Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் ஈழம் வந்தால் தான் தமிழ் வளரும் -மலேசியத் தலைவர் திருமாவளவன் பேச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

thirumavalavanmalaysiako7.jpg

அயலகத் தமிழர் கருத்தரங்கில் தொடக்க உரையாற்றிய மலேசிய நாட்டைச் சேர்ந்த திரு.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை:

மலேசியத் தமிழர்கள் இரண்டு வகையான தமிழர்கள். வெள்ளைக் காரர்களால் தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள் - இலங்கை யில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள் என அங்கு இருப்பதாகவும். இந்தியாவி லிருந்து வந்தவர்கள் கூலி வேலைக்காக வந்ததாகவும் இலங்கையில் இருந்து வந்தவர்கள் ஓரளவு ஆங்கில அறி வோடு வெள்ளையர்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு பெற்றவர்கள் என்றும் அறியலாம்.

பொறுப்பான சில பதவிகளில் இலங்கையில் இருந்து வந்தவர்கள் அமர்த்தப்பட்டார்கள். 1967ஆம் ஆண்டு மலேசிய நாடு விடுதலை பெற்றது. கடந்த ஆண்டு ஐம்பது ஆண்டு நிறைவு விழா நடந்த போது விடுதலை பற்றிய மறு ஆய்வுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. அவர்கள் தங்கள் நிலைமையைப் பற்றி மறு ஆய்வு செய்தார்கள். இந்தியாவில் உள்ள தமிழர்கள் எப்படி தங்களை இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களோ அப்படி மலேசியாவில் வாழ்கின்ற தமிழர்கள் தங்களை இந்தியர்கள் என்று தான் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய தேசியப் போராட்டத்தின் அடிப்படையிலே வாழும் அவர்களுக்கு தாத்தா என்றால் காந்தி - மாமா என்றால் நேரு - அம்மா என்றால் அன்னை இந்திராகாந்தி - இப்படித் தான் அங்கு வாழ்ந்த தமிழர்கள் இந்தியத் தலைவர் களைத் தங்கள் தலைவர்களாகக் கருதினார்கள். அதன் காரணமாகத் தமிழ்த் தேசிய சிந்தனை வலுவாக அங்கு இல்லாமல் போனது. 1950-60களில் தமிழ் நாட்டில் இருந்த பகுத்தறிவு பரப்புரை யால் திராவிட இயக்கத்தின் காரணமாகத் தமிழ் என்ற உணர்வு துளிர்விட்டது. மலேசியாவில் ஒரு மாற்றம் ஏற்பட தமிழ கம் தான் காரணமாக இருந்தது. தமிழக மண் தான் மாற்ற்ங்களுக்கு அடிப்படை யாக இருந்தது.

மலேசியாவில் முன்பு ஆயிரத் திற்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. அவைகள் இப்போது 523 பள்ளிகளாகக் குறைந்து விட்டன. அதற்குக் காரணம் மலேசிய நாட்டின் முன்னேற்றத்திற்காக மேம்பாட்டுத் திட் டங்களுக்காகத் தோட்டங்கள் அழிக்கப் பட்டபோது மக்கள் இடம் பெயர்ந்ததால் தோட்டங்கள் மட்டும் அழியவில்லை தமிழ்ப் பள்ளிகளும் அழிந்து போயின.

