இரசிகை, மணி அண்ணைக்கும் தக்காளிச்சாதத்தினைச் சமைத்துக் காட்டினால் தான் நான் உந்தச் செய்முறையினை நம்புவேன்.

கந்தப்பு ஆமா எப்ப நீங்கள் கனடா வாறனீங்கள் எண்டியள்??

கட்டாயம் உங்களைப்பார்க்க வரும்போது இதைச் செய்து கொண்டு வாறன். சரியோ?

உண்மையிலேயே தூயா ரசிகை இருவருமே யாழ் இணையத்திற்கு மட்டுமல்ல எல்லோருக்கும் கிடைதத பொக்கிசங்கள். நான் நேற்று ஆசைப்பட்டு கேட்க உடனேயே பதில் வழங்கினார் ரசிகை. நான் செயது சாப்பிட்டும் விட்டேன். நண்பர்களிற்கு சொல்லி பெருமைப்பட்டு மகிழ்நதேன்.

வாழ்த்துக்கள் இன்னும் இன்னும் வளரவேண்டும் உங்கள் கலை. . .

குறிப்பு

நீங்கள் இருவருமாக இணைந்து ஒரு சமையல் கலை என்ற புத்தகம் வெளியிடலாமே பலரிற்கு உதவும் . குறிப்பாக என்னைப்போன்றவர்களிற்கு. . .

ஆகா செய்து சாப்பிட்டீங்கள். எப்படி இருந்திச்சு.?

நானே இப்பதான் அப்படி இப்படி என்டு பழகிட்டுவாறன் புத்தகம் அடிக்கிறதா???? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு ஆமா எப்ப நீங்கள் கனடா வாறனீங்கள் எண்டியள்??

கட்டாயம் உங்களைப்பார்க்க வரும்போது இதைச் செய்து கொண்டு வாறன். சரியோ?

உங்கட சாப்பாட்டைச் சாப்பிட்டு ஏன் அவதிப்பட வேண்டும் என்று தான் சென்ற முறை(2006) கனடாவுக்கு வந்த போது உங்களைச் சந்திக்கவில்லை. மறுபடியுமா?

உங்கட சாப்பாட்டைச் சாப்பிட்டு ஏன் அவதிப்பட வேண்டும் என்று தான் சென்ற முறை(2006) கனடாவுக்கு வந்த போது உங்களைச் சந்திக்கவில்லை. மறுபடியுமா?

இல்லையே வேற ஏதோ காரணம் சொன்ன மாதிரி இருந்துச்சு. சரி சரி பச்சை தண்ணீர் கூடத்தர இல்லை.

பயப்படாமல் வாங்கோ :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.