Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர்க்கள வெற்றிகள் நிலையற்றவை என்பதை அரசு உணரும் காலம் தொலைவில் இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிடம் தோற்றுப்போகாத தமிழ்த் தேசியம் ஒருபோதும் சிங்கள மேலாதிக்கத்திடம் தோற்றுப்போகாது என்ற யதார்த்தத்தினை சிங்கள அரசுகள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மகிந்த அரசின் பக்கம் தமிழ் மக்கள் இல்லை. ஏனெனில் புலிகளின் போராட்டத்தின் ஆணிவேராக தமிழ் மக்களே இருக்கிறார்கள்.

இந்நிலையில் போர்க்கள வெற்றிகள் நிலையற்றவை என்பதனை மகிந்த அரசு உணர்ந்துகொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

வன்னியில் தொடரும் இராணுவத் தாக்குதல்களையடுத்து ஊடகங்களுக்கு விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் தீர்வு நோக்கி நகராமல் விடுதலைப்புலிகளுக்கெதிரான சமர்களில் இராணுவ வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருக்கிறோம் என்ற மமதை கொண்டு சிங்கள பேரினவாத அரசு செயற்படுகிறது.

இன முரண்பாட்டை தீர்ப்பதற்கு அரசியல் தீர்வு தவிர்ந்த ஏனைய சகல வழிமுறைகளிலும் மகிந்த அரசு ஆர்வம் காட்டிவருகின்றது.

இதற்கு மேலாக எமது மக்களின் அபிலாஷைகளை சிங்கள தரப்பு நிறைவேற்றும் என்ற எவ்வித நம்பிக்கையும் இல்லாத நிலையிலேயே தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மகிந்த அரசு நிச்சயமாக இந்தப் போரில் வெற்றிபெறப் போவதில்லை. விடுதலைப்புலிகளின் அரசியல் செல்வாக்கை வீழ்ச்சியடையச் செய்ய தமிழின விரோத ஒட்டுக்குழுக்களைக் கொண்டு விடுதலைப்புலிகளுக்கு மாற்றீடான ஒரு பாதையை தமிழ் மக்களுக்குக் காட்ட மகிந்த அரசு முயற்சிக்கின்றது.

தமிழ்த் தேசியத்திற்கு விரோதமான அந்தப் பாதையை ஒருபோதும் எமது மக்கள் ஏற்கப்போவதில்லை.

இலங்கை அரசு எந்தவொரு அதிகாரப் பகிர்வுமின்றி இராணுவ வெற்றி என்ற ஒரே நோக்கத்தினை கொண்டதாகவே செயற்படுகின்றது. மகிந்த அரசு நடத்திச் செல்லும் இந்த யுத்தம் முடிவுறாத யுத்தமாகவே தொடரப்போகிறது.

தமிழர்கள் தமது உரிமைக்காக நடத்துகின்ற இந்தப் போர் தமிழ் மக்களின் உரிமைகள், கௌரவம் எப்போது உறுதிப்படுத்தப்படுகின்றதோ அதற்கு அப்பால் நீண்டு செல்லாது என்பதனை மகிந்த அரசு விளங்கிக்கொள்ள வேண்டும்.

வன்னியில் தமிழர்களுக்கு மனிதப் பேரவலத்தை ஏற்படுத்தும் கொடூரப் போர் வெடித்துள்ளது. தமிழ் மக்களை புலிகளிடமிருந்து விடுவிப்பதாகக் கூறி தமிழர்களது பூர்வீக வாழ்விடங்களை அழித்து தமிழர் தாயகப் பிரதேசங்களை விழுங்கும் செயற்பாட்டையே அரசு தொடர்ந்தும் செய்துவருகின்றது.

வடக்கில் மகிந்த அரசு முன்னெடுத்துவரும் போர் நடவடிக்கைகளால் பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் அகதிகளாக இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.