இங்கு பலர் சுட்டிக்காட்டியதைப் போல தமிழர்களுக்குத் தங்கள் பண் பாட்டை விட மொழியை விட அயலான் மொழி மற்றும் பண்பாட்டில் தான் பற்று இருக்கிறது. இன்றளவும் அவன் அடிமைத்தனமாகத் தான் இருக்கின்றான். மலேசியத் தமிழர் தமிழைப் புறக்கணித்து மலாய் மொழியிலும் ஆங்கிலத்திலும் தம் குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள். மலேசியாவில் தமிழர்கள் வீட்டில் பேசுகிற மொழியைப் பார்த்தால்... அம்மா என்று அழைக்காதே மம்மி என்று அழைக்க வேண்டும் என்று சொல்கிறார் கள். அப்பாவை டாடி என்று அழைக்கச் சொல்கிறார்கள். தங்கள் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்பவில்லை. மலாய் மொழிப் பள்ளிக்கு அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். மலாய்காரன் என் பள்ளிக்கு வந்து படி என்று சொல்லவே இல்லை. தமிழன் தன்னைத் தானே கெடுத்துக் கொள்கிற ஒரு நிலை வந்துள்ளது. ஆங்கில மோகத்தில் அங்குள்ள தமிழர்கள் சிக்கிக் கொண்டி ருக்கிறார்கள். தமிழகத்தில் இருந்து வரும் தமிழர்கள் அங்கு பல உணவகங் களில் வேலை செய்கிறார்கள். என்ன வேணும் சார் என்று தான் கேட்பார்கள். ஐயா என்ற வார்த்தை வராது. வென்னீர் கொண்டுவா என்றால் முழிப்பான். வென்னீர் என்றால் விளங்காது அவர் களுக்கு. ஹாட் வாட்டர் என்று சொன் னால் தான் விளங்கும். மலாய் மொழியில் சொன்னால் கூட இவர்களுக்கு விளங்கு கிறது. ஆனால் தமிழில் சொன்னால் தமிழனுக்கு விளங்கவில்லை. தமிழ் நாட்டிலிருந்து வேலைக்கு வரும் தமிழர்களின் நிலையும் இது தான்.

தமிழ்-தமிழன் என்கின்ற தமிழ்த் தேசிய சிந்தனை அயல்நாடுகளில் உண் டாக வேண்டும் என்றால் அடித்தளமாக இருக்க வேண்டியது தமிழக மண். தமிழ் வளரவேண்டும் என்றால் தமிழ்த் தேசியம் என்ற அடித்தளத்திலிருந்து தான் அது இயலும், விரைவில் மலர இருக்கின்ற தமிழ் ஈழம் வந்தால் தான் இவை எல்லாம் நடக்கும், அங்கு வர இருக்கின்ற விடுதலை தமிழீழத்திற்கு மட்டுமல்ல - இந்த உலகத்தில் வாழும் அத்தனை தமிழர்களுக்கும் அது ஒரு விடிவு எனக் கூறி அந்த விடியலை நோக்கிக் காத்துக் கொண்டிருப்பதாகவும் தமிழீழம் விரைவில் மலரும் எனவும் தெரிவித்து மலேசியாவில் நடைபெறும் போராட்டத்தையும் ஈழத்தில் நடைபெறும் போராட்டத்தையும் விளக்கினார். சலுகை களுக்காக மலேசியாவில் ஒன்றுகூடி போராடுகிறார்கள் என்றும், தமிழீழப் போராட்டம் ஒரு மண் மீட்புப் போராட் டம் - இனப் போராட்டம் எனவும் மலேசியாவில் நடைபெறும் ஆர்ப்பாட் டத்தையும் தமிழீழத்தில் நடைபெறும் போராட்டத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது எனவும் கேட்டுக் கோண்டார்.

-தென் செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரைக்கும் மலேசியத் தமிழர்கள், இந்தியத் தமிழர்களை விடத் தமிழ்ப் பற்றுக் கூடியவர்கள். ஆனால் அவர்களுக்கும் அநீதிகளுக்கு தமிழகத்தில் இருந்து போதுமான ஆதரவு கிடைப்பதுமில்லை. கண்டு கொள்ளப்படுவதுமில்லை. வெறுமனே களியாட்டங்களுக்காகத் தான் அவர்களைத் தமிழகத்தார் பாவித்துக் கொள்கின்றார்கள்.

இந்த நிலை மாறி உதவிட முன்வர வேண்டுகின்றேன்.

http://www.youtube.com/profile_videos?user=vedandha

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் மலேசியாவில் இருக்கிறவன் இப்படி சொல்கிறான் ஆனால் பக்கத்திலிருந்து எட்டி பார்க்கிறவன்???[தமிழ்நாட்டுக்காரன்] எல்லோரையும் வெறுத்து விட்டு கடைசியில் என்னத்தை புடுங்க போகிறானோ............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.