Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் சித்திரவதை காரணமாக ரோ அமைப்பின் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி

Featured Replies

(தற்ஸ தமிழ் இணையம்)

டெல்லி: மூத்த அதிகாரியால் பாலியல் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்ட இந்தியாவின் அன்னிய உளவுப் பிரிவான 'ரோ'வின் பெண் அதிகாரி பிரதமர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் இணை செயலாளர் நிலையில் உள்ளவரான நிஷா பிரியா பாட்டியா (49)ரோ அமைப்பில் இயக்குனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியாவார்.

இப்போது குர்காவ்ன் நகரில் உள்ள ரோவின் பயிற்சி மையத்தில் இயக்குனராக உள்ளார். இவர் நேற்று பிற்பகலில் பிரதமர் அலுவலகத்துக்கு வந்தார். பிரதமர் அலுவலகத்தில் உள்ள மூத்த ரோ அதிகாரியை சந்திக்க முயன்றார். ஆனால் அதற்கு அனுமதி தரப்படவில்லை.

இதையடுத்து தனக்கு பாலியல் தொல்லை தந்த அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து கோஷமிட்டபடி திடீரென தான் கொண்டு வந்த விஷத்தைக் குடித்தார்.

இதையடுத்து அவரை பிரதமர் அலுவலக அதிகாரிகள் உடனடியாக ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவரது உடல் நிலை தேறி வருகிறது.

தன்னை மூத்த அதிகாரிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி வருவதாக பாட்டியா ஏற்கனவே ரோவை நிர்வகிக்கும் அமைச்சரவை செயலாளருக்கு புகார் கொடுத்துள்ளார். ஆனால் கண் துடைப்பு விசாரணைகளே நடந்தன. இதையடுத்து இந்த முடிவை எடுத்துள்ளார் பாட்டியா.

நேற்று பிரதமர் அலுவலகத்திலேயே இந்த சம்பவம் நடந்ததையடுத்து அமைச்சரவை செயலாளர் அலுவலகம் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பாட்டியா பாலியல் தொந்தரவு புகார் கொடுத்தது உண்மை தான் என்றும் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டது புகார்கள் நிரூபணமாகவில்லை இதனால் கடந்த மே மாதம் 19ம் திகதி விசாரணை முடிந்துவிட்டது. அதே நேரத்தில் தான் கொடுத்த புகாரை பாட்டியாவே வாபஸ் பெற்றுவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் விசாரணை நடத்திய அதிகாரிகள் கமிட்டி அரசிடம் தந்த விளக்கத்தில் நிஷா பிரியா பாட்டியா தடுமாற்றமான மனநிலையில் உள்ளார் என்றும் அவருக்கு மருத்துவ கவுன்சிலிங் தர வேண்டும் என்றும் கமிட்டி பரிந்துரைத்துள்ளதாக அமைச்சரரை செயலாளர் அலுவலகம் கூறியுள்ளது.

இது தவிர பாட்டியா மீது அதிகாரிகளுக்கு பணியாமல் நடப்பது அதிகாரிகளை திட்டி எஸ்எம்எஸ் அனுப்புவது உள்பட பல புகார்கள் உள்ளதாகவும் அமைச்சரவை செயலாளர் கூறியுள்ளார்.

ஆனால் தான் கூறிய பாலியல் சித்திரவதை புகார் விசாரணை ஒழுங்காக நடக்கவில்லை என்பதாலேயே இந்த முடிவுக்கு பாட்டியா வந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

அவருக்கு இணைச் செயலாளர் தரத்தில் உள்ள ஒரு அதிகாரி தொடர்ந்து பாலியில் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் இது குறித்து புகார் கொடுத்த பின் அவருக்கு தொல்லை மேலும் அதிகமாகியுள்ளது. விஷம் அருந்தும் முன் பிரதமர் அலுவலகத்தில் இருந்த நிருபர்களிடம் பாட்டியா கூறுகையி்ல்

என் மூத்த அதிகாரியான இணைச் செயலாளர் என்னை தன்னுடன் படுக்க அழைத்தார். ஹோட்டலுக்கு வந்தால் ரூ. 30000 தருகிறேன் என்றார். இது குறித்து எனது செக்ரடரியிடம் புகார் தந்தபோது அந்த புகாரி்ன் மீது அவர் இது போன்ற விஷயங்களில் என்னை தொல்லைப்படுத்த வேண்டாம் என்று குறிப்பு எழுதினார். அங்கு இது தான் நடக்கிறது.

மேலும் நான் பாலியில் தொல்லை புகார் தந்ததில் இருந்து கடந்த ஒரு வருடமாக எனக்கு தரப்பட்ட நெருக்கடிகள் Nடார்ச்சர்கள் சொல்லி மாளாது. என் தொலைபேசியை கடந்த 1 வருடமாக ஒட்டுக் கேட்டு வருகின்றனர் என்றார் நிஷா.

