Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியப் படையை அனுப்பியதைக் கண்டித்து தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

Featured Replies

இந்தியப் படையை அனுப்பியதைக் கண்டித்து தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

[செவ்வாய்க்கிழமை, 16 செப்ரெம்பர் 2008, 08:42 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

சிறிலங்காவுக்கு ஆதரவாக இந்தியப் படை அனுப்பப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே இன்று திங்கட்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை வகித்தார்.

வவுனியாவில் விடுதலைப் புலிகள் நடத்திய வானூர்தி தாக்குதலின் போது சிறிலங்காப் படையினருக்கு உதவியாக செயற்பட்டு வந்த இந்தியப் படையினரின் பொறியியலாளர்கள் இருவர் படுகாயமடைந்த செய்தி அம்பலமானது.

இது தமிழ்நாட்டுத் தமிழர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசின் இந்த தமிழின விரோதப் போக்குக்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் இலங்கைத் தமிழர்கள் மீதான சிறிலங்காவின் இனப்படுகொலைக்கு இந்திய அரசாங்கம் அளித்து வரும் படை உதவிகளைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் பேசியதாவது:

விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, புலிகளின் வானூர்திகளோ 20 கிலோ குண்டுகளைத்தான் வீசும். அதுவும் ஆறு முறைதான் தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஆனால் எமது சிங்கள இராணுவமோ 6 ஆயிரம் முறைகளுக்கு மேல் ஆயிரக்கணக்கான கிலோ கொண்ட குண்டுகளை தமிழர்கள் மீது வீசித் தாக்கியிருக்கிறது என்று ஒப்புக் கொண்டுள்ளார். அப்படியானால் இலங்கைத் தீவில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் எத்துணை கொடூரமானது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அத்தகைய சிறிலங்கா படையினருக்கு இந்திய அரசாங்கம் உதவுவது வன்மையான கண்டனத்துக்குரியது என்றார்.

திரைப்பட இயக்குநர் சீமான் பேசியதாவது:

சிங்களப் படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொலை என்றுதான் இதுவரை செய்திகள் வெளியாகி உள்ளன.

ஒருபோதும் இந்திய மீனவன் சுட்டுக்கொலை என்று செய்தி வெளியானது இல்லை. அப்படியானால் தமிழ்நாடு என்பதும் தமிழ் மீனவன் என்பவனும் இந்தியா என்கிற நாட்டில் இல்லையா?

எதிரி நாடாக இருந்தாலும் இந்திய மீனவனை பாகிஸ்தான் சுட்டுக்கொன்றது இல்லையே?

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான சிறிலங்காவின் தாக்குதலை எப்போதாவது இந்தியா வாய்திறந்து கண்டித்தது உண்டா?

ஏன்? எதற்காக? இப்படி எல்லோரும் சிங்களவனுக்குப் போட்டிப் போட்டு ஆதரவு தருகிறார்கள்? என்றார்.

ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்த தொல். திருமாவளவன் பேசியதாவது:

தமிழர்கள் மீதான படுகொலையை நிகழ்த்துவதில் இந்தியாவும் சிங்களமும் கைகோர்த்து செயற்பட என்ன காரணம்?

இங்கே ஏழை மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபா கல்விக்கடன் வழங்காமல் அவர்களை பிச்சை எடுக்க வைக்கின்ற அரசாங்கம், பல ஆயிரம் கோடிக்கு தளபாட உதவி- கடனுதவி கொடுக்கிறீர்களே ஏன்?

தளவாடங்கல்- பொறியியலாளர்கள் கொடுக்க சட்டத்தில் இடமிருக்கா?

சிறிலங்காவுக்கான ஆயுத உதவிகள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் விவாதித்தீர்களா?

யார் உங்களுக்கு அனுமதி தந்தது?

குறைந்தபட்சம் தமிழ்நாட்டு முதல்வரிடமாவது பேசினீர்களா?

இந்தியாவின் வெளிவிவகார கொள்கை என்பது தற்சார்புக் கொள்கை அல்ல. அது அமெரிக்காவின் கொள்கைதான்.

சிங்களவருக்கான இந்தியாவின் உதவி சரியா தவறா என்பது குறித்து பொதுமக்களிடத்தில் வாக்கெடுப்பு நடத்துங்கள். உண்மை தெரியும்.

சிறிலங்காவுக்கு ஆயுத உதவி செய்வோருக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலிலே தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார் அவர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் பிரச்சினையில் எந்தவகையான நிலைபாட்டை மேற்கொள்வது குறித்து இந்திய அரசு, தமிழக மக்களிடையே பொது வாக்கெடுப்பினை நடத்தி அதன் படி செயல்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமா வலியுறுத்தியுள்ளார்.

ஈழத்தமிழர்களுக்கு எதிராக இனவெறி பிடித்த சிங்கள அரசு தொடுத்து வரும் போரில், அந்நாட்டு அரசிற்கு ஆதரவாக செயல்பட இந்திய ராணுவ வீரர்களை அனுப்பிய இந்திய அரசை கண்டித்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை சேப்பாக்கத்தில் அரசு விருந்தினர் மாளிகைக்கு எதிரே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தலைமை தாங்கினார். இரா. சனார்த்தனன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், திரைப்பட இயக்குநர் சீமான், தங்கர் பச்சான், திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான், தமிழின உணர்வாளர்களான தியாரூ, ஓவியர் வீர சந்தானம் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய தொல். திருமாவளவன்,"சிங்கள அரசிற்கு இந்திய அரசு ராணுவ உதவி அளித்து வருவது ஏன்? என்றும், இதற்கான அனுமதி நாடாளுமன்றத்தில் பெறபட்டுள்ளதா? என்றும் வினா எழுப்பினார். மேலும் இது குறித்து தமிழகத்தை சார்ந்த மக்களவை உறுப்பினர்களின் கருத்தறியப்பட்டுள்ளதா?, அல்லது தமிழக முதலமைச்சரிடம் ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பினார். கிட்டத்தட்ட நானூறு கோடி ரூபாய் மதிப்பில் சிங்கள பேரினவாத அரசிற்கு இந்தியா ஆயுத உதவி வழங்க வேண்டியதன் அவசியம் என்ன? என்பதை பிரதமர் நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்கவேண்டும் என்றார்.

தமிழினத்தை சார்ந்த மக்கள் தனியாக நாடு அடைந்திடக்கூடாது என்பது தான் இந்தியாவின் அரசியல் கொள்கை என்றும், இவ்விடயத்தில் அமெரிக்காவின் எண்ணப்படித் தான் இந்தியா செயல்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். இந்த விடயத்தில் இந்திய அரசின் அயலுறவுக் கொள்கையில் மாற்றம் தேவை என்பதை எங்கள் கட்சி வலியுறுத்துகிறது. இது குறித்து தமிழக மக்களிடையே பொரு வாக்கெடுப்பு ஒள்றினை இந்திய அரசு மேற்கொள்ளவேண்டும் என்றும், அந்த வாக்கெடுப்பின் படி தன்னுடைய செயல்பாட்டை இந்திய அரசு மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.

விழாவில் திரைப்பட இயக்குநர் சீமான், இன உணர்வாளர் தியாரூ, வ.உ. சி. பேரவையின் செயலர், தமிழர் தேசிய இயக்கப் போவையின் துணை தலைவர் சமரன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு மத்திய சென்னை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் வீரமுத்து ஏற்பாடு செய்திருந்தார். இந்த ஆர்பாட்டத்தின் போது இந்திய அரசிற்கு எதிராகவும், சிங்கள அரசிற்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன

-வீரகேசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.