Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒலிம்பிக்கில் இந்தியா முதலாவது தங்கத்தை வென்றது .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக்: தங்கம் வென்றார் அபினவ் பிந்த்ரா-வரலாறும் படைத்தார்

பெய்ஜிங்: ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குக் கிடைத்துள்ள ஒலிம்பிக் தங்கம் இது. மேலும் தனி நபர் ஒருவர் இந்தியாவுக்காக தங்கம் வென்றதும் இதுவே முதல் முறையாகும்.

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிய நாள் முதலே இந்தியாவுக்கு ஏற்றமும், இறக்கமும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் இன்றைய காலை இந்தியாவுக்கு தங்கமான காலையாக புலர்ந்துள்ளது. ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கத்தை தட்டி புதிய வரலாறு படைத்தார்.

தகுதிச் சுற்றில் 500 புள்ளிகள் வென்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த பிந்த்ரா, அதில் 700.5 புள்ளிகள் வென்று முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

சீனாவின் கியூனான் சூ வெள்ளி பதக்கமும், பின்லாந்தின் ஹென்றி ஹாக்கினன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

28 ஆண்டுகளுக்குப் பிறகு ...

இந்தியாவுக்கு ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் கிடைத்திருப்பது கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக இந்தியா, 1980ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் தங்கம் வென்றிருந்தது. அதன் பின்னர் இந்தியாவுக்கும், தங்கப் பதக்கத்திற்கும் வெகு தூரமாகி விட்டது.

லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதி தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் நழுவ விட்டிருந்தது.

கடந்த ஒலிம்பிக்கில் மயிரிழையில் ராஜ்யவர்த்தன் ரத்தோர் தவற விட்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். இவரும் துப்பாக்கி சுடுதல் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில், 28 ஆண்டு கால தங்கப் பதக்க வறட்சிக்கு இந்தியா தற்போது முற்றுப்புள்ளி வைத்து விட்டது.

முதல் வீரர்:

மேலும், ஒலிம்பிக் போட்டியில் தனி நபர் வீரர் யாரும் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றதில்லை. அந்த வகையில் பிந்த்ரா புதிய வரலாற்றையும் படைத்துள்ளார்.

ஜனாதிபதி பிரதமர், சோனியா வாழ்த்து:

தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தங்கப் பதக்கம் வென்றது குறித்து பிந்த்ரா கூறுகையில், இது எனக்குக் கிடைத்த வெற்றியல்ல, இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி என்று அடக்கத்துடன் குறிப்பிட்டார்.

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடி கூறுகையில், இந்திய வரலாற்றில் இது மிகவும் முக்கியமான நாள். பிந்த்ராவின் வெற்றியால் இந்தியாவுக்கே பெருமை கிடைத்து விட்டது என்றார்.

பிந்த்ரா சாதனை படைத்த அதே நேரத்தில் இந்தியாவின் இன்னொரு வீரரான ககன் நரங் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.

பிந்த்ரா பங்கேற்ற அதே பிரிவில்தான் நரங்கும் கலந்து கொண்டார். 600க்கு 595 என்ற புள்ளிகளையே அவர் பெற்றதால், இறுதிச் சுற்றுக்கு நரங் தகுதி பெற முடியாமல் போனது.

நன்றி தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில் இப்பதான் ஒரு தங்க பதக்கம் கிடைத்திருக்கு :lol: .

ஒ..அப்படியோ தமிழ் சிறி அண்ணா..ணா...பரவால்ல எங்கன்ட அரவிந்தன் அண்ணா வைக்கிற போட்டியில நான் இந்தியாவிற்கு..தங்கபதக்கம் கிடைக்கும் எண்டு போட்டனான்..காப்பாத்தி போட்டாங்க :) ...நானும் இப்படி எல்லாம் நடக்கும் எண்டு நினைக்கவே இல்ல.. :lol:

எல்லாரும் வாழ்த்து சொல்லீனம்..சரி நானும் சொல்லுறன்..அது தான் வாழ்த்தை..ஆனாலும் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு தங்க பதக்கம் கிடைத்திருக்குது எண்டா..நம்ம முடியல்ல..ஓரு வேளை உவை "என்கவுன்டர் ஸ்பேசலிஸ்டோ" யாருக்கு தெரியும்.. :lol:

வீரப்பனை சுட தான்..சரி அதை விடுவோம் :lol: ..வாழ்த்துக்கள்..(ஏன் நான் மிணகட்டு வாழ்த்து சொல்லுறன் எண்டு உங்களுக்கு விளங்கி இருக்கு தானே)..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில எது எப்ப நடக்கும் எண்டு யாராலையும் சொல்ல ஏலாது" :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒ..அப்படியோ தமிழ் சிறி அண்ணா..ணா...பரவால்ல எங்கன்ட அரவிந்தன் அண்ணா வைக்கிற போட்டியில நான் இந்தியாவிற்கு..தங்கபதக்கம் கிடைக்கும் எண்டு போட்டனான்..காப்பாத்தி போட்டாங்க :) ...நானும் இப்படி எல்லாம் நடக்கும் எண்டு நினைக்கவே இல்ல.. :lol:

