Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கு நோக்கி திரும்பும் அரசின் கரிசனைகளும் மேற்குலகின் பிரிவினைகளும்--வேல்சிலிருந்து அருஷ்

Featured Replies

தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு கூட்டத்திற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் மூலம் வெளிப்படுத்தியிருந்த போதும் இலங்கை அரசாங்கம் அதன் படை நடவடிக்கைகளை தொடர்ந்தவாறு உள்ளது.

விடுதலைப்புலிகள் அறிவித்த போர் நிறுத்தம் கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமாகிய போதும் இலங்கை அரசாங்கம் மன்னார், மணலாறு, வன்னி களமுனைகளில் படை நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய நாட்களில் பாலமோட்டை மற்றும் மணலாறு களமுனைகளிலும், கடந்த புதன்கிழமை பாலமோட்டை களமுனையிலும் படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த படை நடவடிக்கைகளுக்கு எதிராக விடுதலைப்புலிகளும் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். வன்னிப்பகுதியில் படை நடவடிக்கைகள் தொடர்வதாகவும் விடுதலைப்புலிகளின் பதுங்குகுழிகளை தாம் கைப்பற்றிவருவதாகவும் அரசாங்கம் தொடர்ந்து தெரிவித்து வருகின்றது.

படைநடவடிக்கை மட்டுமல்லாது போர்நிறுத்த காலத்தில் வன்னிப்பகுதிக்கான தொலைத்தொடர்புகளும் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன், அதன் வெளியுலக தொடர்புகளை தடுக்கும் எதிராக தாக்குதல்களை அவர்கள் மேற்கொள்வார்கள் என்பதை யாரும் நிராகரித்து விடமுடியாது.

படைத்தரப்பு வடபோர்முனையில் நாகர்கோவில் முகமாலை கிளாலி அச்சில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் தொடர்ச்சியாக கடுமையான பீரங்கி மற்றும் பல்குழல் உந்துகணை செலுத்தி தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.

இதனிடையே இந்து சமுத்திர பிராந்தியத்தில் தனது ஆளுமையை தக்கவைப்பதற்கு இந்திய அரசு போர் கப்பல்கள் இரண்டை இலங்கையின் கடல்பகுதிக்கு அண்மையாக நகர்த்தியுள்ளது. எனினும் இந்திய அரசின் இந்த நடவடிக்கைகளால் தென்னிலங்கையில் அரசியல் நெருக்கடிகள் ஏற்படுவதை தடுக்கும் நோக்கத்துடன் இலங்கை அரசும் தனது கடற்படையின் கணிசமான தாக்குதல் கலங்களை கொழும்பை அண்டிய கடற்பகுதிக்கு நகர்த்தியுள்ளது.

இந்திய கடற்படையின் போர் கப்பல்களான ஐ.என்.எஸ். ரண்வீர், ஐ.என்.எஸ். மைசூர் என்பவை இலங்கை கடற்பிரதேசத்திற்கு அண்மையாக நங்கூரமிட்டுள்ள போதும், இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பில் காவலில் ஈடுபட்டு வருகின்றனர். 1987 ஆம் ஆண்டு இலங்கை அரசின் எதிர்ப்புக்களையும் மீறி, 6 அன்ரனோவ்32பி கனரக சரக்கு விமானங்கள் மற்றும் 4 மிராஜ்2000 தாக்குதல் விமானங்களின் மூலம் இலங்கை வான்பரப்பை தன்வசப்படுத்த இந்திய தரப்பு மேற்கொண்ட பூகோள அரசியல் தற்போது கடற்பரப்பில் தொடர்கின்றது. ஆனால் அதன் உண்மை நோக்கம் இலங்கை அரபைணியவைப்பதாகும் என்பதே அல்லாமல் தமிழ் மக்களுக்கு ஆதரவானது என கருதிவிட முடியாது.

இந்திய கடற்படை நகர்த்தியுள்ள ஐ.என்.எஸ். மைசூர் போர்க்கப்பல் டில்லிவகையை சேர்ந்த நாசகா? கப்பலாகும். கர்நாடக மாநிலத்தின் நகாரின் பெயரை கொண்ட இந்த கப்பல் 6,700 தொன் எடை கொண்டதுடன் 1999 ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்த

Edited by isoorya

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியின் மூலம் என்ன ஐசூரியா? இதன் நம்பக தன்மை என்ன? ஆளாளுக்கு செய்திகளை அடிபட்டு இணைப்பதன் நோக்கம் தான் என்ன ?

கிழக்கு நோக்கி திரும்பும் அரசின் கரிசனைகளும் மேற்குலகின் பிரிவினைகளும்--வேல்சிலிருந்து அருஷ்

தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு கூட்டத்திற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் மூலம் வெளிப்படுத்தியிருந்த போதும் இலங்கை அரசாங்கம் அதன் படை நடவடிக்கைகளை தொடர்ந்தவாறு உள்ளது.

