Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியில் மக்கள் பாரிய மனித அவலத்திற்கு உட்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி மடு உற்சவத்தை நடத்த முனைகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து, உண்பதற்கு உணவின்றி, குடிதண்ணீர், மருந்து வசதிகள் இன்றி, மர நிழல்களில் அவலப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்றுவதற்கு ஜனாதிபதிக்கு அக்கறையில்லை. அந்த மக்களைப்பற்றிச் சிறிதும் கூடக் கவலைப்படாமல் மடுமாதாத் திருவிழாவை நடத்துவதற்கும்,

அதில் தெற்கு மக்களைக் கலந்துகொள்ளச் செய்வதற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், ஜயலத் ஜயவர்த்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், ஜனநாயக நாட்டில் ஏன் இப்படியான பாரபட்சம் என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

“உண்மையாகவே மடுமாதா தேவஸ்தானத்தின் வருடாந்த உற்சவம் நடத்தப்படுமா? இல்லையா?, மடுமாதாத் திருச் சொரூபம் மீண்டும் தேவஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்படுமா? அது எக்காலத்தில்? என்பன போன்ற தீர்மானங் களை எடுக்க வேண்டியவர் மன்னார் மேற்றிராணியாரும், மடுமாதா தேவஸ்தானப் பொறுப்பாளருமான வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோஸப் ஆவார்” என்றும் ஜயலத் ஜயவர்த்தன சுட்டிக் காட்டியுள்ளார்.

வன்னி மாவட்டத்திற்குட்பட்ட மடுமாதா தேவஸ்தானத்தின் உற்சவம் தொடர்பான கேள்விகளும், குழப்பங்களும் ஒரு புறமிருக்கத் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற யுத்தத்தினால் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் அகதிகளாக அடிப்படை வசதிகளான உணவு, உறையுள், குடிதண்ணீர் எதுவுமின்றிக் காடுகளிலும், கற்குகைகளிலும் வசிக்கும் 60 ஆயிரம் அகதித் தமிழர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

ஆனால், அதைப்பற்றி அரசாங்கத் தரப்பில் யாரும் கண்டு கொள்வதாக இல்லை. இந்த அகதிகளில் சிறு குழந்தைகள், வயதானோர், கர்ப்பிணித் தாய்மார்கள் கூட உள்ளடங்குவர். இவர்கள் மரண தண்டனைக்குட்பட்டவர்களின் முகாம்களில் (DEATH CAMP) தள்ளப்படுள்ளனர் என்பது தான் கவலைக்குரிய விடயமாகும்.

வன்னியில் இவ்வாறு பல்வேறு கஷ்டங்களுக்கு உட்பட்டு அடிப்படை வசதிகள் கூட இல்லாது துன்புறும் மக்களின் அவல நிலைமை தெற்கில் பெரும்பான்மையான சிங்கள மக்களுக்குத் தெரிய நியாயமில்லை.

தெற்கில் சிங்கள மக்கள் மூன்று வேளையும் நிறைவாக உண்பதற்காகச் சிரமப்பட்டுத் தமது உறைவிடங்களில் வசிக்கின்றனர் என்றாலும், வடக்கில் ஒரு வேளைகூட உண்ணவோ, இருக்க உறையுளோ இன்றி அவதியுறும் அப்பாவி மக்களின் இந்த உண்மையான நிலைமை அரச ஊடகங்கள் மூலம் ஏன் மறைக்கப்பட்டு வருகின்றன?

இவ்வாறு ஒருபுறம் மக்கள் துன்புறும்போது மறுபுறம் மடு அன்னைக்காக நடத்தப்படும் உற்சவத்தையும், ஆராதனைகளையும் அன்னை விருப்போடு ஏற்றுக் கொள்வாரா? வன்னி மக்கள் எங்கோ ஒரு மூலையில் அகதிகளாக இருக்கத் தெற்கில் உள்ள மக்களை அழைத்துக் கொண்டு போய் மடுமாதாவிற்கு உற்சவம் நடத்துவது பற்றி இருமுறை சிந்தித்துப் பார்க்க வேண்டிய செயலாகும் என்றும் ஜயலத் ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

www.tamilwin.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.