எல்லாரும் வாழ்த்து சொல்லீனம்..சரி நானும் சொல்லுறன்..அது தான் வாழ்த்தை..ஆனாலும் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு தங்க பதக்கம் கிடைத்திருக்குது எண்டா..நம்ம முடியல்ல..ஓரு வேளை உவை "என்கவுன்டர் ஸ்பேசலிஸ்டோ" யாருக்கு தெரியும்.. :lol:

வீரப்பனை சுட தான்..சரி அதை விடுவோம் :lol: ..வாழ்த்துக்கள்..(ஏன் நான் மிணகட்டு வாழ்த்து சொல்லுறன் எண்டு உங்களுக்கு விளங்கி இருக்கு தானே)..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில எது எப்ப நடக்கும் எண்டு யாராலையும் சொல்ல ஏலாது" :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி ,

நான் அரவிந்தன் வைத்த யாழ் கள உறுப்பினர்களுக்கான போட்டியில் ,

இந்தியா தங்கப்பதக்கத்தை வெல்லாது ஆனால் வேறு பதக்கத்தை பெறும் என்று எழுதியிருந்தேன் .

உண்மையில் நானும் எதிர்பார்க்கவில்லை .

ஆயிரம் கோடிக்கு மேல் மக்கள் வாழும் நாட்டில் ஒரு தங்கமாவது இதுவரை கிடைத்தது மகிழ்ச்சியே . :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயிரம் கோடிக்கு மேல் மக்கள் வாழும் நாட்டில் ஒரு தங்கமாவது இதுவரை கிடைத்தது மகிழ்ச்சியே . :lol:

????????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் நூறு கோடி என்று தமிழில் வரும் .

யார்ல் களத்தில் இவ்வெற்றி செய்தியை பதித்த நண்பருக்கு நன்றிகள்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விஜேந்தர் குமார் அபார வெற்றி - இந்தியாவுக்கு 3வது பதக்கம் உறுதி!

புதன்கிழமை, ஆகஸ்ட் 20, 2008

பெய்ஜிங்: இந்தியாவின் விஜேந்தர் குமார் ஆடவர் 75 கிலோ எடைப் பிரிவு குத்துச் சண்டை காலிறுதிப் போட்டியில் அபார வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு 3வது பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தோற்றாலும் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்தியாவுக்கு இனிப்பும், கசப்பும் கலந்த நாள். பிற்பகலில் சுஷில்குமார் வெண்கலம் வென்று இந்தியர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.

இதையடுத்து மாலையில் நடந்த குத்துச் சண்டைப் போட்டியில் ஜிதேந்தர் குமார் தோல்வியுற்று ஏமாற்றத்தை அளித்தார்.

ஆடவர் மிடில் வெயிட் 51 கிலோ எடைப் பிரிவுகாலிறுதி போட்டியில் ரஷ்ய வீரர் ஜார்ஜி பாலஷினுடன் மோதினார் ஜிதேந்தர் குமார். இதில் அவர் 11-15 என்ற கணக்கில் தோல்வியுற்றார்.

இதையடுத்து 75 கிலோ எடைப் பிரிவில் காலிறுதியில் நுழைந்த விஜேந்தர் குமார் மீது பார்வை திரும்பியது. அந்த எதிர்பார்ப்பை அருமையாக நிறைவேற்றி இந்தியாவுக்கு 3வது பதக்கத்தை உறுதி செய்து விட்டார் விஜேந்தர்.

இன்று மாலை நடைபெற்ற விறுவிறுப்பான காலிறுதிப் போட்டியில் ஈகுவடார் வீரர் கார்லோஸ் காங்கோராவுடன் மோதினார் விஜேந்தர். பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் 9-4 என்ற கணக்கில் அபார வெற்றியைப் பெற்று சாதனை படைத்தார் விஜேந்தர்.

இந்த வெற்றியின் மூலம் விஜேந்தர் குமார் அரை இறுதிக்குள் நுழைந்துள்ளார். அரை இறுதியில் நுழைந்துள்ளதன் மூலம் இந்தியாவுக்கு நிச்சயம் ஒரு பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

அரை இறுதியில் வெற்றி பெற்றால் தங்கம் அல்லது வெள்ளிக்கு முயலலாம். தோற்றால் வெண்கலப் பதக்கம் உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் 3வது பதக்கம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. ஒலிம்பிக் வரலாற்றிலேயே இந்தியா முதல் முறையாக தனி நபர் பிரிவுகளில் 3 பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறை என்பதால் நாடே உற்சாகத்தில் மூழ்கியுள்ளது.