ரோ மீது புகார்கள் எழுவது புதிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இணைச் செயலாளர் அதிகாரியான ராமிந்தர் சிங் அமெரிக்காவுக்கு உளவு பார்த்து வந்தார். இந்திய ரகசியங்களுடன் அவர் அமெரிக்காவுக்கே தப்பியோடிவட்டார். அவரை இன்னும் பிடிக்க முடியவில்லை. அங்கு பெயரை மாற்றிக் கொண்டு குடும்பத்தோடு செட்டிலாகிவிட்டார் அமெரிக்க உளவுப் பிரிவின் துணையோடு.

ரோ அதிகாரியான முன்னாள் ராணுவ மேஜர் ஜெனரல் வி.கே.சிங் நிறுவனத்தின் நிதியை ஏராளமாக சுருட்டியதாக புகார் எழுந்தது.

மேலும் ரோவின் முன்னாள் அதிகாரி ஒருவர் எழுதியுள்ள புத்தகத்தில் எப்படி கணக்கில் வராத பணத்தை ரோஅதிகாரிகள் சுருட்டுகின்றனர் தங்கள் குழந்தைகளை ரா பணத்தில் வெளிநாடுகளில் படிக்க வைக்கின்றனர் எப்படி லாயக்கில்லாத பலர் ராவில் அதிகாரிகளாக உள்ளனர் என்பது குறித்தெல்லாம் புட்டுப் புட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது.

நிஷாவுக்கு ரேணுகா சௌத்ரி ஆதரவு:

இந் நிலையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணை அமைச்சர் ரேணுகா சௌத்ரி நிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:

நிஷாவின் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளி கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும்.

இதற்காக நிஷா நம்பிக்கை இழந்து தற்கொலை முயற்சியை மேற்கொண்டது வருத்தம் அளிக்கிறது. நிஷாவின் விவகாரத்தை தனிப்பட்ட முறையில் கையில் எடுத்து முடிந்ததை செய்வேன் என்றார்.

அவங்களுக்கே இப்படி என்றால்...எம் பெண்களை என்ன செய்திருப்பார்கள் என சொல்லியா தெரிய வேண்டும் உலகிற்கு...

நடு ரோட்டில் வைத்து சுட வேண்டும் இவர்களை..

அவங்களுக்கே இப்படி என்றால்...எம் பெண்களை என்ன செய்திருப்பார்கள் என சொல்லியா தெரிய வேண்டும் உலகிற்கு...

நடு ரோட்டில் வைத்து சுட வேண்டும் இவர்களை..

தங்களுக்கு பதவி உயர்வு தர மறுக்கும் என் போன்ற உயர் அதிகாரிகள் மீதும் பெண்கள் இப்படி குற்றம் சாற்ற முற்படுவது உண்டு...

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுக்கு பதவி உயர்வு தர மறுக்கும் என் போன்ற உயர் அதிகாரிகள் மீதும் பெண்கள் இப்படி குற்றம் சாற்ற முற்படுவது உண்டு...

அப்படியும் நடக்குமா பொன்னி?

அப்படியும் நடக்குமா பொன்னி?

கம்பனி வாழ்க்கையில் இது எல்லாம் சகஜம் அப்பா! வீட்டு பிரதமருக்கு விசயம் வாராமல் இருந்தால் சரிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

கம்பனி வாழ்க்கையில் இது எல்லாம் சகஜம் அப்பா! வீட்டு பிரதமருக்கு விசயம் வாராமல் இருந்தால் சரிதான்.

<_<:lol::D:huh::lol::o:o

  • தொடங்கியவர்

உயரப்பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகுமா? என்ற மேட்டுக்குடி பழமொழியை தங்கள் பின்னிihணப்பாக இணைத்திருக்கும் அன்பரே இதை திருப்பிச் சொல்லிப் பாருங்கள் பருந்து என்னதான் தாழப் பறந்தாலும் ஊர் குருவி ஆகமுடியாது.ஊர் குருவிகள் எப்பே;பாதும் மக்களோடு இருப்பவை மக்களுடைய அனுசரணையுடன் வாழ்பவை.பருந்துகள் மக்களுடைய உடமைகளான கோழிக்;குஞ்சு முதலானவற்றை தட்டிப்படித்துச் சென்று உயிர் வாழ்பவை.

கம்பனி வாழ்க்கையில் இது எல்லாம் சகஜம் அப்பா! வீட்டு பிரதமருக்கு விசயம் வாராமல் இருந்தால் சரிதான்.

:lol:<_<

உயரப்பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகுமா? என்ற மேட்டுக்குடி பழமொழியை தங்கள் பின்னிihணப்பாக இணைத்திருக்கும் அன்பரே இதை திருப்பிச் சொல்லிப் பாருங்கள் பருந்து என்னதான் தாழப் பறந்தாலும் ஊர் குருவி ஆகமுடியாது.ஊர் குருவிகள் எப்பே;பாதும் மக்களோடு இருப்பவை மக்களுடைய அனுசரணையுடன் வாழ்பவை.பருந்துகள் மக்களுடைய உடமைகளான கோழிக்;குஞ்சு முதலானவற்றை தட்டிப்படித்துச் சென்று உயிர் வாழ்பவை.

ஜயா, என்ன சொல்ல வாறியள், பாட்டி வடையை ஊர்க்குருவியாகிய காகம் கொண்டு சென்ற கதை கேள்வி பட்டியளோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.