விடுதலைப்புலிகள் அறிவித்த போர் நிறுத்தம் கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமாகிய போதும் இலங்கை அரசாங்கம் மன்னார், மணலாறு, வன்னி களமுனைகளில் படை நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய நாட்களில் பாலமோட்டை மற்றும் மணலாறு களமுனைகளிலும், கடந்த புதன்கிழமை பாலமோட்டை களமுனையிலும் படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த படை நடவடிக்கைகளுக்கு எதிராக விடுதலைப்புலிகளும் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். வன்னிப்பகுதியில் படை நடவடிக்கைகள் தொடர்வதாகவும் விடுதலைப்புலிகளின் பதுங்குகுழிகளை தாம் கைப்பற்றிவருவதாகவும் அரசாங்கம் தொடர்ந்து தெரிவித்து வருகின்றது.

படைநடவடிக்கை மட்டுமல்லாது போர்நிறுத்த காலத்தில் வன்னிப்பகுதிக்கான தொலைத்தொடர்புகளும் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன், அதன் வெளியுலக தொடர்புகளை தடுக்கும் எதிராக தாக்குதல்களை அவர்கள் மேற்கொள்வார்கள் என்பதை யாரும் நிராகரித்து விடமுடியாது.

படைத்தரப்பு வடபோர்முனையில் நாகர்கோவில் முகமாலை கிளாலி அச்சில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் தொடர்ச்சியாக கடுமையான பீரங்கி மற்றும் பல்குழல் உந்துகணை செலுத்தி தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.

இதனிடையே இந்து சமுத்திர பிராந்தியத்தில் தனது ஆளுமையை தக்கவைப்பதற்கு இந்திய அரசு போர் கப்பல்கள் இரண்டை இலங்கையின் கடல்பகுதிக்கு அண்மையாக நகர்த்தியுள்ளது. எனினும் இந்திய அரசின் இந்த நடவடிக்கைகளால் தென்னிலங்கையில் அரசியல் நெருக்கடிகள் ஏற்படுவதை தடுக்கும் நோக்கத்துடன் இலங்கை அரசும் தனது கடற்படையின் கணிசமான தாக்குதல் கலங்களை கொழும்பை அண்டிய கடற்பகுதிக்கு நகர்த்தியுள்ளது.

இந்திய கடற்படையின் போர் கப்பல்களான ஐ.என்.எஸ். ரண்வீர், ஐ.என்.எஸ். மைசூர் என்பவை இலங்கை கடற்பிரதேசத்திற்கு அண்மையாக நங்கூரமிட்டுள்ள போதும், இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பில் காவலில் ஈடுபட்டு வருகின்றனர். 1987 ஆம் ஆண்டு இலங்கை அரசின் எதிர்ப்புக்களையும் மீறி, 6 அன்ரனோவ்32பி கனரக சரக்கு விமானங்கள் மற்றும் 4 மிராஜ்2000 தாக்குதல் விமானங்களின் மூலம் இலங்கை வான்பரப்பை தன்வசப்படுத்த இந்திய தரப்பு மேற்கொண்ட பூகோள அரசியல் தற்போது கடற்பரப்பில் தொடர்கின்றது. ஆனால் அதன் உண்மை நோக்கம் இலங்கை அரபைணியவைப்பதாகும் என்பதே அல்லாமல் தமிழ் மக்களுக்கு ஆதரவானது என கருதிவிட முடியாது.

இந்திய கடற்படை நகர்த்தியுள்ள ஐ.என்.எஸ். மைசூர் போர்க்கப்பல் டில்லிவகையை சேர்ந்த நாசகா? கப்பலாகும். கர்நாடக மாநிலத்தின் நகாரின் பெயரை கொண்ட இந்த கப்பல் 6,700 தொன் எடை கொண்டதுடன் 1999 ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்த

  • கருத்துக்கள உறவுகள்

163 மீ நீளம் கொண்ட இந்த கப்பலில் 360 சிப்பந்திகள் மற்றும் படையினர் பணியாற்றுவதுண்டு. 32 கடல்மைல் வேகத்தில் பயணம் செய்யும் வல்லமை கொண்டதுடன், அணுசக்தி, இராசாயன, உயிரியல் ஆயுதங்களின் தாக்குதல் சூழல்நிலைகளையும் சமாளிக்கும் தன்மை கொண்டது

இவை அங்கையர்கண்ணி போன்றோரின் உயிர் ஆயுதங்களுக்கு முன்னால் என்றுமே நிகராகாது. அதற்காக எமது இன்னுயிர்களை அழிப்பதற்க்கும் எதிரானவன்.

  • தொடங்கியவர்

வீரகேசரியில் அருஷ் எழுதியது

  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே மூலம் வீரகேசரி என போட வேண்டியது தானே. ??? இதனால் உங்களின் வருமானம் எப்படி குறையுமென அன்பின் நண்பனாக கேட்கலாமா? (நீங்கள் ஏற்கனவே கூறிய தரவின் படி)

  • தொடங்கியவர்

இப்போது வருமானம் மிகவும் மிகவும் சொற்பமாகத்தான் உள்ளது கூகல் தமிழ் மொழிக்கு செய்யும் துரோகத்தால் தமிழ் தளங்களுக்கு பணம் வரும் விளம்பரங்களை இப்போது தருவது மிக மிக குறைவு நுணாவிலான் மன்னிக்கவும் மூலத்தை போடாத்தற்கு

  • கருத்துக்கள உறவுகள்

ஐசூரியா , உங்களது வியாபாரத்தை கெடுக்கும் நோக்கம் எனதல்ல என்பதை உறுதியாக கூறுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.