தங்கமே இலக்கு - விஜேந்தர்

தனது வெற்றி குறித்து போட்டியின் முடிவில் விஜேந்தர் குமார் கூறுகையில், அரை இறுதிக்குள் நுழைந்துள்ள மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு இந்தியரின் வெற்றியுமாகும் இது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இதை அர்ப்பணிக்கிறேன்.

எனது இலக்கு வெண்கலப் பதக்கமோ, வெள்ளியோ அல்ல. தங்கப் பதக்கத்தை வெல்லவே விரும்புகிறேன். நிச்சயம் வெல்வேன் என்ற நம்பிக்ைக உள்ளது என்றார் மகிழ்ச்சியுடன்.

இந்திய விளையாட்டுத்துறைக்கு இன்னாள் மிகப் பெரிய பொன்னாள் என்பதில் சந்தேகம் இல்லை.

http://thatstamil.oneindia.in/news/2008/08...-for-india.html

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் மல்யுத்தம்-வெண்கலம் வென்றார் சுஷில்குமார்

பெய்ஜிங்: பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுஷில் குமார் வெண்கலம் வென்றார். 56 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியா வென்றுள்ள முதல் பதக்கம் இது தான்.

இதற்கு முன் 1952ம் ஆண்டு பின்லாந்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் கசபா தாதாசாகிப் ஜாதவ் இந்தியாவுக்கு முதல் வெண்கல பதக்கத்தை வென்று தந்தார்.

இந் நிலையில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுஷில்குமாரும் கஜகஸ்தான் வீரர் லியோநிட் ஸ்பிரிட்டோநவ்வும் இன்று மோதினர். முதல் சுற்றில் 2௧ புள்ளிகள் வித்தியாசத்தில் சுஷில் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் 1-0 கணக்கில் வெற்றி பெற்றார். கடைசி சுற்றில் டை பிரேக்கரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் லியோநிட்டை வீழ்த்தி சுஷில் வெண்கலம் வென்றார்.

முதலில் 66 கிலோ எடை பிரிவில் முதல் போட்டியில் சுஷில்குமார் தோல்வியை தழுவினார். பின்னர் வைல் கார்டு என்ட்ரீ மூலம் வெண்கலத்திற்காக போட்டியிடும் சுற்றில் சுஷில் இடம்பெற்றார்.

இதையடுத்து நடந்த முதல் போட்டியில் அமெரிக்காவின் டக் சேவாப்புடன் மோதி 7௪ புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றார். இரண்டாவது போட்டியில் பெலாஸ் வீரர் பேட்ரிரவ் ஆல்பர்ட்டுடன் மோதினார். இதில் முதல் சுற்றில் டை பிரேக்கரில் 1-0 கணக்கில் மீண்டும் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் 0௪ புள்ளி கணக்கில் தோற்றார்.

பின்னர் மூன்றாவது சுற்றில் அசுரத்தனமான பலத்தை காட்டி 7-0 என்ற புள்ளி கணக்கில் வென்றார். இறுதியில் 8௪ என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்ற சுஷில், வெண்கல பதக்கத்தின் இறுதி போட்டியில் இடம் பெற்றார்.

இன்று வெண்கலத்திற்கான இறுதி போட்டியில் கஜகஸ்தான் வீரர் லியோநிட் ஸ்பிரிட்டோநவ்வை அவர் வெற்றி கொண்டார்.

56 ஆண்டுகளுக்கு பிறகு மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு சுஷில்குமார் மூலம் வெண்கலம் கிடைத்துள்ளது. இதற்கு முன் 1952ம் ஆண்டு பின்லாந்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் கசபா தாதாசாகிப் ஜாதவ் இந்தியாவுக்கு முதல் வெண்கல பதக்கத்தை வென்று தந்தார்.

இதுகுறித்து சுஷில்குமார் கூறுகையில், வெண்கலம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவுக்கு இன்னும் பல பதக்கங்களை பெற்றுத் தருவேன். போட்டியில் நான் எதிர்கொண்ட வீரர்கள் எல்லாருமே மிகவும் பலம் வாய்ந்தவர்கள் என்றார்.

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடி கூறுகையில், இந்த சாதனை மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. சுஷில் குமார் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தோம். எங்கள் நம்பிக்கைகயை அவர் நிரூபித்து விட்டார். அவரது இந்த சாதனை பெருமை அளிக்கிறது என்றார்.

ஜனாதிபதி-பிரதமர் வாழ்த்து:

பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ள சுஷில் குமாருக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேபோல பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித், சுஷில் குமாருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு ரூ. 50 லட்சம் பரிசுத் தொகையையும் அறிவித்துள்ளார்.

நன்றி தற்ஸ் தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.