Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் கைதான இருவரும் புலிகளால் பொருட் கொள்வனவுக்காக அனுப்பப்பட்டார்களாம் - வாக்குமூலத்தில் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்னையில் அண்மையில் கைதான புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் யாழ்.இளைஞர்கள் இருவரும் அவ்வியக்கத்தினரால் பொருட்கொள்வனவுக்காக அனுப்பப்பட்டதாக வாக்குமூலத்தில் கூறியிருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அகதிகள் போன்று தமிழகம் வந்த இவர்கள் பொலிஸாரின் சந்தேகத்திற்குட்படாத வகையில் வீடொன்றை வாடகைக்கெடுத்து தங்குவதற்காக இலங்கை தகதிகள் முகாமைச் சேர்ந்த பெண்ணொருவரை மனைவி போல் பாசாங்கு செய்து தம்முடன் தங்க வைத்திருந்ததõகவும் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தற்போது பொலிஸார் குறித்த பெண்ணைத்தேடி வருகின்றனர். சென்னையில் கைதான புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் அமலன் பொலிஸாரிடம் கூறியதாக தெரிவிக்கப்படும் வாக்குமூலம் வருமாறு: நான் கடல் புலிகள் பிரிவில் பணியாற்றினேன். தற்போது போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் ஏராளமான பொருட்களுக்கு தேவையேற்பட்டுள்ளது. இந்நிலையில் நாம் ஆயுத தளபாடங்கள் மற்றும் வெடிபொருட்கள் போன்றவற்றை கொள்வனவு செய்வதற்காக தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளோம்.

கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதியன்று கள்ளத்தோணி மூலம் நான் இராமேஸ்வரத்தை வந்தடைந்தேன். பின்னர் அங்கிருந்து சென்னை கே.கே. நகரையடைந்தேன்.அகதிகள் முகாமில் தங்கியிருந்தேன். பின்னர் உமாரமணன் என்பவர் சென்னை வந்து இருவரும் தனியான வீடொன்றில் தங்கி இருப்போம் எனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து இருவரும் சென்னையில் வீடு தேடினோம். எங்கள் மீது சந்தேகப்பட்டு எவரும் வீடு வாடகைக்கு விட வில்லை. எனவே அகதிகள் முகாமில் வசிக்கும் இளம் பெண் ஒருவரை என்னுடைய மனைவி போல் நடிக்க வைத்து அந்த பெண்மணி கல்லூரியில் படிப்பதாக கூறி ஒருவாறாக திருமங்கலத்தில் வீடொன்று கிடைத்தது. இதனையடுத்து மனைவியாக நடித்த இளம் பெண்ணை அனுப்பி வைத்து விட்டோம்.

அதைத் தொடர்ந்து ஒருநாள் ஒருவர் இரசாயணப் பொருட்கள் சிலவற்றைக் கொண்டு வந்து கொடுத்தார். அவை மாதிரிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பரிசோதனை செய்து அவை தரமான பொருட்களா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் பெரிய அளவில் கொள்வனவு செய்து தருவதாகவும் கூறினார்கள். குறிப்பாக அமோனியம் நைட்ரேட்டை சென்னையில் உள்ள ஆய்வுகூடத்தில் சோதனை நடத்தி அதன் தரத்தை பரிசோதிக்கப் போவதாகவும் தெரிவித்தார்கள்.

பின்னர் எமது செலவுக்காக ரூ.1 லட்சம் பணம் கொடுக்கப்பட்டது. அந்த பணத்தில் வீட்டுமுற்பணமாக ரூ.20 ஆயிரம் மற்றும் எங்கள் செலவுகளுக்காக ரூ.23 ஆயிரம் இருந்தது. அதை பொலிஸார் பறிமுதல் செய்து விட்டனர்.6 மாதம் சென்னையில் தங்கி இருக்க எங்களுக்கு உத்தரவு இடப்பட்டது. அதன்பிறகு நாங்கள் இருவரும் இலங்கை செல்ல திட்டமிட்டிருந்தோம். தமிழக மக்கள் எங்கள் சகோதரர்கள். நாங்கள் சென்னையில் தங்கி இருக்கும்போது இங்குள்ள சகோதர மக்களுக்கு எந்தவித தீங்கும் செய்யக்கூடாது என்று உறுதிமொழி வாங்கிக் கொண்டுதான் எங்களை அனுப்பி வைத்தார்கள்.

எங்கள் நோக்கம் இங்கிருந்து பொருட்களை கொண்டு செல்வதுதான். வேறு எந்த தவறான நோக்கத்தோடும் நாங்கள் இங்கு வரவில்லை.இவ்வாறு அமலன் தெரிவித்தார்.தற்போது அமலனின் மனைவியாகவும், கல்லூரி மாணவியாகவும் நடித்த பெண் குறித்து பொலிஸார் விசாரணைகளைத் தொடர்ந்து வருகின்றனர். அகதிகள் போர்வையில் சென்னை நகருக்குள் மேலும் விடுதலைப்புலிகள் யாராவது நுழைந்து இருக்கிறார்களா? என்பது குறித்தும் கே.கே. நகர் அகதிகள் முகாமில் தங்கி இருப்பவர்களிடமும் தீவிர விசாரணை நடக்கிறது.

http://puspaviji.blogspot.com/2008/08/blog-post_991.html

புஸ்பாவிஜி,

ஐசூர்யாவின் அதே வேலையைத்தான் நீங்களும் செய்கிறீர்கள். எல்லோருக்கும் தனித்தனியாக ஒவ்வொரு முறையுமு் அறிவுறுத்திக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் இணைத்திருக்கும் செய்தி வீரகேசரி இணையத்தளத்திலிருந்து பெறப்பட்டது. அதைக் குறிப்பிடாது உங்களது செய்தி போல் உங்கள் வலைப்பதிவுக்கு இணைப்புக் கொடுத்துள்ளீர்கள். இதுவே உங்களுக்குமான கடைசி அறிவுறுத்தல். அத்துடன் ஒரு எச்சரிக்கையும் வழங்கப்படுகிறது. அடுத்த முறையும் இதுபோன்று இணைப்பின் களத்திலிருந்து முற்றாகத் தடைசெய்யப்படுவீர்கள் என்பதை அறியத்தருகிறோம். செய்திகளை இணைக்கும் போது வேறு ஒரு ஊடகத்தின் செய்தியனின் அந்த ஊடகத்தைக் குறிப்பிடுங்கள்.

மேலே நீங்கள் இணைத்த செய்தியின் மூலம்:

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=5664

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.