வன்னி மக்களின் இயல்பான வாழ்வாதார நிலைமை மோசமடைந்து வருகின்றது. மக்கள் தமது இருப்பிடங்களையும் உடைமைகளையும் தொழில்வாய்ப்புகளையும் இழந்து விபரிக்க முடியாத பேரவலத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகி வாழ்வதற்கு முடியாத சூழலை வடக்கில் அரசு ஏற்படுத்தியுள்ளது.

ஒருவேளை உணவு கூட இல்லாத அளவிற்கு பட்டினி வாழ்வு தொடர்கின்றது. வன்னியில் மக்கள் குடியிருப்புகளை நோக்கி தினமும் பல்வேறு முனைகளில் இருந்து ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.

அப்பாவி உயிர்கள் பலியாகி வருவதுடன் சொல்லொணா துயரங்களுக்கு மக்கள் முகம் கொடுத்துவரும் நிலையில் இடம்பெயர்ந்துள்ள பல இலட்சக்கணக்கான மக்களுக்கு போதுமான மனிதாபிமான உதவிகள் இதுவரை கிடைக்கவில்லை.

மக்கள் தமது எதிர்காலம் குறித்து மிகுந்த துயரத்துடனும் அச்சத்துடனும் காணப்படுகின்றனர். வன்னி மக்களின் அல்லல் குறித்து சிந்திப்போர்இ கவலைப்படுவோர் எவருமில்லை.

அரசின் யுத்தத் தேவைக்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் இவ்வரசு மிகவும் ஆபத்தான நிலைக்குத் தள்ளியுள்ளது.

இவ்வாறான அவலங்களுக்குள் மக்களைத் தள்ளிவிட்டு அரசோ தமிழர் பிரதேசங்களை மீட்டுவிட்டதாக வெற்றி கொண்டாடி வருவது ஓர் அரசிற்குரிய நாகரிகமான செயற்பாடல்ல.

சர்வதேச நாடுகளதும் தொண்டு நிறுவனங்களதும் பணி இன்றைய சூழலில் அவசியம் என்பதனை அரசு விளங்கிக்கொள்ள வேண்டும்.

இலங்கைப் பிரச்சினையில் தலையிடும் சர்வதேச நாடுகளுக்கும் சர்வதேச தொண்டர் அமைப்புகளுக்கும் புலி முத்திரை குத்தப்படும் நிலை தொடர்வதால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைப்பதில் சிக்கல் நிலையையே அரசு தோற்றுவித்துள்ளது.

போரினால் பாதிப்புற்ற மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் சென்றடையவிடாமல் அரசு தடுப்பது அந்த மக்களை பொறுத்தவரையில் பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதற்கு ஒப்பானதாகும்.

மனித நேயத்தினையும் மனிதாபிமானத்தினையும் குழி தோண்டி புதைத்துவிட்டு போரியல் வெறியில் மூழ்கிக் கிடக்கும் கொழும்பின் காதில் மனிதாபிமான உதவிகள் பற்றிய கோரிக்கை ஏறுமா என்பது கேள்விக்குறிதான்.

மிகக் கொடூரமான இனச்சுத்திகரிப்பு போரை ஹெல உறுமயவினது பேரினவாத நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கச்சிதமாக முன்னெடுத்துச் செல்லும் இலங்கை அரசை தனிமைப்படுத்தி, தமிழ் மக்கள் மீதான இன அழிப்புப் போரை தடுத்து நிறுத்தி, தமிழ் மக்களின் உண்மையான அபிலாஷைகளை தீர்க்க இனியும் தாமதிக்காது சர்வதேச சமூகம் விரைந்து செயற்படவேண்டும்.

தமிழர்களை இராணுவ ரீதியாக ஒடுக்கி அவர்கள் மீது திணிக்கப்படும் எந்தவொரு தீர்வையும் தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனை மகிந்த அரசு புரிந்துகொள்ளத் தவறக்கூடாது.

http://swissmurasam.info/content/view/8789/26/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.